in

அபூர்வ ராகம் (நாவல்)

“அபூர்வ ராகம்”  என்ற எனது இந்த நாவல், 2019ம் ஆண்டு பிரபல வார இதழான கண்மணி வார இதழ் நடத்திய நாவல் போட்டியில் வெற்றி பெற்றது. செப்டம்பர் 25, 2019 கண்மணி இதழில் பிரசுரிக்கப்பட்டது

குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது இன்று தினசரி செய்தியாகிவிட்டது. அப்படி ஒரு செய்தியை படித்த பாதிப்பில் எழுதப்பட்டது தான் இந்த நாவல்

அறியாத வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் இந்த கதையின் நாயகி, அந்த மன பாதிப்பின் காரணமாய், கணவனுடன் இயல்பான வாழ்வை வாழ இயலாமல் தவிக்கிறாள். அதை அவள் காதல் கணவன் எப்படி கையாள்கிறான், தன் மனைவியை அதிலிருந்து எப்படி  மீட்கிறான் என்பதே கதை 

நம் சமுதாயத்தில் இன்று முக்கிய பிரச்சனையாய் இருக்கும் இந்த கருத்தை மையமாய்க் கொண்டு, புனையப்பட்ட சுவாரஷ்யமான காதல் கதை தான் “அபூர்வ ராகம்”

இது நிச்சயம் வாசிப்பவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்த நாவல் எனக்கு நிறைய பாராட்டைப் பெற்றுத் தந்தது 

Kindle Unlimited Subscription பெற்றவர்கள், இந்த புத்தகத்தை இலவசமாக வாசிக்கலாம்

புத்தகத்தின் Amazon link இதோ 👇

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

மாண்ட்ரியல், கனடா (Montreal, Canada) – (பயணக்கட்டுரை)

Soft Skills Training – மென்  திறன் பயிற்சி (For All Age Groups)