in ,

திருந்தவே மாட்டார்களா? (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஒரு வழியாக காஞ்சனாவுக்கு மாப்பிள்ளை அமைந்துவிட்டது என மனைவி துளசி தன் கணவன் குமாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். 

கிட்டத்தட்ட ஐந்து வருடம் பார்த்தாகி விட்டது, பணம் இருந்தும்,  வசதி இருந்தும் மாப்பிள்ளை கிடைக்கவில்லையே என ஆதங்கப்பட்டாள் துளசி.

29 வயது ஆகிவிட்டது, என்ன செய்வது கடவுள் எப்போது கையை காண்பிக்கிறாரோ அப்பொழுது தானே எதுவும் நடக்கும் என்றார் கணவர் குமார்.

காஞ்சனா குறுக்கே வந்து வேற வழி இல்லாமல் தான் இந்த மாப்பிளையை திருமணம் செய்து கொள்கிறேன். மாப்பிள்ளையுடைய இரண்டு அக்காவும் என்னிடம் என்ன என்ன கேள்வி கேட்கிறார்கள். 

திருமணத்திற்கு பிறகு தனிக் குடித்தனம் செல்ல வேண்டுமென்று கனவெல்லாம் கண்டு கொண்டிருக்காதே, உன்னுடைய வசதி வாய்ப்பு எல்லாம் உன்னுடைய அம்மா வீட்டோடு வைத்துக் கொள்.   ஒரே பெண் தான் என்று செல்லம் கொடுத்து வளர்த்தார்கள் என்று வாய் ஜவ்டால் அடிக்காதே என என்னிடம் பேசுகிறார்கள்.  விதியை நொந்து திருமணம் செய்து கொள்கிறேன், என்றாள் காஞ்சனா.

அவர்கள்  திருமணமாகி எல்லோரும் வெளியூரில் இருக்கின்றார்கள்.  அதனால் நமக்கு அவர்களைப் பற்றி அக்கறை இல்லை. வீட்டில் மாமனார் மாமியார் மாப்பிள்ளை பையன் மட்டும் தான் இருக்கின்றார்கள். சில விஷயத்தை விட்டுக் கொடுத்துப் போனால் தான் வாழ்க்கையில் ஜெயிக்கவும் முடியும் என காஞ்சனாவுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார் அம்மா. 

நீங்களும்,  அப்பாவும் மாப்பிள்ளை பையனை பற்றி நல்ல விதமாக சொல்லி இருக்கிறீர்கள். என்னை நல்ல விதமாகத்தான் வளர்த்தும் இருக்கிறீர்கள். எது நடந்தாலும் நான் அவர்களிடம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். நீங்கள் கல்யாண வேலையை ஆரம்பியுங்கள் என்றாள் காஞ்சனா.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் இருக்கிறது என்றும் பட்டுப்புடவை எடுக்க திரும்புவனம் செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நீயும் வருவதாக இருந்தால் வரலாம் காஞ்சனாவிடம் அம்மா சொன்னார்கள். 

எனக்கு தானம்மா கல்யாணம், எனக்கு பிடித்த கலரில் தானே புடவை எடுக்க வேண்டும், அதனால் கண்டிப்பாக நானும் வருவேன் என்றாள் காஞ்சனா.

ஓகே, நீயும் வா அதனால் ஒரு தவறும் இல்லை, என்று சொன்னாள் அம்மா.

வெள்ளிக்கிழமை காலையில் ராகு காலத்துக்கு முதலிலேயே கடையில் அனைவரும் ஒன்றாக சந்தித்துக் கொண்டார்கள்.  

கடையில்  ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த கலரும் டிசைனும் கலந்த சுமார் 20  பட்டு புடவையை தனித்தனியாக  எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அதிலிருந்து  பத்து புடவை தேர்ந்தெடுத்து வைக்க அதிலிருந்து 5 புடவையை தேர்ந்தெடுத்தார்கள்.

இறுதியாக பொண்ணு மாப்பிள்ளை இருவரும் கலந்து உங்களுக்கு பிடித்த புடவையை எடுத்துக் கொடுங்கள் என்று சொன்னார்கள். 

இரண்டு பேரும் சேர்ந்து ஒரே மனதாக குங்குமப்பூ கலரில் புடவையை  எடுத்துக் கொடுக்க நாத்தனார் இருவருக்கும் நாம் எடுத்து வைத்த புடவையை எடுக்கவில்லையே என கோபப்பட்டார்கள். 

பிறகு நாத்தனார் இருவரும் மெதுவாக காஞ்சனாவிடம் இந்த புடவையின் கலர் உனக்கு எடுப்பாக இருக்காது என்று சொன்னார்கள். நான் கலராக தான் இருக்கிறேன்.  எனக்கு இந்த புடவை பிடித்தும் இருக்கிறது எடுப்பாகவும் இருக்கிறது. என்னை திருமணம் செய்து கொள்ளப் போகிற உங்க தம்பியும் நன்றாக இருக்கிறது என சொல்லிவிட்டார். 

இந்த புடவையே எடுத்து விடுங்கள் என்று காஞ்சனா  சொல்ல  அரக்கு கலரில் ஒரு புடவையை எடுத்து இந்த புடவையை எடுத்துக் கொள் இதுதான் உனக்கு அழகாக இருக்கும் என்று மீண்டும் நாத்தனார் வற்புறுத்த அந்த இடத்தில் ஒரு சின்ன கலவரம் உண்டானது. 

காஞ்சனாவின் பெற்றோருக்கு மாப்பிள்ளையின் அக்கா இருவரும் பேசியது பிடிக்காமல் போகவே இன்று புடவை எடுக்க வேண்டாம், மீண்டும் வரும் முகூர்த்த நாளில் புடவை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டார்கள்.

காஞ்சனா, நீ சொன்னது சரிதான் மா. திருமணத்திற்கு முன்பே இப்படி இருக்கிறவர்கள் திருமணத்திற்கு பிறகு என்ன வேணாலும் செய்வார்கள். பேசி தானே முடித்து இருக்கிறோம். நிச்சயம் ஒன்றும் செய்யவில்லையே,  அதனால் எங்களுக்கு இந்த இடம் பிடிக்கவில்லை என்று மாப்பிள்ளையின் அப்பாவிடம் பேசி விடலாம் என காஞ்சனாவின் அப்பா பேசிக்கொண்டே மாப்பிள்ளையின் அப்பாவிற்கு போட்டு தன் மனதில் உள்ளதை சொல்லிவிட்டு உனக்கு ஏற்ற சரியான மாப்பிள்ளை கிடைக்கும் என மகள் காஞ்சனாவை சமாதானப்படுத்தினார் காஞ்சனாவின் அப்பா. 

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வடைதிருடன் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 7) – ரேவதி பாலாஜி