in ,

மனிதநேயம் (சிறுகதை) – கீதா இளங்கோ

எழுத்தாளர் கீதா இளங்கோ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பசி வயிற்றை கிள்ளியது. மணியை பார்த்தாள் காயத்ரி அவளின் கைகடிகாரம் ஒன்று என்று காட்டியது…..

எதாவது ஹோட்டல் தெரிகிறதா என்று பார்த்தவள் அவள் கண்ணில் பட்டது அன்பு உணவகம். உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த டேபிளில் முன் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் வேகமாக அங்கு வந்த ஒருவர் சொல்லுங்க மேடம் என்ன வேண்டும் என்று கேட்க ஒரூ சாப்பாடு என்று சொல்லி அந்த வெய்டரை அனுப்பி விட்டு விழிகளை சுழல விட்டவள் இரண்டு இருக்கைகளை அடுத்த டேபிளின் அருகில் சிறு வயதும், நடுத்தர வயதுமாக இரண்டு பெண்கள். 

ஒரு பெண் டேபிளை துடைக்க அடுத்த பெண் அங்கிருந்த கிளாசில் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தாள். இரண்டு பெண்களில் அந்த சிறு வயது பெண் சிவந்த முகத்துடன் கை நிறைய கண்ணாடி வளையல்களுடன் மிகவும் அழகாகவும் இருந்தாள்.

அந்த சிறு வயதுடைய பெண்ணோ அடுத்த பெண்ணின் காதில் எதோ சொல்வதும், அதற்கு அடுத்த பெண் பயந்து கொண்டே வேண்டாம் என்று தலையாட்டுவதுமாக இருந்தாள்,

இதை கவனித்த காயத்ரி என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு சரி அந்த பெண் நம் இருப்பிடம் வரட்டும் கேட்கலாம் என்று காத்திருந்தாள். 

இவள் ஆர்டர் பண்ண சாப்பாடும் வந்தது. அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண் இவள் டேபிளை நோக்கி வந்தவள் காயத்ரியை பார்த்து சிரித்தபடியே அங்கு இருந்த கிளாசில் தண்ணீரை ஊற்றினாள்.. காயத்ரியும் சிரித்தபடி பேச்சு கொடுத்தாள். 

என்னம்மா நீங்க இரண்டு பேரும் எதோ பயந்த மாதிரி பேசிட்டு இருந்திங்க என்ன விஷயம் என்று கேட்க அந்த பெண் ஒன்னும் இல்லம்மா,. என்று மெதுவாக பேச ஆரம்பித்தாள்…….,

 அந்த பெண் சொல்வதை கேட்டு கொண்டு இருக்கும் போது காயத்ரிக்கு அவள் ஆர்டர் பண்ண சாப்பாடும் வந்தது. காயத்ரியோ சாப்பிடாமல் கேட்டு கொண்டு இருந்தாள்.

அந்த பெண் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருப்பதாகவும் மாசமாக இருக்கிறாள் என்றும்,  பசிக்குது சாப்பிடலாமா? என்று கேட்கிறாள் எனக்கு என்ன சொல்றது தெரியலைம்மா என்று சொல்லிவிட்டு,,, 

பெருமூச்சு விட்டபடி எப்படி அம்மா அது முடியும்? நாங்க சாப்பிடுவதற்கு மூன்று மணியாகும். இப்பதான் கஸ்டமர் வர ஆரம்பித்து இருக்கிறார்கள். இப்ப பசிக்குதுன்னு சொன்ன, முதலாளி திட்டுவார் மா என்று சொல்ல காயத்ரிக்கு மனதை எதோ செய்தது…

அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அந்த பெண்ணோட நிலைமையை சொல்லி கேளுங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்று சொல்ல சரிங்கம்மா கேட்டு பார்க்கிறேன் என்று அந்த பெண் பயந்தப்படியே மெதுவாக பணம் செலுத்தும் இருக்கையில் உட்கார்ந்து இருந்த அந்த முதலாளியின் காதில் விஷயத்தை சொல்ல 

அவரோ கேட்க கூடாத விஷயத்தை கேட்டது போல் மிகவும் சத்தமாக இதற்குத்தான் நான் அப்பவே அந்த பெண் வேண்டாம் சொன்னேன். வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் பசி எடுக்குது வாந்தி வருதுன்னு சொல்லிட்டு இருக்கு. போ,. போங்க போய் வேலையை பாருங்க என்று அவர் சொல்வது இவள் காதுகளில் விழுந்தது. 

சட்டென எழுந்த காயத்ரி கண்ணாடி வளையல்களுடன் இருந்த அந்த பெண்ணின் கையை பிடித்து அழைத்து வந்து அவள் இருக்கையில் அமரவைத்து நீ சாப்பிடும்மா என்று சொல்ல அங்கு இருந்த அனைவரும் காயத்ரியை நிமிர்ந்து பார்க்க அந்த பெண்ணோ பயந்தபடியே வேண்டாம்மா என்று சொல்ல நீ சாப்பிடும்மா மாசமாக இருக்கும் போது இப்படி பசியோடு வேலை செய்யக்கூடாது என்று சொல்லி அந்த பெண்ணை அவள் இருக்கையில் அமர வைத்து சாப்பிட வைத்து விட்டு, வேகமாக முதலாளியின் இருக்கை இருக்கும் இடத்தை நோக்கி நடந்தவள் இவளின் சாப்பாட்டுக்கான பணத்தை கொடுத்துவிட்டு வெளியில் வந்தவள் தலை நிமிர்ந்து பார்க்கையில் உங்களின் பசியாற்ற உங்களை அன்புடன் அழைக்கிறது உங்களின் அன்பு உணவகம் என்கின்ற விளம்பர போர்டை பார்த்தவாறு,

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கவி இன்று பொய்யாய் போனதோ? என்று நினைத்தப்படியே  ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அந்த இடத்தை வெளியேறினாள் காயத்ரி 

எழுத்தாளர் கீதா இளங்கோ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொன்னால் புரியாது (சிறுகதை) – சுஶ்ரீ

    தனிமையிலே இனிமை காண முடியும் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி