in ,

காற்றில் கலையும் மேகங்கள்! (சிறுகதை) – பீஷ்மா

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

அன்றும் வழக்கம் போல் கீதாவும், முரளியும் Weekend Outing போவதை சற்றுப் பொறாமையுடன் தன் வீட்டுப் பால்கனியிலிருந்து பார்த்து ஓர் ஏக்கப் பெருமூச்சுடன் kitchen திரும்பினாள் மாலினி.,

மாலினியின் கணவன் மகேஷும், முரளியும் ஒரே கம்பெனி, ஒரே சம்பளக் கேடர்., முரளி எவ்வித கமிட்மெண்ட்களிலும்  சிக்கிக் கொள்ளாது வாழ்க்கையை முழுவதும் சந்தோஷமாக அனுபவிக்கும் சுதந்திரமான காதல் பறவை.

மகேஷ் அனைத்துக் கடன்களையும் வாங்கி, தன் சம்பளம் முழுவதும் கடன்களுக்கான EMIக்கே கட்டிக்கொண்டு மிக மிகச் சாதாரண வாழ்க்கையைப் போராடி வாழ்ந்து வரும் கடன்களின் சிறைப் பறவை.

மாலினி முரளியைக் compare பண்ணிப் பேசும் ஒவ்வொரு முறையும் சலிக்காமல், “மாலு, அவங்க இருக்கற வீடு அவங்களுக்குச் சொந்தமில்ல. நம்ம கிட்ட கார் இருக்கு. அவங்க கிட்ட வெறும் bikeதான் இருக்கு. நம்ம வீடு கொள்ளாத அளவுக்கு நம்மகிட்ட எல்லாம் இருக்கு. அவங்க வீடே ஃப்ரீயா யிருக்கு. வாங்கும்போது வாங்கி அனுபவிக்காம சும்மா பீச், சினிமான்னு காசை செலவு பண்ணிட்டு பின்னாடி கஷ்டப் படும்போது அவங்களுக்குப் புரியும் “

மாலினியைக் convince பண்ணுவதாகத் தன்னையும் self motivate பண்ணிக் கொள்ளும் மகேஷ் சில சில சமயங்களில் அதுவும் வாங்கும் சம்பளம் மொத்தமும் EMI க்கே போகும்போது கொஞ்சம் சலனப் படுவது உண்மை.,

இருந்தாலும் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு அதிகம் சம்பாதித்தாலும், சிக்கன வாழ்க்கைக்குத் தன்னை பழக்கப் படுத்திக் கொண்டதோடு மலினியையும் பழக்கப் படுத்துவதை மிகச் சிரமத்துடன் செய்து வந்தான்.,

இருவருக்கும் சொல்லி வைத்தது போல் ஒரே குழந்தை. இருவருக்குமே ஆண் குழந்தை. ஒரே பள்ளியில் ஒரே விதமான படிப்பு.,

ஸ்கூல் Function க்கு மகேஷ் தன் குடும்பத்துடன் காரில் வந்து பார்க்கிங் தேடிக் கொண்டிருக்கும் சமயம், புக் பண்ணிய கேபில் வந்து இறங்கும் முரளி சிரித்தவாறு உள்ளே சென்று விடுவான் தன் குடும்பத்துடன்.,

முரலியிடம் எவ்வளவோ முறை ஒரு வீடு வாங்கி EMI கட்டிச் சொந்தமாக்கிக் கொள்ள எடுத்துச் சொல்லியும் ஒரு புன்சிரிப்புடன் மறுத்துக் கடந்து விடுவான்.,

” Free யா விடு.,மகேஷ்., நீ கட்டிட்டு இருக்கற EMI யை விடக் கம்மி காசுல நீ இருக்கற வீட்டை விட அதிக வசதிகளோட ., உன் வீட்டை விடக் கொஞ்சம் பெரிய வீட்ல என்னால இப்ப இருக்க முடியுது. நானும் உன்னை மாதிரி ஒரு சின்ன வீட்டை லோன்ல வாங்கி, இப்ப கட்டிட்டு இருக்கற வாடகைய விட ஜாஸ்தி EMI கட்டி அவஸ்தைப் படணுமா !? “

ஒரு கட்டத்தில் முரளி சொல்வது சுரீரென்று உறைக்க ஆரம்பித்தது மகேஷுக்கு.,

ஆனாலும், தனது வீடு, கார் இன்ன பிற வசதிகள் அவனைச் சமாதானப் படுத்தி விடும்.,

இருந்தாலும், எந்தக் committmentடும் இல்லாமல், ஊர் சுற்றி இஷ்டப்படி வாழும் முரளி,கீதா இருவரும் மகேஷ்,மாலினி கண்களைக் கொஞ்சம் உறுத்தத்தான் செய்தனர், அவர்களையறியாமலே.

வேலை அழுத்தம் தாங்காமல் பேப்பர் போட்டுச் செல்லும் தனது சக ஊழியர்கள் அதிக சம்பளத்திலோ, அல்லது அதே சம்பளத்திலோ ஒரு ரெண்டு, மூணு மாத பிரேக்கில் சேருவது கண்டு, அவர்களைப் பார்த்து ஓர் ஏக்கப் பெருமூச்சு தான் விட முடிந்தது மகேஷால்.,

வேலையும், சம்பளமும் இல்லாமல் ரெண்டு…மூணு.. மாதம் ஏன் ஒரு மாதம் கூடத் தன்னால் தாக்குப் பிடிக்க இயலாது என்னும் நிதர்சனம் முகத்திலறைய வெளியில் காட்டிக் கொள்ள முடியாமல் தவித்தான் மகேஷ்.,

எப்படியாவது முரளியையும் லோன் commitment டில் கோத்து விட முயற்சித்தாலும் , முரளி சிரித்துக் கடந்து விடுவான்.,

“சம்பாதிக்கற காலத்ல வீடு, கார் னு வாங்கிப் போட்டு அனுபவிக்காம வயசான காலத்ல என்னடா பண்ணுவே?”

“இங்க பாரு, நான் ஏற்கெனவே உங்கிட்ட சொன்ன மாதிரி, நல்ல பெரிய வசதியான வீடு உன்னோட வீட்டு EMI காசை விடக் கம்மி வாடகைக்கு எனக்கு எங்க போனாலும் கிடைக்கும். வெளிய போய்ட்டு வர்றதுக்கு உனக்கு ஆகற பெட்ரோல் செலவுலயே எந்த maintenance செலவும் இல்லாம எனக்கு கேப் கிடைக்குது. வாங்கினா ஒரே கார் தான்., புக் பண்ணிப் போகும்போது…, போகும்போது ஒரு பிராண்ட் கார், திரும்பும்போது இன்னொரு பிராண்ட் கார்”

சொல்லிச் சிரித்து மகேஷ், மாலினி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் முரளியிடம் எதுவும் பேச முடியாமல் கீதாவிடம் ஆசை காண்பித்தபோது, “மாலு , இப்ப எங்கிட்ட இருக்கற நகைல பாதி கூட உங்கிட்ட இல்ல. எந்தக் கடனும் இல்லாம நாங்க நகையாவும், கோல்ட் coin னாவும் வாங்கி சேர்த்து வச்சிருக்கறது எங்களுக்கு எப்பவும் உதவும் ,

பையனுக்கு நல்ல படிப்பு மாத்திரம் கொடுத்தாப் போதும்.அவன் வாழ்க்கையை அவன் போக்குல அவன் பார்த்துக்கப் போறான்.,

வெளிநாட்டுல போய் செட்டில் ஆன பசங்க இங்க அவங்க அப்பா, அம்மா கஷ்டப்பட்டு வாங்கின…கட்டின வீட்டை என்ன பண்றதுன்னு தெரியாம, வீட்டை நல்லபடியாப் பார்த்துக்க ஆட்களைத் தேடி அலையறதைப் பார்க்கலியா நீங்க ரெண்டு பேரும் !? “

கீதாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் பதில் சொல்ல இயலாமல் அவர்களைத் தவிக்க வைத்து,

புலிவால் பிடித்த கதையாய்த் தங்கள் வாழ்க்கை ஆகியதைக் கண்டு., வீட்டு லோன் தவிர, வேறெந்த Commitment டும் தங்களைக் கட்டிப் போடாதவாறு என்னென்ன செயயலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.,

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அது அவள்தான் (சிறுகதை) – செந்தில் செழியன்

    தடுமாறிய எண்ணங்கள் (சிறுகதை) – சசிகலா எத்திராஜ்