in

ஆண்டு விழா நிகழ்வு – ஆகஸ்ட் 2, 2022

சஹானா ஆண்டு விழா 2022

வணக்கம்,

2022ம் வருட சிறுகதைப் போட்டி அறிவிப்பு, 2021ம் வருட அறிவியல் கதைப் போட்டி முடிவுகள்,  2 புதிய புத்தக வெளியீடுகள், சிறப்பு விருந்தினர்களின் உரைகள், ஆண்டறிக்கை, கலை நிகழ்ச்சிகள் என பல்சுவை நிகழ்வாய், நமது சஹானா இணைய இதழ் மற்றும் ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் ஆண்டு விழா நிகழ்வு ஆகஸ்ட் 2ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெற்றதில் மகிழ்ச்சி.

எழுத்தாளர் பிரேமா சிவராமன் (1960களில் சீனா போரின் போது இந்திய ராணுவத்தில் சேவையாற்றியவர், அதன் பின் 38 வருடங்கள் அமெரிக்க மருத்துவத்துறையில் பணியாற்றியவர்) மற்றும் எழுத்தாளர் G. A. பிரபா (200 நாவல்கள் 150 சிறுகதைகள் எழுதியவர், பல்வேறு பரிசுகள் விருதுகள் பெற்றவர்), இவர்கள் இருவரும் சிறப்பு  விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை  சிறப்பித்தமைக்கு அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் 

காணொளி மூலம் நிகழ்வில் பங்களித்த நம் ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தில் புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்களான, ஓசூர் மணிமேகலை அவர்கள், சுஸ்ரீ அவர்கள், பானுமதி பார்த்தசாரதி அவர்கள்,  கடந்த வருட சிறுகதைப் போட்டி வெற்றியாளர் வைரமணி அவர்கள், நம் தீபாவளி பட்டிமன்ற பேச்சாளர்  இசை அவர்கள் (நூல் மதிப்புரை), அனைவருக்கும் எனது சிறப்பு நன்றிகள் 

இன்னும் சிறப்பாய் நடத்த திட்டமிடப்பட்டு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சற்று சுருக்கமாக முடிக்க நேர்ந்ததில் சற்று வருத்தமே, அடுத்து வரும் நிகழ்வுகளில் அதை சரி செய்து விடுவோம். மீண்டும் சந்திப்போம்.

விரைவில் சிறுகதைப் போட்டி 2022 பற்றிய  அறிவிப்பு வெளியிடப்படும். நன்றி 

Click here to subscribe to Sahanamag for FREE – to get regular updates in your email inbox

என்றும் நட்புடன்,

புவனா கோவிந்த் 

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

நிறுவனர் – ஸ்ரீ ரேணுகா பதிப்பகம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாசப்பிரிவினை (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன், சென்னை

    கற்பக மலர்கள் (சிறுகதைப் தொகுப்பு) – எழுத்தாளர் சியாமளா வெங்கட்ராமன் – ஸ்ரீ ரேணுகா பதிப்பக வெளியீடு