வாழ்வுரிமை பேணவே சுதந்திரம் காப்போம்!
சாதி மதமற்ற சுதந்திரம் காப்போம்!
மனச்சிதைவில்லா சுதந்திர வாசம்
கொடுப்போம்!
மண்ணுரிமை பேணியே!
உறக்கம் மறந்து
உணவு மறந்து
உயிர் துறந்து
உயிர் கொடுத்தனர்
சுதந்திரத்துக்காய்
நம் வீரர்கள்…!
எங்கு நோக்கினும் வன்முறை
வஞ்சகர் தம்
கொலைநிலைப் பாதகம்!
வரலாறு காணாத பாதுகாப்பில்
குடை பிடிக்கும் சனநாயகம்!
எங்கே தொலைந்தது
மனித நேயம்?
தீவிரவாதமும்
பயங்கரவாதமும்
மதவாதமும் இனவாதமும்
பெரும் பேதமாய்
தொடர்கின்றதே!
பேதங்கள் களைந்தெறிந்து
புதிய உலகு
படைத்தே
சுதந்திரம் காப்போம்!
கருத்துரிமை வேண்டும்
கருத்தாய் வளர்வதற்கே!
அதிகாரத்தால் அலைக்கழிக்கப்படும்
அடிப்படை உரிமை பேணியே
சுதந்திரம் காப்போம் !
உயிர் தியாகத்தாலும் வீரத்தாலும் விளைந்த
சோதனைகளை சாதனைகளாக்கியே
சுதந்திரம் காப்போம்!
அடிமைத்தனத்தை அடியோடொழித்து
செந்நீரும் கண்ணீரும் சிந்திப் பெற்ற
சுதந்திரம் காப்போம்!
நம் எண்ணங்களை
மனதின் வண்ணங்களாக்கிய
மூவண்ணக் கொடியைக் காத்திடவே
உயிர் மூச்சை நல்கிய தியாகிகளின்
சுதந்திரக்காற்றாம்
சுதந்திரம் காப்போம்
வீரர்களின் செந்நீரில்
வீரமங்கைகள் விதைத்துச் சென்ற
சுதந்திரம் காப்போம்!
அநீதிகளை களைந்து நீதியை
நிலைநாட்டுவோம்!
பெற்ற சுதந்திரத்தைக் காப்போம்!
நாட்டு மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்திடப்
போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் காப்போம்!
எத்தனை வேற்றுமை
இப்புவியில் இருப்பினும்
ஏற்றமிகு ஒற்றுமையினை எங்கும் காணவே
சமூக ஏற்றத்தாழ்வுகள்
அறவே நீக்கிட
சாதி மத பேதங்கள்
அறவே ஒழிந்திட
அடிமைத்தனம் விலக்கி அமைதியாய்
வாழ்ந்திட
தாய்த்திரு நாட்டின்
இயற்கை வளம் பேணவே
சுதந்திரம் காப்போம்!
மண்ணும் மாண்பும் நமதே!
மண்ணுயிர் வாழவே
மண்டியிடும் நிலை களைந்தே
வீறு கொண்டே விழைவோம்!
உற்ற சுதந்திரத்தை
உயிராய் மதித்தே
சுதந்திரம் காப்போம்!
வாழ்க பாரதம்!
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings