in ,

பிள்ளையார் சுழி (இறுதிப்பகுதி) – வீ. சிவா

       2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

நினைக்க நினைக்க  ஏறத்தாழ  நடை பிணமாகிப்  போயிருந்தான் !

           நிதானமாக நடந்துப் போய் வீட்டின் முன்னாள் நின்றபோது மணி 11 இருக்கும். என்றுமே இல்லாதபடி மீனாட்சி வாசலிலேயே சுருண்டு படுத்து தூங்கிப்  போயிருந்தாள்… எதுவுமே தெரியாதவளாக !

          உள்ளே எட்டிப் பார்த்தான் சாமிநாதன்!

         போதையில் பிதற்றிக் கொண்டு கிடந்தான் மாரிசாமி!

          அப்பா ..

          ஓட்டல் முதலாளிக்கும் தான் இருந்து இறந்து போய் இருக்கிறார்.

          அப்பாவைபற்றிச் சொல்லி எப்படி எல்லாம் பெருமைபட்டுக் கொள்கிறார் முதலாளி ஆனால் நம்மால் எதைச் சொல்லி பெருமைப் போட்டுக்கொள்ள முடியும்?

          துக்கமாக வந்தது சாமிநாதனுக்கு! முதலாளி அடிக்கடி சொல்வார் ” சாமிநாதா …இந்த அளவுக்கு நா இருக்கேன்’னா … அதுக்கு அப்பாதான்  காரணம்… என்னக்கிமே தந்தை சொல்ல மிக்க மந்திரம் இல்லே..அவர் உயிரோட இருந்தப்பவும் சரி…இல்லாதப்பவும் சரி…” நினைத்துப் பார்த்தான்.

         தந்தை சொல்லமிக்க மந்திரம் இல்லைதான்…அந்த தந்தையே தவறான பாதையில் போகும் போது, அவர் தந்தையே இல்லையே…!

         “அப்பா….அப்பா…?” என்றான்.

          மூன்று. நான்கு  குரல்களுக்குப் பிறக்க, “என்னடா…?” என்றபடி புரண்டு படுத்தான் மாரிசாமி!

          “வேண்டாம்ப்பா இந்த வியாபாரம் …! என்றான் மெதுவாக….!

          “ஆரம்பிச்சிட்டியாடா …போய் தூங்கு…மூதேவி  தூங்கிட்டு இருக்கிறவனை எழுப்பி உபதேசம் பண்ணுது..” என்றபடி எரிந்து விழுந்தான்! எப்படி சொன்னாலும் மாரிசாமி இந்தத் தொழிலை நிறுத்த மாட்டான் என்பது மட்டும் சாமிநாதனுக்குப் புரிந்தது!

           சாமிநாதன் ஒரு முடிவுக்கு வந்தான்!

          “சரிப்பா…கடையிலேர்ந்து ‘சிக்கன் ‘ வாங்கிக்கிட்டி வந்து இருக்கேன்… அதையாவது சாப்பிடுங்க…! என்றான்”.

          “அடடா …சிக்கனா… கொண்டா கொண்டா …சிக்கனுக்கும் பட்டைக்கும் ரொம்ப ஜோரா இருக்கும்டா சாமிநாதா… இன்னிக்குத்தான் ஒரு உண்மையான மகன் ஸ்தானத்தில் இருந்து செய்றே… என்றபடி சுறுசுறுப்புடன் எழுந்து உட்கார்ந்தான்!

         ‘மகன் ஸ்தானத்திலிருந்து மட்டுமில்லப்பா…மனிதன் ஸ்தானத்திலே இருந்தும் கூட செய்யிறேன் …” என்று நினைத்துக் கொண்டான் சாமிநாதன்.

        ஒரே ‘தம்’ இரண்டு கிளாஸ் சரக்கு உள்ளே போனது!

         சாமிநாதனுக்கு மட்டும் துக்கம் தொண்டையை அடைத்தது!

         மகனை பார்த்துக் கொண்டே சிக்கனைத் தின்றான் மாரிசாமி!

         என்றைக்குமே மகனை அப்படி ஒரு கனிவுடன் அவன் பார்த்தது இல்லை.

         அவன் கண்களை நேரில் சந்திக்கும் திறன் அற்றுப் போய் இருந்ததால், சாமிநாதன் கீழே குனிந்துக் கொண்டான்.

         கண்களில் நீர் திரைக் கட்ட தொடங்கிய நேரம் …

        “ஐயோ …அம்மா… என்று அலறிக் கொண்டே கீழே விழுந்து துடித்தான் மரிசாமி.

         சப்தம் கேட்டு மீனாட்சி அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அண்ணனை இறுக அணைத்துக் கொண்டாள்.

        அவன் கண்களில் அதிகப்படியான பயம். தங்கையை இறுக அணைத்துக் கொண்டு அப்பாவையே பார்த்துக் கொண்டு நின்றான் சாமிநாதன்….

      கொஞ்சம், கொஞ்சமாக உயிர் போய்க்கொண்டிருந்தது மாரிசாமிக்கு!

       அப்பா போட்ட பிள்ளையார் சுழிக்கும் இவன் இப்போது போட்ட பிள்ளையார் சுழிக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகப்பட்டது  சாமிநாதனுக்கு!

         அப்படியே நின்றான்.

          இதைவிட வேறு வழி தெரியவில்லை அவனக்கு !

(நிறைவுற்றது)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காட்ராக்ட் ஆபரேஷனும் தன்னு பாட்டியும் (சிறுகதை) – சுஶ்ரீ

    வந்தது யாரு? (சிறுகதை) – முகில் தினகரன்