in ,

அன்பென்றாலே அம்மா (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில்  கோலமிட்டேன் என பரத் வாசலில் கோலமிட்டபடி பாடிக் கொண்டிருந்தான்.

என்னடா? காலையிலேயே வெளியே நின்று கொண்டு பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாய் என்று வாசலில் வந்து பார்க்க அம்மா ரேவதி வந்தது கூட தெரியாமல் பாட்டும் கோலமுமாக ரொம்ப பிசியாக இருந்தான் பரத்.

சரி நமக்கு வேலை மிச்சம் என நினைத்துக் கொண்டே நேற்று தன் வீட்டிற்கு புதிதாக குடி வந்த பத்மாவை பார்த்து பால் எதுவும் வேண்டுமா என்று கேட்பதற்காக மாடிப்படியில் ஏறினாள் ரேவதி.

வீட்டின் முன்னே பால்கனியில் நின்று கொண்டிருந்த ரேவதியை பார்த்தவுடன் வாங்கம்மா என்றாள் பத்மா.

பால் வாங்க வேண்டும் என்றால் பக்கத்தில் தான் பால் பூத்  இருக்கிறது. ஐந்து நிமிஷம் நடந்துச் சென்றால் வாங்கி வந்துவிடலாம். பக்கத்திலேயே பால் கடையும், காய்கறி கடையும் இருக்கிறது. தேவை என்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னாள் ரேவதி.

உங்க பையன் பரத் காலையிலேயே பாலும், காய்கறியும் வாங்கி வந்து கொடுத்து விட்டான் மா என்றாள் பத்மா.

அட ஆமா, என்னிடம் வந்து மேலே புதிதாக வந்திருக்கிற ஆன்ட்டிக்கு பாலும்,  காயும் வாங்கி கொடுத்தேன் என்று சொன்னான்,  நான் தான் மறந்து விட்டேன். ஏதோ ஞாபகத்தில் உங்களிடம் கேட்பதற்காக வந்தேன் என சமாளித்தவாறு கீழே இறங்கினாள் ரேவதி.

இன்னைக்கு இருக்குடா மகனே உனக்கு, என் மனதில் நினைத்தபடியே இறங்கி வீட்டுக்குள் சென்றாள் ரேவதி.

கோலத்தை போட்ட பரத் வீட்டின் உள்ளே சென்றான். ரேவதி தன் மகனிடம் பாலும், காய்கறியும் போய் வாங்கி வாடா என்று கைப்பையை எடுத்துக் கொடுக்க,   அம்மா, நான் குளிச்சிட்டு சீக்கிரமா கல்லூரிக்கு போக வேண்டும்.  நீங்களே போய் ஒரு நடை நடந்து  வாங்கி வாருங்கள் என்றான் பரத்.

நீங்க கொஞ்சம் அசந்து தூங்கியதால் போனால் போகிறது என்று  வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டேன் என்றான் பரத்.

மேலே புதிதாக குடி வந்தார்கள் தானே என பரத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது செல்போனில் அழைப்பு வந்தது. உடனே பேச்சை நிறுத்திவிட்டு யார் என்று பார்க்க கணவர் தான் அழைத்திருந்தார்.

புதிதாக குடி வந்தவர்களுக்கு பாலும்,  காய்கறியும் வாங்கி கொடுத்தது அம்மாவுக்கு தெரிந்து விட்டதோ, அம்மா, அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். செல்போனை வைப்பதற்கு கால் மணி நேரம் ஆகும்.

அதற்குள் சத்தம் இல்லாமல் அம்மா சொன்னதை வாங்கிக் கொண்டு வந்து வைத்து விட வேண்டும், இல்லாவிட்டால் ஏண்டா மேல் வீட்டில் புதிதாக வந்து இருக்குற  பெண்ணை சைட் அடிக்கிறியா, அதற்காக தான் இந்த வேலையெல்லாம் பார்க்கிறாயா? என வெளிப்படையாகவே அம்மா கேட்டு விடுவாள் எனக் கைப்பையை எடுத்துக் கொண்டு பால் வாங்க கடைக்கு சென்றான் பரத்.

பாலும் காய்கறியும் வாங்கி வந்த பரத் அம்மா இன்னும் அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சத்தம் இல்லாமல் குளிப்பதற்கு சென்று விட்டான்.

செல்போனில் பேசி முடித்துவிட்டு வந்த தாய் ரேவதி அடுப்படி  மேடையில் பாலும் காய்கறியும் இருப்பதை பார்த்து இவன் போக மாட்டேன் என்று சொன்னானே, இவனிடம் நாம் எதுவுமே கேட்கவில்லையே என  யோசித்தவாறு காபி போட தயாரானாள் ரேவதி.

குளித்து முடித்துவிட்டு வந்த பரத் அம்மா கலந்து வைத்த காபியை குடித்துவிட்டு செல்போனில்  தன்னுடைய நண்பனுடன் பேசுவது போல நடித்துக் கொண்டே,  அம்மா எந்த கேள்வியும் நம்மிடம் கேட்க முடியாதபடி கல்லூரிக்கு கிளம்பி செல்ல,  மகனே.. உன்னுடைய நடிப்பு எனக்கு தெரியாதா, பத்து மாசம் சுமந்து உன்னை பெற்றவள் டா என மனதில் நினைத்துக் கொண்டே நமட்டு சிரிப்பு சிரித்தாள்  ரேவதி.

                                   

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிரே… உயிரே… உயிரை விடு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    ஒட்டாத காசு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு