கவிதைகள்

ஓர் இதயத்தின் கண்ணீர் (கவிதை) – ஆர்.ஸ்ரீப்ரியா – December 2020 Contest Entry 11

மனிதா!!!

விண்ணை தாண்ட முயற்சி செய்தாய் 

அதில் என் இதயத்தையும்

ஓட்டை செய்து விட்டாயே

 

ஆடம்பர வாகனத்தில் நீ பவனி வர

என் உடலை கரும் புள்ளியால்

கோலம் போட்டு விட்டாயே

இது நியாயமா!!!

 

கண்ணுக்கு பசுமையாய் மரம்

என் இதயத்தை குளிர்விக்கும் மரம்

உன் மனதில் மட்டும் ஏன்

வெட்டச் சொல்கிறது?

 

அழிவிலிருந்து  பிறப்பதும் ஆக்கம் 

ஆனால் ஒன்றை அழித்து பிறப்பது

ஆக்கமல்லவே

உனக்கு ஆறறிவு, ஆம்

அப்படி தான் சொல்கிறது விஞ்ஞானம்

அதில் ஒன்றுகூட

என் நிலமையை உனக்கு

எடுத்து சொல்லவில்லையோ!!

 

 மனிதா!!

எதை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறாய்

உன் அறிவியல் வளர்ச்சி எல்லாம்

உலகம் என்னும் ஆதாரம் இருக்கும் வரைதான்

ஆனால் அந்த பூமியை சூடாக்கி

எதை சாதிக்க பயணித்து கொண்டிருக்கிறாய்

உன் வேகத்திற்கு தடை போடு

சிறிது சிந்தித்து பின் விழித்தெழு

நான் தான் பிராணவாயு படிமம்

 

என்னை பாதுகாத்து

உன்னை காத்துக் கொள்

மனிதா!!!

Similar Posts

One thought on “ஓர் இதயத்தின் கண்ணீர் (கவிதை) – ஆர்.ஸ்ரீப்ரியா – December 2020 Contest Entry 11
  1. என்னைப் பாதுகாத்துக்கொண்டு உன்னைக் காத்துக்கொள் என்று “ஓர் இதயத்தின் கண்ணீர்” என்ற கவிதையில் சொல்லப்பட்டுள்ளது. இங்கு ஒரு முக்கியமான கேள்வியை மக்கள் முன் இந்தக் கவிதையை இயற்றியவர் எழுப்பியுள்ளார். அதை நான் வரவேற்கின்றேன். அதே சமயம், உலக விஞ்ஞான வளர்ச்சியை எப்படி நிறுத்தி வைக்க இயலும்? எவராலும் முடியாத ஒன்றாகும். இந்தக் கேள்விக்கு என்ன பதில் மிஸ், ஆர்.ஸ்ரீப்ரியாவிடமிருந்து? விஞ்ஞான வளர்ச்சி நமக்குத் பிடிக்கின்றதோ, பிடிக்கவில்லையோ அதன் போக்கில் தான் போகும் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஜஸ்ட் ஒரு கேள்வி? ‘Computer’-வளர்ச்சியை இந்த நூற்றிண்டில் யாராலும் நிறுத்தி வைக்க முடியுமா? பல நாடுகள் இதன் வளர்ச்சியில் ஆர்வத்துடன் பல சாதனைகளை நம்முடைய கண் முன்பேயே செய்து வருகின்றார்களே !!!

    – “ம.கி. சுப்பிரமணியன்”,
    சேப்பல் ஹில், வடக்கு கரோலினா,
    யு.எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!