மழை வந்தால் வானத்தில் இடி இடிக்கிறது, பசி வந்தாலோ வயிற்றில் இடி இடிக்கிறது;
மழைக்கு பயிர்கள் இரையாகின்றன, மனிதனின் பசிக்கோ அவனுடைய குடல்களே இரையாகுகின்றன;
மழை வெள்ளம் வந்தால் செடி கொடிகள் சேதமாகும், பசி வந்தாலோ மனிதனின் மானம், மரியாதை, வெட்கம் எல்லாமே சேதமாகும்;
மழை எல்லோரையும் தாக்கும், பசியோ ஏழையை மட்டும் தாக்கும்;
மழைக்காலத்தில் தான் பேய் மழை பெய்யும், பசிப் பேயோ எப்போது வேண்டுமானாலும் வரும்;
மழை வந்தால் நிலம் ஈரமாகும், பசிக் கொடுமைக்கோ வயிற்றை ஈரத் துணியால் மூட வேண்டும்;
மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும், பசிக் கொடுமையினால் மனிதனின் நாடி நரம்பெல்லாம் அடங்கி விடும்;
மழையோ தானாகவே கட்டுக்குள் வரும், பசியோ வயிற்றுக்கு உணவு கிடைக்காத வரை அடங்காது;
மழையோ இயற்கையின் விளையாட்டு, பசியோ விதியின் விளையாட்டு;
மழையை உணர்ந்தால் ஆனந்தம் வரும், பசியை உணர்ந்தாலோ, கோபம் தான் வரும்;
மழை இடம், ஏவல் எல்லாம் பார்த்து பெய்வதில்லை, பசியும் எதை பார்த்தும் வருவதில்லை;
மழை பெய்யாவிட்டால் பஞ்சம் வரும், ஆனால் பசியோ பஞ்சத்தால் வரும்;
மழைக்கு பகைவன், நண்பன் என்று எதுவும் கிடையாது, ஆனால் பசி வந்து விட்டாலோ நண்பனும் பகைவனாகி விடுவான்;
மழையின் வேகத்தை கணக்கிடலாம், பசியின் தாக்கத்தை கணக்கிட முடியாது;
சூரியன் மட்டுமே மறையும் மழையில், ஆனால் பசி வந்தாலோ எல்லாமே மறைந்து விடும் மயக்கத்தில்;
மழையால் ஏரிகள் ரொம்பி வழியும், பசியால் மனிதர்களின் வயிறு கொழுந்து விட்டு எரியும்;
மழை வெள்ளத்தாலும் பல உயிர்கள் போகலாம், பசி கொடுமையினாலும் பல உயிர்கள் போகலாம்;
மழையை மனிதனால் கட்டுபடுத்த முடியாது, ஆனால், பசிக் கொடுமையை நாம் நினைத்தால் ஒழிக்கலாம்…
பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிப்போம்!!!
பஞ்சத்தை ஒழிப்போம்!!!
மனித நேயத்தை காப்போம்!!!
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings