பச்சை நிறத்து பைங்கிளியே!!
என் இதயத்தை திருடிய பூங்கிளியே!!
மீன்களை போன்ற விழிகளை கொண்ட என் கண்மனியே!!
மூக்கு கண்ணாடியோடு புன்னகை கலந்த என் முகத்தழகியே!!
முத்து முத்தான பற்களை கொண்ட என் முத்தழகியே!!
வில்லை போன்று வளையக்கூடிய உடலை கொண்ட என் கட்டழகியே!!
சர்க்கரை பாகில் மிதக்கும் குலாப் ஜாமூனை போன்று இனிக்கும் என் இனியவளே!!
உன்னை பார்த்த பின்பு, என் இதயத்தை உன்னிடம் பறி கொடுத்து விட்டேனடி…
என் நிலவே!! என் இதயத்தை உன்னிடம் பறி கொடுத்து விட்டேன்..
உன் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கிறேனடி..
என் அன்பே!! நான் உனக்காக காத்து கொண்டிருக்கிறேன்..
நீ வராவிட்டால், அடி என் அன்பே!! உன்னிடமிருக்கும் என் இதயம் வாடி விடும்…
வதங்கி விடும்.. சுக்கு நூறாகி விடும்..
உன்னிடமிருக்கும் என் இதயம் வாடுவதற்குள், வதங்குவதற்குள், உயிரிழந்து போவதற்குள்..
என் கண்ணே, கனியமுதே, ஆருயிரே, என் நிலவே, வா, வந்து என்னோடு கலந்து விடு… என் ரோஜாவே…இந்த மன்னவனோடு கலந்து விடு!!!
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings