in ,

நட்பு உடைந்தது (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்கூட இப்படி ஒற்றுமையாய் இருக்க மாட்டார்கள்” என்று பார்ப்பவர்கள் அனைவரும் சொல்லும் அளவிற்கு நகமும் சதையுமாய் ஒட்டியே இருந்தவர்கள்தான் ‘பரிதா’ ‘அலமேலு’ தோழிகள். பள்ளியில் தொடங்கிய உறவு திருமணம் ஆனா பின்னும் தொடர்ந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இருவருமே …இருவீட்டுக்கும் சென்று உறவாடுவது வழக்கம்.அவரவர் வீடென்று பிரித்துப் பார்த்ததில்லை. இருவரின் கணவர்களும் இயல்பான தன்மையுடையவர்கள் …அதில் அலமேலு கணவர் கொஞ்சம் வேடிக்கையாகப் பேசுபவர் …எல்லோரையும் கிண்டல் செய்வார் ..பரிதாவையும் கிண்டல் செய்வார் …யாரும் தவறாக எண்ணியதில்லை

அனால், ஒரு முறை அலமேலு வீட்டிற்கு வந்த தூரத்து உறவு ஒன்று …இந்த உறவுமுறைகளைப் பார்த்து பொங்கியது. அலமேலு கடைக்குப் போன சமயத்துல வந்த பரிதா …

“அலமு…அலமு …அலமேலுவை அப்பிடித்தான் கூப்பிடுவது வழக்கம்.” என்று உள் நுழைய… அலமேலு இல்லை மார்க்கெட் வரை போய் இருக்க என்று அலமேலு கணவர் சொல்ல …இருவரும் கொஞ்ச நேரம் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விருந்தாளிக்கு வயிறு எரிந்தது.

அலமேலு கணவர்… பரிதாவிடம் சொல்லி விட்டு வெளியா கிளம்பியதும் …பரிதாவை நெருங்கிய விருந்தாளி விவகாரத்தை ஆரம்பித்தது.

“ஆமா  …நான் தெரியாமத்தான் கேக்குறேன் உன் புருஷன் சிரிச்சி பேசமாட்டானா? இங்க வந்து வழியிற”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பரிதாவுக்குத் தலையிலே நேராக இடி இறங்கியது போல் இருந்தது…இதுவரை எந்தக் கள்ளத்தனமும் இல்லாத நெஞ்சிலே நெருஞ்சி முள் குத்தியது…கண்கள் கலங்கியபடியே அங்கிருந்து போய்விட்டாள்

அலமேலு வீட்டுக்கு திருமப்பியதும் …விருந்தாளி தூபம் போட தொடங்கினாள் ..

“அலமேலு…அந்த பரிதா நடத்துகிறது ..உன் புருஷன் நடத்துகிறது கொஞ்சம் கூட நல்லா இல்ல ..அக்கம் பக்கம் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா ?”

“என்ன பேசிக்கிறாங்க …?”

“நீ இல்லாத நேரமா பாத்து அவ இங்க வந்துட்டுப் போறாளாம் ..நானும் பார்த்தேன் ..உன்கிட்ட சிரிக்கிறத விட அவகிட்ட நல்லா…வே சிரிக்கிறான் உன் புருஷன்”

“அவுங்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் ..அப்படியெல்லாம் நீங்க கற்பனை பண்ணிக்காதீங்க “

“என்னமோ…மனசுல தோணுச்சுச் சொல்லிட்டேன் ..ம் ..எந்தப் புத்துல எந்த நல்ல பாம்பு இருக்குதோ ?”

அலைபேசியை எடுத்து பரிதாவை அழைத்தாள் அலமேலு ..எப்பொழுதும் முதல் ரிங் போகும்போதே எடுக்கும் பரிதா ஆறுமுறை அழைத்தும் எடுக்கவில்லை .

அலமேலு மனசிலேயும் சந்தேகம் குடியேறியது … “பரிதா மேல தப்பு இல்லன்னா ஏன் போன் எடுக்க மாட்டேங்கிறா ..?”

யாருடைய கொள்ளிக்கண் பட்டதோ…? இருவரின் உறவுக்கு இடையே விழுந்த கீறலால் பட்டென்று  நட்பு உடைந்தது. பற்ற வைத்தவள் பஸ் ஏறிப்போய்விட்டாள்.

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கமலி பாட்டியும் விமலி பேத்தியும் (அலட்டல் 4) – ராஜேஸ்வரி

    கொஞ்சும் நிகழ்வு (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்