in ,

முள் பாதை (அத்தியாயம் 10) – பாலாஜி ராம்

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

செண்பகம் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் அரசு மருத்துவமனைக்கும் உள்ள தொலைவு ஒரு கிலோ மீட்டர். பத்து நிமிடத்திற்குள்ளேயே சென்பகம் ஆட்டோவில் ஏறி மருத்துவமனையை வந்தடைந்தாள். ஆட்டோவில் இருந்து இறங்கி அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்குள்ளே வேகமாக ஓடினாள். 

ஒரு வெள்ளை நிற உடையை அணிந்த செவிலியர் ஒருவர் எதிரே வந்தார். செவிலியரிடம் புவனேஷ் பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு வேகமாக  அவசர அறுவை சிகிச்சை மையத்திற்கு சென்றாள். 

அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு வெளியே புவனேஷின் அப்பா  அம்மா இருவரும் அழுது கொண்டிருக்கிறார்கள். செண்பகம் இதுவரை புவனேஷின் அப்பா, அம்மா இருவரையும் பார்த்தது கிடையாது. அவர்களும் செண்பகத்தை பார்த்தது கிடையாது. 

எனவே யாரை கேட்பது என்று தெரியாமல், செவிலியர் சொன்னது போல் அவசர அறுவை சிகிச்சை மையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தாள். உடனே கதவு திறந்தது உள்ளிருந்து   அறுவை சிகிச்சை மருத்துவர் கதிர்வாணன் வந்தார். 

“புவனேஷ் பேஷன்ட் கூட யார் வந்து இருக்கீங்க” என்று கேட்டார். 

“நாங்க தான் சார் வந்திருக்கோம் சார், அவன்  இப்ப எப்படி இருக்கான் சார்?”

“நீங்க அவனுக்கு என்ன வேணும்? “

“நான் அம்மா, இவர் அவன் அப்பா, பயப்படற போல ஏதும் இல்லல்ல சார்”

உங்க பையனுக்கு ஆக்சிடென்ட் நடக்கும் போது கார் கண்ணாடிகள் அவன்  உடம்பில் ஆழமாக குத்திருக்கு.  இப்ப நாங்க ஆப்ரேஷன் செய்து அந்த கண்ணாடி எல்லாம் எடுத்துட்டோம். இருந்தாலும், ஆப்ரேஷன் பண்ணும்பொழுது அவன் உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறிடுச்சு. அதனால, அவனுக்கு உடனே ரத்தம் ஏத்தனும். ஆப்ரேஷன் என்னவோ  நல்லபடியா முடிஞ்சிடுச்சு, இப்போ அவனை இங்கிருந்து 100வது நம்பர் வார்டுக்கு ஷிப் பண்றோம். அங்க ஷிப் பண்ணதும் உடனே ரத்தம் ஏத்தி ஆகணும். 

உங்க பையன் ரத்த குரூப்  O-. இப்போ அவனுக்கு அவசரமா ரத்தம் ஏத்தி ஆகணும். உங்களுக்கோ அல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது ஓ நெகட்டிவ் பிளட் குரூப் இருந்தாங்கனா சீக்கிரமா சொல்லுங்க. ஹாஸ்பிட்டலில் இருந்து ரத்தம் ரெடி பண்ணுவதற்க்கு  கொஞ்சம் லேட் ஆகும். உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தாங்கன்னா சீக்கிரமா சொல்லுங்க  என்று டாக்டர் சொன்னதும், 

“சார் என் பிளட் குரூப்  ஓ நெகட்டிவ். நான் ரத்தம் கொடுக்கலாமா சார்” என்று கேட்டாள் செண்பகம். 

நீங்க அவருக்கு என்ன வேணும்? 

“நான் அவருடைய சொந்தக்கார பொண்ணு  சார்” 

புவனேஷின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஒண்ணுமே புரியல. இருந்தாலும் தன் மகனுக்கு ஒரு நல்லது செய்கிறாள் என்பதால், அமைதியாக இருந்தார்கள். 

உனக்கு இரத்தசோகை, தைராய்டு, மஞ்சள் கமாலை ஏதாவது வியாதி இருக்கா? 

எனக்கு எந்த வியாதியும் இல்லை சார், நான் நல்லா தான்  இருக்கேன்.  

மருத்துவர் செண்பகத்திடம் அனைத்து தகவல்களும் விசாரித்து கொண்டு, ரத்தம் கொடுக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். 

புவனேஷை  வார்டுக்கு ஷிப் செய்ததும், செண்பகத்தின் ரத்தத்தை புவனேஷ் உடலுக்கு ஏற்றினர். 

இரண்டு மணி நேரம் கழிந்தது. 

அறுவை சிகிச்சை செய்து,  அவன் உடலுக்கு ரத்தம் ஏற்றி இரண்டு மணி நேரம் ஆனதால் அவனது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. ரத்தம் கொடுத்துவிட்டு வெளியே காத்திருந்த செம்பகம்மருத்துவரிடம்  புவனேஷை குறித்து கேட்டாள்.

நீங்க போய் புவனேஷை பார்க்கலாம், அவன் இப்போ நல்லா இருக்கான் என்று மருத்துவர் கூறினார். 

நூறாவது நம்பர் வார்டுக்குள் சென்றாள் செண்பகம். அங்கே புவனேஷ் படுத்து கொண்டிருக்கிறான். அவன் அருகே அவனது அப்பாவும், அம்மாவும் இருக்கின்றார்கள். 

செண்பகம் புவனேஷின் அருகே சென்று “சார் இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு” என்று கேட்டாள். 

நீ யாரோ எவரோ ? நல்ல நேரத்துல என் பிள்ளைக்கு ரத்த குடுத்தம்மா, ரொம்ப நன்றிம்மா என்றாள் புவனேஷின் அம்மா. 

“நீ எப்படி இங்க, இன்னைக்கு வேலைக்கு போகலையா” என்று செண்பகத்தை கேட்டான் புவனேஷ். 

“இந்த பொண்ணு யாருடா” என்றார் புவனேஷ் அப்பா. 

“இவள் தான் செண்பகம், இவளை தான் நான் காதலிக்கிறேன்”

உன்ன பத்தி இவன் எங்ககிட்ட சொல்லி இருக்கான், ரொம்ப தங்கமான பொண்ணு, நல்ல பொண்ணு என்று, நீ எனக்கு மருமகளா வந்ததுக்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என்றாள் புவனேஷின் அம்மா. 

“நாளைக்கு கட்டிக்க போறவங்க ஏதாவது பேசுவாங்க நமக்கு இங்க என்ன வேலை வா கிளம்பலாம்” என்று புவனேஷின் அப்பா அவரது மனைவியை அழைத்து கொண்டு வெளியே சென்றார்.  

“வண்டிய வேகமா ஓட்டிட்டு வராதீங்க, பொருமையா வாங்க என்ன அவசரம் உங்களுக்கு, அதுவும் எங்க வீட்டுக்கு வர ரோட்ல தான் ஆக்சிடென்ட் ஆச்சுன்னு சொன்னாங்க உங்களுக்கு அங்க என்ன வேலை”

“நீ தினமும் நடந்து தானே வர, இன்னிக்கு ஒரு நாளாவது உன்னை காருல ஏத்திட்டு வரலாம்னு வேகமா வந்தேன், என் விதி  இப்படி நடந்துருச்சு”

இதைக்கேட்டதும் செண்பகத்தின் கண்கள் கலங்குது.  

நீ எப்படி இங்க வந்த? மேனஜர் சார் எப்படி உனக்கு லீவு தந்தாரு?  என்று கேட்டான் புவனேஷ். 

நடந்த எல்லாவற்றையும் சொன்னாள் செண்பகம். 

“செண்பகம் உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல, எனக்காக இவ்வளவு செஞ்சிருக்க, அதுவும் எனக்கு ரத்தம் கொடுத்து இருக்க”

“உனக்காக என் உயிரையும் கொடுப்பேன் புவனேஷ்” 

“உன் உயிர் பிரிஞ்சா என் உயிரும் சேர்ந்து பிரிஞ்சிடும் செண்பகம்” 

எதுக்கு இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க,  உங்கள பாக்குறதுக்கு கம்பெனியில் இருந்து ஆளுங்க வருவாங்க,  அப்போ நான் இங்கு இருந்தால்,  ஏதாவது சொல்லுவாங்க. அதனால, நான் கிளம்புறேன்.  நீங்க உங்க உடம்பு பாத்துக்கோங்க, போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் செண்பகம். 

மருத்துவமனைலிருந்து தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு ஆட்டோவில் சென்று இறங்கி, அங்கிருந்து தன் வீட்டிற்கு நடந்து செல்கின்றாள். ஏனென்றால், தன் வீடு வரைக்கும் ஆட்டோவில் செல்வதற்கு  அவளிடம் பணம் இல்லை. 

செண்பகம் மதிய உணவு இன்னும் சாப்பிடவில்லை, புவனேஷுக்கு ரத்தம் கொடுத்திருக்கிறாள் அந்தக் களைப்பில் நடந்து செல்கிறாள். சிறிது தூரம் சென்றதும் அவள் கால்கள் தடுமாறுகிறது, தலை சுற்றுகிறது, பார்வையும் மங்குகிறது. உடனே அவள் மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள். 

இனி செண்பகத்திற்கு என்ன நடக்கிறது என்பதை நாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம். இனி வரும் அத்தியாயங்கள் எல்லாம் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் செல்லும். எனவே, தொடர்ந்து வாசியுங்கள். 

எனக்கு ஆதரவு கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அடுத்த பதிவில் சந்திக்கலாம் நன்றி! தொடரும்….. 

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீம் தரிகிட பாரதி மகள்கள் (அத்தியாயம் 2) – பாரதியின் பைத்தியம்

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 24) – முகில் தினகரன், கோவை