in

பஞ்சாயத்து (இறுதிப்பகுதி) நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

முன்கதைச் சுருக்கம்:

தேங்காய் மூட்டைக் கட்டி வைத்திருப்பதாக மாமா சொல்லியனுப்ப அதை எடுத்துக் கொண்டு வர கிளம்பினேன். வழியில் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு பெண் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்ததைப் பார்த்து ஓடிப்போய் அவளை இழுத்து, ஒரு அறை விட்டு அவளது வீட்டிற்கு கொண்டு பொய் விட கிளம்பினேன்.

வளது வீட்டுக்குப் போனதும், வாசலில் அவர்களை இறக்கி விட்டேன். கொஞ்சம் அதட்டலாய்,  ‘ யாரப்பா வீட்டுலே… ‘ என்று குரலும் கொடுத்தேன்.  ஒரு பெண் ஓடிவந்து எட்டிப் பார்த்தாள்.

‘ இவதாங்க அந்த சிறுக்கி… ‘ என்றாள் இவள்.

அந்தப் பெண், ‘ இந்தா சிறுக்கி கிருக்கினு பேசினே… அப்புறம் நடக்கறதே வேறே… ‘ என்று எகிறினாள். அதற்குள் ஒருவன் உள்ளேயிருந்து வேகமாய் ஓடிவந்தான்.  சாப்பிட்ட கையுடன் ஓடி வந்திருந்தான்.

அவசரமாய் ‘ அவுருதாங்க எங்க ஊட்டுக்காறாரு… ‘ என்றாள் நான் கூட்டி வந்தவள்.  மறுயோசனையில்லாமல் பட்டென அவனது கன்னத்தில் அறைந்தேன்.

‘ உனக்கு தாலி கட்டின பெண்டாட்டி இருக்கும்போது இன்னொருத்தி கேட்குதா… வேணுமானா முறைப்படி கழட்டிவிட்டு அப்புறமில்லே நீ  இதையெல்லாம் பண்ணனும்… ‘ என்று சத்தம் போட்டேன்.  அவன் இதை எதிர்பார்க்கவில்லை போல, மலங்க மலங்க விழித்தான்.  தனக்கே அறை விழுந்தது போல சட்டென ஒரு அடி பின்னால் நகர்ந்த அந்தப் பெண், தனது கன்னத்தையும்  தொட்டுப்பார்த்துக் கொண்டாள்.

அவன் குடித்திருகிறான் என்று புரிந்தது. கூடவே எனக்குள்ளுக்குள்ளும் ஒரு பயம், அறைவாங்கிய வேகத்தில் அவன் தன் கையை ஓங்கிவிட்டால் என்ன செய்வதென்று.

‘ போடுங்க, இன்னும் ரெண்டு… கேள்வி கேட்க ஆளில்லாமத்தான் ஆடுது இது, ரொம்ப … ‘ என்றாள் இவள்.

‘ ஒழுங்கா வச்சு குடும்பம் நடத்து… ‘  என்றதோடு, அந்தப் பொண்ணைக் காட்டி, ‘  இந்தப் பொண்ணை எங்கேயிருந்து கூட்டி வந்தியோ அங்கேயே கொண்டு போயி விட்டுடு… நான் நாளைக்கு வந்து பார்ப்பேன்… ‘ என்றுவிட்டு அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘ இந்தாம்மா உனக்கு அறிவு வேண்டாம்… தாலி கட்டினவளை ஓட்டிவிட்டு நீ குடும்பம் நடத்தலாம்னு ஓடி வந்தியா… ‘ என்றேன்.

‘ இல்லைங்க… இவருதான்… ‘ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் அவளை முறைக்க, அவனது பெண்டாட்டியைப் பார்த்து, ‘ இந்தாம்மா… நீ குழந்தைகளை இழுத்துக்கிட்டு வீட்டுக்குள்ளே போ… ஏதாவது கலாட்டா பண்ணினான்னா நேரா ஊருக்குள்ளே பெரியவங்க இருப்பாங்க… போயி பிராது குடு… பஞ்சாயத்துல பார்த்ததுக்குவாங்க… ‘ என்றுவிட்டு திரும்பினேன்.

பின்னர் நான் மாமாவின் வீட்டுக்கு போவதற்குள் அவர் வந்து வீட்டில் விஷயம் சொல்லியிருக்க, பூங்கொடி என்னை பெருமையுடன் பார்க்க… அவள் கொடுத்த சில்லென்ற மோரை வாங்கி குடித்துவிட்டு அங்கே கிடந்த தேங்காய் மூட்டையை எடுத்துக் கொண்டு நான் திரும்பியதெல்லாம் தனிக்கதை.

xxxxxx

ன்று காலையில் மறுபடியும் மாமா வீட்டுக்கு போக நேர்ந்தது.  இடையில் மூன்று நான்கு வாரங்கள் ஓடியிருக்கும். மெயின் ரோடிலிருந்து தரைப்பாலத்துக்குள் வண்டியை விடும் முன் எனது பார்வை தானாக தண்டவாளத்தை நோக்கி ஓடியது. அன்றைய தினத்தைப் போல, இப்போது அங்கே யாரும் இல்லை. பாலத்துக்குள் வண்டி இறங்கியதும் பார்த்தால், ஒருவன் கிழிந்த பனியனும் விலகிய வேஷ்டியுமாய் முனகிக்கொண்டு மல்லார்ந்து படுத்துக் கிடந்தான். பக்கத்தில் ஒரு சாராய பாட்டில் காலியாக கிடந்தது. ஒரு சொறிநாயும் படுத்துக் கிடந்தது. மொபெட்டை நிறுத்தி கொஞ்சம் உற்று பார்க்கவும்தான் தெரிந்தது அது நான் பஞ்சாயத்து பண்ணிவைத்த அந்த ஆள் என்று.  மொபெட் பாக்சிளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை அவன் முகத்தில் வேகமாய் தெளித்தேன். அலறிக்கொண்டு எழுந்தான் அவன்.

‘ ஏய்… நீ ராசப்பன்தானே… ஏண்டாப்பா இப்படி குடிச்சிப்பிட்டு பாலத்துக்கடியில் கிடக்கறே… உன் பொண்டாட்டியை வச்சு ஒழுங்கா குடும்பம் நடத்துறியா இல்லையா… ‘ என்றேன்.

திடீரென்று வாயைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டான் அவன்.

‘ அதை ஏங்கய்யா கேட்கறீங்க… என் பெண்டாட்டி என்னை வீட்டுக்குள்ளேயே விடமாட்டேங்கிறா… ராத்திரில்லாம் குளிர்ல வாசல்ல படுத்துக்கப் போட்டுடறா… ’ நா குழறியது அவனுக்கு. கூடவே அழுகையும் வேறு.

‘ ஆமா… அந்தப் பொண்ணை என்ன பண்ணே… ‘

‘ அது தானாவே போயிடுச்சுங்க… ‘

எனக்குப் புரிந்தது.  அவனது மனைவியின் கை இப்போது ஓங்கிவிட்டது என்று. அவனை சமாதனப்படுத்தி, மொபெட்டில் உட்கார சொல்லிவிட்டு ஒரு பயத்தில் ‘ கீழே விழுந்து வச்சிட மாட்டியே… ‘ என்றேன்.

‘ இல்லீங்கய்யா விழ மாட்டேங்கய்யா… ‘ என்றான் குழறலாய். இரண்டு பக்கமும் கால்களைப் போட்டிருந்தான். பின்பக்க கம்பியை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டிருந்தான்.

அவனை ஏற்றிக்கொண்டு இப்போது அடுத்த பஞ்சாயத்துக்காக போய்க் கொண்டிருக்கிறேன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 4) – கற்பக அருணா

    ஆமென இணங்கி (முடிவு) – ராஷி ராய் (தமிழில் பாண்டியன் இராமையா)