in ,

ஆசை அதிகம் வச்சு (சிறுகதை) -M.மனோஜ் குமார்

630-02219227 Model Release: Yes Property Release: No Two boys hugging their mother and smiling

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் சரஸ்வதிக்கு, அப்படி ஒரு ஆசை மனதில் தேங்கியிருந்தது.

38 வயது தாண்டிய பிறகும், அந்த ஆசை தொடர்வது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்னம்மா உன் ஆசை? எங்ககிட்ட சொன்னா தானே புரியும்”

“சொன்னா சிரிப்பீங்க”

“அப்ப சொல்லாத” என்று சொல்லிவிட்டுச் சென்றான், பிளஸ் டூ படிக்கும் அவளது மூத்த மகன் கோபால்..

“அப்பா இறந்த பிறகு அம்மா மறுமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்களோ.. என்னமோ…?” கேட்க மனதில்லாமல், மனதிற்குள் நினைத்துக் கொண்டான் இளைய மகன் தினேஷ்.

தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களுடன் சொன்னால் “இந்த வயசுல உனக்கு இது தேவையா..? உன் பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க என்று கேவலமாகச் சிரிப்பார்கள்”

வருவது வரட்டும் யார் என்ன சொன்னாலும், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள்.

.வேலை முடிந்து தினமும் 5 மணிக்கு வீடு திரும்பும் சரஸ்வதி இப்போது வீடு திரும்ப ஏழு மணிக்கு மேல் ஆனது.

“ஏம்மா தினமும் லேட்டா வர்ற” கோபால் கேட்டான்.

.”இனிமே அப்படித்தான்” திமிராகவே சொன்னாள் சரஸ்வதி.

அம்மா ஏதோ தப்பான காரியம் செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருவர் மனதிலும் எழுந்தது.

அன்று பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய இருவரும் அம்மாவை கண்காணிக்க புறப்பட்டார்கள்.

துப்புரவு வேலை முடிந்து சரஸ்வதி விறு விறுவென்று நடக்க ஆரம்பித்தாள். இருவரும் அவர்கள் பின்னால் தூரத்தில் நடந்து கண்காணித்தார்கள்.

சரஸ்வதி ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த அந்த வீட்டிற்கு நுழைந்தபோது உஷாரானார்கள். ஜன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்க்க அசந்து போய் நின்றார்கள்.

சரஸ்வதி பத்தாம் வகுப்பு பரீட்சை எழுத டியூஷன் படித்துக் கொண்டிருந்தாள்.

“இத என்கிட்ட சொல்லி இருந்தா நானே உனக்கு சொல்லி தந்திருப்பேனே”

மறுநாள் மகன் அம்மாவுக்கு டியூஷன் எடுக்க பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு வெற்றி பெற்றாள் சரஸ்வதி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொல்லாத காதல் செல்லாது! (சிறுகதை) – இரஜகை நிலவன்

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 20) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை