in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 23) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15   பகுதி 16   பகுதி 17   பகுதி 18   பகுதி 19   பகுதி 20   பகுதி 21   பகுதி 22

                நரிமன் பாயிண்டிலுள்ள கடற்கரையின் அருகில் அமர்ந்திருக்கும் பன்னிரண்டு மாடிக் கட்டிடமான மிட்டல் டவரின் ஐந்தாவது மாடியில் தன் அறையில் சிகரெட்டை வேகமாக இழுத்துப் புகையை அறைமுழுவதும் பரப்பிக்கொண்டிருந்தார் ஜே.கே.

திடீரென்று தொலைபேசி அழைக்க, எடுத்து “என்ன விஷயம்” என்றார்.

“ஸார்… உங்களைச் சந்திக்க ராஜேஷ் குப்தா டெக்னோ கிராப்ட் கம்பெனியிலிருந்து வந்திருக்கிறார்” என்றாள் டெலிபோன் ஆபரேட்டர்.

“நான் யாரையும் பார்க்கிற மூடில் இல்லை. ரூபி அவனிடம் நாளைக்கு இதே நேரத்திற்கு இங்கே வரச் சொல். இனி எந்தத் தொலைபேசி வந்தாலும்… அது கடவுளே இருந்தாலும் எனக்கு தொடர்பு கொடுக்காதே.” என்று சொல்லி விட்டு நேரடித் தொடர்பு தொலைபேசியின் தொடர்பைத் துண்டித்து விட்டு திரும்ப சிகரெட் பற்றவைத்துக் கொண்டார்.

உள்ளுக்குள்ளே சிறியதாக ஒரு பயப் பந்து சுருண்டு உருண்டோடியது.

‘தமிழரசு எங்கே போயிருப்பான்… சே! இந்தப் பாபுவை நம்பியது தவறோ? இப்படி அவனை கோட்டை விட்டு விட்டு விட்டார்களே…’

ஒவ்வொரு நாளும் தமிழரசு எங்கே போயிருக்கிறான்? என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற செய்திகளோடு ராணியை சமதானப்படுத்திக் கொண்டிருந்தேன். இனி அவள் கேட்டால் என்ன சொல்லப் போகிறேன்?’

நேற்றுவரை அவன் கப்போலி போகும் வரை சரியாக கண்காணித்தவர்கள் எப்படியோ அவனைத் தவற விட்டிருக்கிறார்கள்.

சே! என் ஒரே மகன் .. இப்படி உணவிற்கு கஷ்டப்பட்டு…

அவருக்கு அந்த ஏ.சி . குளிரிலும் வியர்த்ததுக் கொட்ட ஆரம்பித்தது. கோட்டைக் கழற்றி நாற்காலியின் பின்னால் போட்டுக்கொண்டு டையை கழற்றி விட்டுக் கொண்டார்.

வயிறு பசிக்க ஆரம்பித்தது. எதையும் சாப்பிட விருப்பமில்லாமல் குட்டிப் போட்ட பூனையைப்போல அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தார்.

மொபைல் போன் சப்தித்தது. எடுத்து பார்த்தார் வீட்டிலுருந்து தான் போன். ‘இவளுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன். இவ்வளவு பெரிய பிள்ளை தொலைந்து போய் விட்டானே’  என்றா?

போனை தொடர்பு படுத்தி “ராணி கொஞ்டம் அவசரக் கூட்டத்தில் இருக்கிறேன். அப்புறம் போன் பண்ணுகிறேன்.” என்று சொல்லி தொடர்பைத் துண்டித்து விட்டு மொபைல் போனையும் அணைத்து மேஜையில் எறிந்தார்.

எதற்காக… ஏன்.. என் மகன் அதுவும் இதற்கு மேல் குழந்தை இருந்தால் சமாளிக்க முடியாதென்று ஒரே பையனாகப் பெற்றெடுத்த இவன்.. என்.. வியாபார சாம்ராஜ்யத்தைக் கவனிக்காமல் இப்படி தனியாக… சுயமாக நிற்க முயற்சிக்கிறானே… இவனை என்னச் சொல்ல…என்ன செய்ய…

வீட்டிற்கு திரும்பி விடுவான் என்ற நம்பிக்கையில் ஒரு மாதத்திற்கும்மேல் ஆகி விட்டது. இனி அவனுக்கு புதிய வாழ்க்கை பழகி விட்டால் திரும்ப வருவதற்கு அவனுக்கே கடினமாகி விடும்.

அந்த அளவிற்கு விட்டு விடக் கூடாது. நான் என் மகனை திரும்ப என்னிடம் வரச் சொல்வதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்…

அவன் ஆரம்பிக்கும்… அவனுக்கு வருமானம் தரும் ஒவ்வொரு ஆணிவேரையும் பிடுங்கி தீயில் போடலாம். அவனுக்கு உதவி செய்கிற…. உணவு கொடுக்கிற ஒவ்வொருவரையும் மறைமுகமாக மிரட்ட ஆரம்பித்தால்… அவனுக்கு வேறு வழியில்லாமல் என்னிடம் சரணடைவதற்கு வசதியாக இருக்கும்.

ஆனால் இந்த விஷயம் அவனுக்குத் தெரிய வந்தால்… அப்புறம் அவன் என்னையே வெறுக்க ஆரம்பித்து விடுவான். அதுவே பெரிய பிரச்சினையாகி விடும்.

இன்டர்காமை அழுத்தி “ஒரு கப் காபி கொண்டுவரச் சொல்.” என்று சொல்லி விட்டு திரும்ப மொபையில் போனை தொடர்பு ஏற்படுத்தி பாபுவைக் கூப்பிட்டார்.

“பாபு, ஏதாவது செய்தியுண்டா?”

“இல்லை சார். நம்ம பசங்க இவ்வளவு மோசமாக இருப்பார்கள் என்று எதிர் பார்க்க வில்லை. இன்று இரவிற்குள் நானே தேடிப் பார்த்து நல்ல செய்தியோடு வருகிறேன் சார்.” என்றது எதிர்முனை.

“எப்படி கோட்டை விட்டீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.” என்று எரிச்சல் பட்டவர் “சரி.. நம்முடைய நெட் வொர்க் எவ்வளவு பெரிதாக இருக்கிறது. இவ்வளவு பெரிய ஆள்படை நம்மிடமிருந்த பிறகும் என் பையன் எங்கே போனான் என்பதை நம்மால் தொடர முடிய வில்லை என்பதுதான் உண்மையில் கோபமும் ஆத்திரமுமாக இருக்கிறது” என்றார்.

“வெளியே தெரியாமல் இரகசியமாக சொல்லப்பட வேண்டிய விஷயம். நாம் மற்றொருவருக்குத் தெரியாமல் செயல்பட வேண்டியுள்ளது. நான் இரவிற்குள் நல்ல செய்தி சொல்கிறேன்.”

“பாபு… இல்லையென்றால் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் ஒப்படைத்து விடலாம். நாம் பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்றார்.

“பணம் ஒரு பிரச்சினை இல்லை என்பது எனக்குத் தெரியும் சார். ஆனால் நாம் எடுக்கின்ற ஒவ்வொடு முடிவும் உங்கள் பையனுக்குத் தெரிய வந்தால் அது உங்களுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்பதுதான் முக்கியமாக இருப்பதால் ஒவ்வொன்றையும் யோசித்து செய்ய வேண்டியதிருக்கிறது.”

“சரி… எதையோ செய்யுங்கள். எவ்வளவு பணம் வேஸ்ட்…எத்தனை வியாபார விஷயங்கள் அங்கங்கே நின்று கொண்டிருக்கிறது…. எத்தனை மீட்டிங் கேன்சலாகி விட்டது. எத்தனை ஆர்டர்கள் பெண்டிங்கிலே இருக்கிறது… எத்தனை இடங்களில் தயாரிப்பு குறைந்து விட்டது” கத்தினார் ஜே.கே.

(தொடரும்)                   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாம்பாட்டிக் குட்டன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 4) – தி.வள்ளி, திருநெல்வேலி