in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 4) – கவிஞர் இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3

ஜெயிப்பதில் மிக்க மகிழ்ச்சி 

“முதலில் உங்களுடைய பணத்தில் தான் நான் சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் என் காலில் நிற்க வேண்டுமெனில் தனியாக எந்த ஒரு முதலீடும் இல்லாமல் உழைத்து முன்னேறினால்தான் எனக்குப் பெருமை என்பதை உணர வைத்து விட்டீர்கள். ரொம்ப நன்றி.”

“ஆம் சொல்ல மறந்து விட்டேன். இது உன் விருப்பத்திற்காக நாம் அமைத்துக் கொண்ட களம். நீ வீட்டிற்கு எப்போதும் போல் வந்து போக வேண்டும். எனக்கு நீ தனியாக நின்று உன் காலில், பலத்தில் ஜெயிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதனால் உன்னைக் காணமல் இருப்பதில் பிரச்சினை இல்லை. எனக்கு உன் அம்மா மேல்தான் பயம். அவளை நீ எப்போதும் போல் சந்திக்க வேண்டும். இது என்னுடைய அன்புகட்டளை என்று கூட எடுத்து கொள்ளலாம்.”

“இனி நீங்கள் கட்டளை போட்டாலும் சரி. கட்டிப்போட்டாலும் சரி. இந்த அரசு தனி மனிதன். என் அம்மாவிற்காகவோ, நான் என் கொள்கைகளை விட்டுக் கொடுக்கத் தயாராய் இல்லை. முடிந்தால் நான் இருக்கும் இடத்திற்கு வந்து என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று வேகமாக எளியே கிளம்பினான்.

“என்னங்க… அவன் பாட்டிற்கு கிளம்புகிறான். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.” என்றாள் ராணி அழுகையோடு.

 ”நீலா என்னதான் சொல்லிறாய்?” பெப்சியை உறிந்தபடி கேட்டான் அரசு.

“கொஞ்சம் யோசித்து பாருங்கள் அரசு. ஒரு கி.மி. தூரம் எங்கேயாவது நடந்து போயிருப்பீர்களா? அல்லது எப்போதும் பையில் குறைந்தது பத்தாயிரம் ரூபாயும், கிரெடிட் கார்டும் இல்லாமல் எளியே வந்திருப்பீர்களா?” ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே கேட்டாள் நீலாம்பரி.

”அதற்காக எப்போதும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? சொந்தக் காலில் நின்று ஜெயித்து வர முடியாதா?” அயர்ந்தவாறு கேட்டான் தமிழரசு.

”உங்கள் சுயமரியாதை, தன்மானம் எல்லாவற்றையும் ஒத்துக் கொள்கிறேன். அவைகளெல்லாம் கண்டிப்பாக தேவை. ஆனால் உங்கள் தந்தையின் இவ்வளவு பெரிய வியாபார சாம்ராஜ்யத்திலே கலந்து இன்னும் அதை விருத்தியடைய செய்வதை விட்டு விட்டு சொந்தக் காலில் நிற்கப் போகிறேன்… எனக்கு ஒரு சதவீதம் கூட சம்மதமில்லை. அப்படியே நீங்கள் ஜெயித்தாலும் இந்த இளமையும் நாட்களையும்  தொலைத்து விட்டு பிறகு கண்டிப்பாக அய்யோ இழந்து விட்டோமோ என்று வருத்தப்பட்டுக் கொண்டு தேடப் போகிறீர்கள்.”

“நிலா எதையாவது பெறுவதற்கு எதையாவது இழந்துதான் ஆகவேண்டும். அது கூட தெரியாமலா நான் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பேன்.”

“உண்மையிலே நீங்கள் பிடிவாதமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு போன் பண்ண கையில் பணமில்லாமல் என் வீடுவரை நடந்து வந்திருக்கிறீர்கள். எப்போதாவது இது மாதிரி நடந்திருக்கிறதா?”

“இதே மாதிரி எத்தனை முறை ஐஸ்கிரீம் பாருக்கு வந்திருக்கிறோம். எப்போதாவது என் பர்சை எடுக்க அனுமதித்திருபீர்களா?  இப்போது என் கையை எதிர்பார்த்துக் காவல் நிற்கிறீர்கள். இது முடியாத விஷயம். கொஞ்சம் யோசித்து பாருங்கள். இன்னும் இரண்டு வேளை உணவு யார் தருவார்கள். நான் பணம் தந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள உங்கள் தன்மானம் ஏற்றுக் கொள்ளுமா? இனி நீங்கள் வேலை தேடி சம்பளம் வாங்கி ..”  என்று நீலாம்பரி முடிப்பதற்குள்

“நீலா நான் வேலைக்குப் போவதாக எந்த ஐடியாவும் கிடையாது.” என்றான்.

“அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?”

“ஏதாவது பிஸினஸ் பண்ண வேண்டும். என்ன என்பதில்தான் இன்னும் ஆரம்பப் பிரச்சினையே. ஸ்டார்டிங் டிரபிள் என்று ஆங்கிலத்தில் சொல்ற மாதிரி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“மருந்து ஏற்றுமதியில் அறுபது சதவீதம் லாபம் வருகிறது என்றான் விக்கி. பிளைவுட் வியாபாரத்தில் வெகுவான வருமானம் என்றான் சுந்தர். மனோவிடமும் இன்னும் பேச வேண்டியதிருக்கிறது. எப்படியாவது ஒரு வியாபாரத்தை தொடங்க ஆரம்பித்து விட்டால் திரும்ப அடுத்து அடுத்து என கிளைகளை பரவ விடலாம்” என்று அரசு முடிப்பதற்குள் வேகமாக விழுந்து விழுந்து சிரித்தாள் நீலாம்பரி.

கொஞ்சம் கோபம் தலைக்கேற “ஏன் சிரிக்கிறாய்?” என்றான் தமிழரசு.

“இவ்வளவு பெரிய வியாபாரத்திற்கு யார் மூலதனமிடப் போகிறார்கள்.”

“இதற்காகவா சிரித்தாய்,  என் நண்பர்கள். இதில் என்ன சந்தேகமிருக்கிறது?”

“உங்கள் நண்பர்கள் எல்லோரும் அவர்களுடைய தந்தையை நாடித்தான் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.”

“அதில் தப்பில்லையே நீலாம்பரி.”

“தவறு என்று சொல்லவில்லையே. அவர்கள் உடனடியாக உங்கள் தந்தையைத் தொடர்பு  கொண்டு  தமிழரசுக்கு  நாங்கள் உதவலாமா?” என்று கேட்பார்கள்.

“ஓ! அப்படிப் போகிறதோ கதை?….”.

“கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தமிழரசு, இதெல்லாம் தேவை இல்லாத விசயங்கள். ஒழுங்காக வீட்டுக்குப் போய் அப்பாவின் வியாபாரத்தைக் கவனியுங்கள். நாம் ஏற்கனவே பேசியபடி என் அக்காவின் திருமணம் அடுத்த நவம்பரில் முடிந்து விடும். இப்போதே எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்”

“நம் காதல் யாருக்கும் தெரியாதா?”

“அக்காவிற்கு தெரியும். அவள் என்னை விட பயந்தாங்கொள்ளி. அம்மாவிடம் அரசல் புரசலாக சொல்லி விட்டிருக்கிறேன். அடிக்கடி திட்டிக் கொண்டே யாரடி அந்தக் கடன்காரன் என்று உங்களையே திட்டிக்கொண்டு சீக்கிரமே எவனாவது நல்லவனை பார்த்து கட்டி வைக்க வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருப்பாள்.”

 “அப்படீன்னா நான் நல்லவனில்லையா?”

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வானமடி நீ எனக்கு ❤ (இறுதி அத்தியாயம்) – ராஜேஸ்வரி

    மனமிருந்தால் மார்க்கம் உண்டு (சிறுகதை) – மைதிலி ராமையா