in ,

மத்யமாவதி (பகுதி 4-சுத்த தன்யாசி) – சாய்ரேணு சங்கர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3

“ஜெய்! உன்னை ஒண்ணு கேட்கலாமா?” என்றாள் அஞ்சனா.

“கேளேன்” என்றான் ஜெய். அவர்களுக்கு அளிக்கப்பட்ட அறையில் அப்போது அவர்கள் இருவரும் தனித்திருந்தார்கள்.

“யார் அந்தச் செல்வி?” என்று கேட்டாள் அஞ்சனா.

எங்கோ கவனமாக இருந்த ஜெயக்குமாருக்கு இந்தக் கேள்வி மனதில் எட்டச் சில விநாடிகள் ஆனது. புரிந்ததும் வியப்புடன் திரும்பி அஞ்சனாவைப் பார்த்தான்.

“என்ன இது கேள்வி? நான்தான் சொன்னேனே, அவ என் சின்னவயது ஃப்ரெண்ட்னு!”

“சின்ன வயதுன்னா, எந்த வயது வரை?”

“பத்து வயசிலே ஆரம்பிச்சது, இப்ப வரைக்கும் அவ ஃப்ரெண்ட் தான்! என்ன இதெல்லாம் அஞ்சு? இத்தனை வருஷம் கழிச்சு என் மேலே சந்தேகப்படறியா?”

“உன்னைப் போய் சந்தேகப்படுவேனா ஜெய்? உன் அப்பா ஏன் அந்த மாதிரிச் சொல்லணும்னு தான் கேட்டேன்.”

ஜெயக்குமார் “மை காட்” என்ற தலையை உதறினான். “இந்த வீட்டோட விஷம் மெதுவா உனக்கும் ஏற ஆரம்பிச்சுடுத்து, இல்ல?”

“அப்படியெல்லாம் இல்ல, ஜெய்” என்ற அஞ்சனாவின் பலவீனமான மறுப்பைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தான்.

“கேட்டுக்கோ, எனக்கு அப்ப பத்து வயசு. இந்தச் செல்வியோட அம்மா எங்க வீட்ல வேலை பார்த்துக்கிட்டிருந்தாங்க. என்னோட அண்ணாவும் அக்காவும் எப்போ பார்த்தாலும் படிச்சுக்கிட்டிருப்பாங்க. ஜானு சின்னக் குழந்தை. அதனால நான் எப்போதும் செல்வியோடத்தான் விளையாடிக்கிட்டிருப்பேன். நான் கத்துக்கிட்ட பாட்டுகளை அவகிட்டதான் பாடிக் காமிப்பேன். பாட்டு டீச்சர் வெச்சுப் படிச்சதுன்னா நினைச்ச?

ப்ரெண்ட் வீட்டு ரேடியோ, காஸெட், திருவிழா மைக் ஸெட். என் வீட்டோட நிலைமை அவளுக்குத் தெரியும்ங்கறதுனால அவகிட்டதான் எல்லாமே சொல்லி அழுவேன், ஒருநாள் லவுட் ஸ்பீக்கர்ல பாட்டுக் கேட்டுக்கிட்டே நின்னுட்டு வீட்டுக்கு அரைமணி நேரம் லேட்டா போனதுக்காக அப்பா கால்ல சூடு வெச்சாரே, அது உள்பட!

பதினேழு வயசில நான் வீட்டைவிட்டு ஓடிய போது, அவகிட்ட சொல்லிட்டுத்தான் செஞ்சேன். தன்னந்தனியாக வாழ்க்கைல தவிச்ச காலத்துல ஒரு வடிகாலா அவளுக்குக் கடிதங்கள் எழுதினேன். நான் நல்லநிலைக்கு வந்தபிறகு அவளையும் அவ அம்மாவையும் அழைச்சு வந்து என் வீட்டோட வேலைக்கு வெச்சுக்கறேன்னு கூடச் சொல்லியிருந்தேன்.

கொஞ்சநாள் கழிச்சு எனக்கு ஒரு ஷாக் நியூஸ் தெரிஞ்சது. செல்வி யாரையோ காதலிச்சதாகவும் அவனோடு சென்னைக்கு ஓடி வந்ததாகவும். இங்கே வந்து பார்த்தா அந்த ராஸ்கலுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்ததாம். அவ ஓடிப் போயிட்ட அவமானம் தாங்காம அவ அம்மா செண்பகம் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம்! அப்புறம் செல்வி எப்படியோ எங்க வீட்டுக்கே வந்து சேர்ந்திருக்கணும்.

என் பால்ய சினேகிதி, பாவம் வாழ்க்கைல எத்தனையோ அடிபட்ட ஒரு பொண்ணு, அவகிட்ட கொஞ்சம் சிரிச்சுப் பேசிட்டா உடனே வுமனைசர்னு பட்டம் கொடுக்கறார் என் அப்பா! அதுகூட எனக்கு வருத்தமில்ல, அது அவர் சுபாவம். அவர் சொன்ன அந்த வார்த்தையை விட, நீ கேட்ட ‘யார் அந்த செல்வி?’ங்கற கேள்வி எனக்கு வலிக்கறது”

“ஐயோ ஜெய், என்னப்பா நான் சொன்ன சின்ன வார்த்தைக்கெல்லாம் கோச்சுக்கற. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கறதுனாலதானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! நான் உன்னைச் சந்தேகப்படுவேன்னு நீ என்னைச் சந்தேகப்படலாமா?” வேடிக்கையாகக் கூறிச் சிரித்தாள் அஞ்சனா.

ஜெய் சிரிக்கவில்லை.

“இது உன் தப்பில்லை ஹனி, இந்த வீட்டோட தப்பு, என் அப்பாவோட தப்பு. அவரை ஒரு வழி பண்ணிட்டுத்தான் நான் இங்கேர்ந்து கிளம்பறேன்”

ஜெயக்குமாரின் குரல் தீவிரமாக ஒலித்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 11) – தி.வள்ளி, திருநெல்வேலி

    கார்த்திக் WEDS கார்த்திகா (சிறுகதை) – முகில் தினகரன், கோயமுத்தூர்