வைகறைப் பொழுதில் விழித்து,
விரைவாக காலைக் கடன்களை எல்லாம் முடித்து விட்டு,
வயிற்றை அரை குறையாக நிரப்பிக் கொண்டு,
வேகமாக உற்சாகத்தோடு ஓடி,
வயல்வெளிக்குச் சென்று நாள் முழுவதும்,
வெயிலிலும் மழையிலும் பனியிலும் ,
வியர்வை சிந்த நமக்காக உழைத்து,
வெண்மையான அரிசியையும்,
வித விதமான காய்கறிகளையும்,
வகை வகையான பழங்களையும்,
வண்ண மயமான பூக்களையும்,
வேறு சில தானியங்களையும் தரும்
நம் நாட்டு விவசாயிகளுக்கு,
நாம் எல்லோரும் சேர்ந்து
வணக்கத்தை தெரிவிப்போம்……
மற்றும் வேளாண்மை மேம்பட விவசாயிகளுக்கு உதவுவோம்….
வாழ்க விவசாயி!!!!!
வளர்க அவர்களது சேவை!!!!!!
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings