in ,

அணுகுமுறை (ஒரு பக்க கதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“என்ன மரகதம், மருமகளை ரொம்பத்தான் தாங்கறே. இதெல்லாம் நல்லதுக்கில்ல. இப்படி இடம் கொடுத்தா நாளைக்கு நீ நடுத்தெருவுலதான் நிக்கணும் பாத்துக்க. என் மருமக என்கிட்ட பேசவே பயப்படுவா. இவ சரிக்கு சரி பேசறா. கண்டிக்க மாட்டியா நீ? கொஞ்சம் அடக்கி வை மரகதம்.”

“அங்கதான் தப்பு பண்றே ஜெயா. உன் மருமக உன்கிட்ட பயப்படணும்னு ஏன் நினைக்கறே? அவ என்ன உனக்கு அடிமையா? ஒரு பொண்ணு தன் சொந்தங்களை விட்டுட்டு நம்மளை நம்பி நம்ம வீட்டுக்கு வரான்னா, அவளுக்கு அவங்க வீட்டுல கிடைச்ச பாசமும் சந்தோஷமும் நம்ம வீட்டுலயும் கிடைக்கணும் இல்லையா. அவ நிம்மதியா இருந்தாத்தானே குடும்பம் நல்லாயிருக்கும். முதல்ல உன் மருமகள்கிட்ட பாசமா நடந்துக்க. அவளை சக மனுஷியா நடத்து. வாழ்க்கை எவ்வளவு நிம்மதியா மாறும் பாரு.”

நேர்மறையான கோணத்தில் மருமகளை அணுகும் விதத்தை மரகதம் சொன்னதும் ஜெயா யோசிக்க ஆரம்பித்தாள்.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஏக்கம் (ஒரு பக்க கதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    சொல்லாமலே (ஒரு பக்க கதை) – ஸ்ரீவித்யா பசுபதி