in ,

ஆழம் அறிந்து காலை விடு (சிறுகதை) – விடியல் மா.சக்தி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

     “இப்படி ரெண்டு பேரும் இரு துருவங்களா நிக்கிறீங்களேடா!, கொஞ்சமாவது விட்டுக் கொடுத்துப் போகமாட்டீங்களா?”

என்று தனது இரு மகன்களைப் பார்த்துக் கேட்டாள் துளசி.

“துளசி, நீ அவங்க பிரச்சனையில தலையிடாத, அவங்க என்னச் சின்னக் குழந்தைங்களா, சொல்லிக் கொடுக்க” என்று துளசியின் கணவன் குமரன் சொன்னார்.

“அதில்லீங்க, மூத்தவனப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே, சூது, வாது தெரியாதவன். ஆனா இளையவன் அவனுக்கு அப்படியே நேர்எதிரா இருக்கானே. அதான் கொஞ்சம் பயமா இருக்கு” என்று துளசி ஆதங்கத்தோடு சொன்னாள்.

      குமரன், அந்த ஊரில், பரம்பரையாக விவசாயம் செய்து வருபவர். அந்தச் சுற்று வட்டார மக்களுக்கும் நிறைய நற்பணிகள் செய்து நல்லப் பெயர் எடுத்தவர்.

      குமரனின் பிள்ளைகள் என்பதால் தர்மன்,உதயன் இரண்டு பேருக்குமே மக்கள் மத்தியில் நல்லபெயர் இருந்தது.

      அந்த சமயத்தில் ஆளுங்கட்சி சார்பில் உதயனைக் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடச் சொன்னார்கள். உதயன் இயல்பாகவே கொஞ்சம் அடாவடி நிறைந்தவன் என்றாலும், புத்திசாலித் தனமாகச் சிந்திப்பவன். அதனால் அரசியலில் ஏற்கனவே முன்அனுபவம் நிறைந்த அவனது மாமாவிடம் சென்று ஆலோசனைக் கேட்டான். அவரும் அவருக்குத் தெரிந்த பல யுக்திகளைச் சொல்லிக் கொடுத்தார்.

      அதே சமயத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக மற்றொரு பிரபலமான கட்சி, அதே கவுன்சிலர் பதவிக்கு மூத்தவன் தர்மனை போட்டியிடும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் தர்மனுக்கு என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் மனதிற்குள்ளேயே குழம்பினான். ‘இந்த விஷயத்தில் நம் நண்பன் சாரதி நல்ல அனுபவம் வாய்ந்தவன் அவனிடம் ஆலோசனை கேட்கலாம் ஆனால், அவன் எதாவது சொல்லுவானே. சரி வேண்டாம், நம்மளே ஒரே முடிவா தம்பிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடலாம்’ என்று முடிவெடுத்தான்.

      சிறிது நாள்களில் தேர்தலும் நடந்து, அதற்கடுத்த நாளில் தேர்தலின் முடிவும் அறிவிக்கப்பட்டது.

      நடந்து முடிந்த அந்த தேர்தலில் உதயன் அதிக வாக்குகளைப் பெற்று அமோகமாக வெற்றிப் பெற்றான். ஆனால் மூத்தவன் தர்மனோ படு தோல்யடைந்தான்.

      நடந்து முடிந்த அந்தத் தேர்தலைக் குறித்து, தனது கணவன் குமரனிடம் துளசி கேட்டாள்,

“ஏங்க, என்னங்க இது அநியாயமா இருக்கு!”

“எது அநியாயம் – ன்னு சொல்ற?”

” அதாங்க, நம்ம மூத்தவன் இயல்பாவே ரொம்ப நல்லவன், மக்களுக்கு நெறைய நல்லதும் பண்ணியிருக்கான். ஆனா அவன் தேர்தல்ல தோத்துப் போயிட்டான். ஆனா, இளையவனைப் பாருங்க அடாவடித்தனம், யாருக்கும் எந்த நல்லதும் செய்ததில்ல, அதுக்குமாறா வெறுப்பைத்தான் அதிகமா சம்பாரிச்சு வச்சிருக்கான். ஆனாலும் தேர்தல்ல அவன் வெற்றியடைஞ்சுட்டானே, எப்படி?”

” துளசி, உதயன் ரொம்பவே புத்திசாலி, இந்த அரசியல் விஷயத்திலும் அவன் ரொம்ப புத்திச்சாலித்தனமா இருந்திருக்கான். அதாவது அவனுக்குத் தெரியாத அரசியல, தெரியாதுன்னு ஒத்துக்கிட்டு, உந்தம்பிக்கிட்ட ஆலோசனைக் கேட்டு வெற்றியடைஞ்சுட்டான். அதே போலவே தர்மனுக்கும் அரசியல்ன்னா என்னன்னு தெரியாது, ஆனா தனக்கு அரசியல் தெரியாதுங்கிறத ஒத்துக்கல. அவனுக்குத் தெரிஞ்சமாதிரி அரசியல்ல எறங்கினான். தோத்துட்டான். அட, அரசியலையே கரைச்சுக் குடிச்ச அவனோட நண்பன் சாரதிக்கிட்டயாவது ஆலோசனை கேட்டிருக்கலாம், அதுவும் செய்யல. எப்பவுமே ஒரு மனுசன் தனக்குத் தெரியாததை, தெரியாதுன்னு ஒத்துக்கனுமே தவிர தெரிஞ்சமாதிரி காட்டிக்கிட்டு களத்துல எறங்கினா இப்படித்தான் நடக்கும், புரிஞ்சுதா? ” என்று, ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தார். அதைக் கேட்ட  துளசி, புரிந்தும், புரியாமலும் தலையை ஆட்டினாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நல்ல காலம் பொறந்துருச்சு (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    அகங்காரம் இல்லா அலங்காரம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை