in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 24) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15   பகுதி 16   பகுதி 17   பகுதி 18   பகுதி 19   பகுதி 20   பகுதி 21   பகுதி 22   பகுதி 23

அலைபேசியை எடுத்து பேசிக்கொண்டிருந்த போது,“உள்ளே வரலாமா?” என்ற அழகான தமிழ்க்குரலைக் கேட்டு நிமிர்ந்த போது கேபின் வாசலில் அனாமிகா நின்று கொண்டிருந்தாள்.

“வா. வா… பார்த்து எவ்வளவு நாளாயிற்று. ஆம் எங்கிருந்து இவ்வளவு அழகாக தமிழ்ப்பேசக் கற்றுக் கொண்டாய்.” மராத்தியில் கேட்டான் அரசு.

“சும்மா தமிழிலேயே பேசுங்கள். உங்களை விட எனக்கு நன்றாக தமிழ் தெரியும். ஆமாம் சிங்கப்பூர் போயிருந்தீர்களாமே.”?

“ஆமாம். இரண்டு எக்ஸ்போர்ட் ஆர்டர்கள் கன்ஃபர்ம் பண்ண வேண்டியதிருந்தது. அத்துடன் ஒஸாகாவில் வேறு ஒரு செமினார் இருந்தது. அதையும் இரண்டு மூன்று கிளையண்ட்ஸ் பார்த்து விட்டு நேற்றுதான் வந்தேன்.”

“ஏயப்பா, ஜப்பனெல்லாம் போகிறீர்கள். ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?”

“சொன்னால் கூட வந்திருப்பாயாக்கும்.”

“கூட வா என்று சொல்லியிருந்தால் உங்களோடு நரகத்திற்கு கூட வரவே நான் தயார் அரசு.”

அவள் சொன்ன பதிலில் தாக்குண்டவன் போல அவளை ஒரு நிமிடம் மௌனமாக பார்த்தான். தலையை இடதும் வலதுமாக அசைத்துக் கொண்டே “அனாமிகா வீண் கோட்டைகள் கட்டுகிறாய் என்று நினைக்கிறேன்?”

“எது வீண் கற்பனைக் கோட்டைகள் என்று நினைக்கிறீர்கள்?”

“நீ இவ்வளவு விரைவாக தமிழ்ப்படித்து.. என்னை இவ்வளவு எளிதாக உன் மனதில் வரித்துக் கொண்டது… ஒருவேளை நான் உன் மனதில் எனக்குத் தெரியாமால் ஏதாவது ஆசைகளை வளர்த்துக் கொள்ள அனுமதித்து விட்டேனோ?”

‘’அரசு உங்களை முதலில் பார்த்த உடனே என் வாழ்க்கைத் துணைவர் இவர்தான் என்று மனது சொல்லி விட்டது. அப்புறம் தான் மொழி, மதம், ஜாதி, பணம் எல்லாம் புரட்டச் சொன்னது.”

“ஒன்று மட்டும் நம்பினால் நம்புங்கள். ஒன்றுமில்லாத அநாதைப் பையனாக நீங்கள் இருந்திருந்தால் கூட கண்டிப்பாக என் வாழ்வின் எல்லாமே நீங்களாகத் தானிருப்பீர்கள்.”

“பாரு, அனாமிகா. நீ வளர வேண்டியவள். வாழ்க்கையின் ஒவ்வொரு திசைகளையும் ருசிக்க வேண்டியவள். நான் என் சுய முயற்சிக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன். என்காலில் நின்று கொடி கட்ட வேண்டும் என்ற ஒரே ஆதங்கத்திலே கட்டுத்தறிக் காளையாக அலைந்து கொண்டிருக்கிறேன்.”

“இந்தச் சமயத்தில் என் வாழ்க்கையில் பெண் சகவாசம் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம்.”

“பார் காதல் கத்தரிக்காயெல்லம் தூக்கி வைத்து விட்டு என் காலில் நின்று கொடிகட்டிப் பறக்க முயன்று கொண்டிருக்கிற இந்த இடைஞ்சல் எல்லாம் எனக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.”

“சரி காத்திருக்கிறேன்.”

“எது வரை?”

“சாகும் வரை… நரை விழுந்து கண்ணில் திரை விழுந்து ஞாபகம் என் மூளையில் உழலும் வரைக் காத்திருக்கத் தயார் அரசு.”

“நீயும் மனதை…என் இதயத்தில் … அதில் உள்ள உன்னைப் பற்றி எப்படிச் சொல்வது? அனுமான் மார்பைக் கிழித்து ராம் சீதாவைக் காட்டிய மாதிரி எனக்கும் முடியுமென்றால் கண்டிப்பாக அங்கே நீ உன்னைத்தான் பார்க்க முடியும்.”

“பாரு, அனாமிகா. கொஞ்சம் கண்டிப்பாக சொல்கிறேன். நண்பனோட தங்கை என்ற முறையில் தான் சில நேரங்களில் உன்னிடம் கேலி பேசியிருக்கிறேனே ஒழிய கண்டிப்பாக உன் மேல் எனக்கு எந்தக் காதலோ… எதுவுமில்லை என்பது நிச்சமான உண்மை.”

“உள்ளுக்குள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றைச் சொல்கிறீர்கள் அரசு. மனதிலே கை வைத்துச் சொல்லுங்கள் என்னை நீங்கள் விரும்ப வில்லை என்று.” அவளை அறியாமல் கண்ணீர் கரை புரண்டோடியது.

“கண்களைத் துடைத்துக் கொள் அனாமிகா. என் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் கண்டிப்பாக உன்னிடம் சொல்லாமல் இருக்க மாட்டேன். அப்படி உன்னை என் மனம் விரும்பினால் அதைக் கண்டிப்பாக திறந்து காட்டுவேனே ஒழிய பூட்டி வைக்க மாட்டேன்.”

“என்னதான் சொல்ல வருகிறீர்கள்?” திரும்பவும் பொங்கிய கண்ணீருடன் கேட்டாள் அனாமிகா.

“இப்போது என் நோக்கமெல்லாம் என் அப்பா அளவிற்கு என் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதுதான்”. என அவன் முடிப்பதற்குள் அவள் அழுதுகொண்டே ஓடினாள்…….

(தொடரும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது (சிறுகதை) – ரேவதி பாலாஜி

    நவராத்திரி கொலு கதைகள் (பகுதி 3) – சுஶ்ரீ