in , ,

கமலி பாட்டியும் விமலி பேத்தியும் 😜 (அலட்டல் 2) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அலட்டல் 1

“ஹப்பாடி, எப்படா ஞாயித்துகிழமை வரும்னு இருக்கு” என்று ஈஸி பெட்டில் (ஈஸி சேரின் புது அவதாரம்) கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு, “விமலிக்குட்டி டி.வி.யை ஆன் பண்ணு, எதாவது நல்லதா போடு, பாக்கலாம்” என்றாள் கமலி பாட்டி

விமலி ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டு வர பழைய பாடல் ‘வசந்த முல்லை போல் வந்து’ என்ற பாடல் ஒன்றும் அடுத்த சேனலில் ‘அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்’ என்ற பாடலும் வந்தது.

“ஹை,… எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. பாட்டி….ஈ, இத பாத்துட்டு உனக்கு போடறேன் .ப்..ளீ..ஸ்” என்றபடியே சோஃபாவில் அமர்ந்தாள் விமலி.

“இதென்ன பாட்டு அர்த்தமில்லாம” என்ற பாட்டியை குறுக்கிட்டு “என்ன ஒரு அழகான , அருமையானப் பாட்டு.பேசாமல் பாரு” என்று அதட்டினாள் விமலி.

பாட்டு முடியும் வரை கஷ்டப்பட்டு பேச்சை கன்ட்ரோல் பண்ணிக் கொண்டிருந்த பாட்டி, பாட்டு முடிந்த அடுத்த நொடி, விமலியை வம்பிழுக்க ஆரம்பித்தாள்.

“அதெப்படி,? அக்கம் பக்கம் யாருமில்லாமல் வாழ்ந்துட முடியுமா? என்ன பாட்டு எழுதறாங்க அர்த்தம் இல்லாம?” என்று விவாதத்தை ஆரம்பித்த பாட்டியிடம்,

“பாட்டி.. இது லவ் சீன் பாட்டு. இப்படித்தான் ஆசை வரும். உன்னை மாதிரி மனுஷாள்ட்ட பிக்கல், பிடுங்கல் இல்லாம யாருமே இல்லாத காட்டுல லவ்வரோட  வாழறது தான் எங்க யங் ஜெனரேஷனோட விருப்பம்” என்று பொங்கினாள் விமலி.

“எல்லா ஜெனரேஷன்லயும் இந்த மாதிரி ஆசை வரும். கல்யாணம் ஆன மறுநாளே உங்க தாத்தாவோட தனிக்குடித்தனம் வந்தவளாக்கும் நானு. எங்கிட்ட அளக்காத.. என்னோட பாயிண்ட் என்னன்னா ஒரு கடை கண்ணி இல்லாம, வாய் சண்டை போட யாருமில்லாம வாழ்ந்தா பைத்தியம் பிடிச்சுடாதோ?” என்று கேட்ட பாட்டியின் மூக்கை உடைக்க நினைத்த விமலி, “ஏன்? பொல்யூஷன்ஸ் இல்லாம நிம்மதியா இயற்கையோட இணைஞ்சு வாழலாமே? “என்றாள்.

“அது சரி….நான் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லு முதல்ல…”

(பின்வரும் கேள்வி எல்லாம் கமலி பாட்டி. பதில் எல்லாம் விமலி)

கேள்வி: சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க?

பதில்: இயற்கையான, பூச்சி மருந்து அடிக்காத , காய்கறிகள் ,பழங்கள், விதைகள் கொட்டைகள் ஆல் ஆர் நேச்சுரல் ப்ராடக்ட்.

கேள்வி: ஓகே, ஃபைன்…ட்ரெஸ், அலங்கார பொருட்களுக்கு என்ன பண்ணுவ?

பதில்: பூக்கள் தான் ஆபரணங்கள். இலைகளும், மரப்பட்டைகளும்,விலங்குகளின் தோலும் ஆடைகள்.

கேள்வி: ஆக மொத்தம் காட்டு மிராண்டினு சொல்லு.. வாரத்துல ஒருநாள் பிஸ்ஸா இல்லாம முடியாதே என்ன பண்ணுவீங்க?

இந்த கேள்விக்கு உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்த விமலி அடடா.. பாட்டி பாயின்ட்..டப் பிடுச்சுட்டாளே என்று மனதிற்குள் பேசியபடி அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாக “அதுக்கென்ன கோதுமையை  கல்லால அரைச்சு மாவாக்கி …”

 கேள்வி: அந்த ஜவ்வு மாதிரி இழுக்க வருமே சீஸ் ,அதுக்கு என்ன பண்ணுவ?.

பதில்” “அது….ஆங்..மாடு இருக்குமே பால் கறந்து காய்ச்சி சீஸ் தயார் பண்ணி…. ஐயோ… பாட்டி….. என்னை விட்டுடு. யாருமில்லாத காட்டுல வாழ்றது ரொம்ப ரொம்ப கஷ்டம்…நான் என்னோட ஆர்க்யூமென்ட்டை வாபஸ் வாங்கிக்கறேன்..” என்று பாட்டியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தாள் விமலி.

“இரு,இரு…இன்னும் ஒரே ஒரு கேள்வி..லவ் பாட்டுனாலே ஒரே உளறல் தான். அதெப்படி அவன் மூச்சுக்காத்துல இவ உயிர் வாழ்வா? அவன் வெளிவிடற காத்து கார்பன்-டை-ஆக்ஸைடு ,…அத இவ சுவாசிச்சா உயிர் போயிடாதா? லாஜிக் கே இல்லமன்னோ இருக்கு?”

“பாட்டி… நீ கேக்குற எல்லாக்கேள்விக்கும் ஒரே ஒரு ஆன்ஸர் சொல்றேன். ‘கவிதைக்கு பொய் அழகு’ ஆள விடு…”என்று சொல்லி விட்டு அப்பப்பா  இது சாதாரண பாட்டி இல்ல.. எமகாதகி என்று மனதிற்குள் நினைத்தபடியே அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள் விமலி.🥺

(லூட்டி தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கமலி பாட்டியும் விமலி பேத்தியும் 😜 (அலட்டல் 1) – ராஜேஸ்வரி

    சாந்தி வீடு (சிறுகதை) – ரேவதி பாலாஜி