எழுத்தாளர் குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அப்பா ! உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நெனைச்சேன்.. என் கிளாஸ்மெட் ஷுபி அடிக்கடி வீட்டுக்கு வந்திருக்கா.. எங்கூட வேலையும் பார்க்கிறா. எனக்குப் பிடிச்ச பெண்… அவளையே எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்க.. அவங்க வீட்ல ஒன்னும் பிரச்சனையில்லை..
விக்னேஷ் மறுபடியும் இறைஞ்சினான்.
எனக்கு இந்த லவ் மேரேஜ் பிடிக்கலைப்பா.. உனக்கு வேற பெண் பார்க்கிறேனே…
அம்மாவுக்கும் பிடிச்சிருக்குப்பா… உங்களுக்கு என்ன பிரச்சனை ? மறுத்தீங்கன்னா நாங்க கோர்ட் மேரேஜ்தான் பண்ணிக்கனும். .
உன்னோட விருப்பம்.
விக்னேஷ் விருட்டென்று வெளியேறினான். அம்மா சரஸ்வதிக்குக் கண்கள் குளமாகின..
என்னங்க ! அது நல்ல குடும்பம்.. ஷுபியும் நல்ல பெண்தான்.. எதுக்குங்க உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ?
சீதாராம் மனைவியையே நோக்கினார்..
‘இங்க பார் ! கலியாணம் எளீமையா இருக்கனும்.. நான் ஒத்துக்கிட்டிருந்தா சங்கீத், மெஹந்தி, ரிசப்ஷன், அதுக்கெல்லாம் டிரஸ்னு செலவை இழுத்து விட்டிருப்பான்.. இப்பல்லாம் பையன் வீட்லேந்தும் பாதி செலவை ஏத்துக்கிறாங்கனு நியாயம் பேசியிருப்பான்.. நீயும் நகை, நட்டு, வரவங்களுக்கு புடவை வேஷ்டினு ஆரம்பிச்சிருப்ப.. நான் கஞ்சனும் இல்ல.. பேராசை பிடிச்சவனும் இல்ல. இப்ப நான் நமக்கு மட்டுமில்ல.. வரப்போற சம்பந்திக்கும் அநாவசிய செலவை நிறுத்திட்டேன்.. விக்னேஷ், ஷுபி பேர்ல பத்து பத்து லட்ச ரூபாய்க்கு டெபாசிட் எடுத்துக் கொடுத்துடறேன்.. விக்னேஷ் கோபம் கரைஞ்சிடும்.. என்ன.. சொந்தக்காரங்க கொஞ்சநாள் முணமுணப்பாங்க.. அதுவும் மறைஞ்சுடும்..
சரஸ்வதியிடம் பதிலில்லை.
எழுத்தாளர் குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings