in ,

இதுவும் கடந்து போகும் (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஞாயிறு மதிய உணவு உண்டு, சற்று அசந்து உறங்க ஆரம்பித்தான் ராகவன். செல்போன் சிணுங்கியது , ஒரு வாட்ஸ் ஆப் தகவல் நண்பன் கிருஷ்ணனிடம் இருந்து வந்தது. அதில் வந்த செய்தியை பார்த்ததும் ராகவனுக்கு தூக்கம் தொலைந்தது.

“நண்பா ராகவா, நான் தூக்கு மாட்டிகிட்டு சாக போறேன். நான் இந்த உலகத்தில இருந்து யாருக்கும் எந்த பிரயோசனம் இல்ல. என்ன பெத்தவங்களும் , என் நண்பர்களும் எனக்கு கஷ்டத்துல உதவல. அவங்களே என்னை இந்த கடன் பிரச்சனையில் இருந்து காப்பாத்த நினைக்கல. வேற யாரு என்னை காப்பாத்துவாங்க , அதான் நான் சாக போறேன்  “ என்ற தகவல் வந்தது.

அதனை கண்டதும் , ராகவன் பதில் அனுப்பினான்.

“நண்பா கிருஷ்ணா , நீ சொல்றது உண்மை தான். நீ இந்த உலகத்தில் வாழ்ந்து யாருக்கும் பிரயோஜனம் இல்லை தான். செத்து போயிரு“ என்று அனுப்பி விட்டு புலம்ப ஆரம்பித்தான் ராகவன்.

“இவனுக்கு வேலை இல்லை , எப்ப பார்த்தாலும் சாக போறேன் , ஊரை விட்டு ஓட போறேன் , யாருக்கும் சொல்லாம எங்கயாவது போயிருவேன் என்று எல்லார்கிட்டேயும் மிரட்டிகிட்டே இருந்தா , போகட்டும் என்று தான் எல்லாரும் சொல்வார்கள். பிரச்சனைய முடிக்க என்ன வழி என்பதை யோசிப்பதே இல்லை.”

என்று புலம்பி தீர்வதற்குள், வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ கால் (போன்) வந்தது.அதில் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டு இருப்பதை நேரடியாக காண்பித்து கொண்டு இருந்தான் கிருஷ்ணன். அதனை கண்டதும் ராகவன் , சட்டென எழுந்து அவன் வீட்டை நோக்கி ஓடினான்.

கிருஷ்ணன் வீடு, பக்கத்து தெருவில் தான் இருக்கிறது , நடந்து சென்றால் ஐந்து நிமிடத்திற்குள் சென்று விடலாம். கிருஷ்ணன் வீட்டை அடைந்தான். கிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லை. உறவினர்களின் திருமண நிகழ்விற்கு சென்று உள்ளனர் கிருஷ்ணனின் அம்மா அப்பா.

வீட்டிற்குள் சென்று , கிருஷ்ணனின் அறை கதவை உடைத்து உள்ளே சென்றான் ராகவன். சில நிமிட போராட்டம் , கழுத்தில் இருக்கி கொண்டு இருந்த முடிச்சுகள் , ராகவனால் அவிழ்கபட்டது. கிருஷ்ணன் மூச்சிரைக்க கீழே விழுந்தான். அவனை காப்பற்றிய திருப்தியில் ராகவனும் மூச்சிரைத்த படி அமர்ந்தான்.

“பைத்தியமாடா , நீ. உயிரை விட்டுட்டா எல்லா பிரச்னையும் முடிஞ்சிருமா. நீ போனதுக்கு பிறகு அந்த பிரச்னையும் உன் பெத்தவங்களுக்கு தான் போகும். எந்த பிரச்னையும் நேரா எதிர்கொள்ள தைரியம் இருக்கணும். மத்தவங்கட்ட பேசும் போது நல்ல விதமா பேசணும், சாக போறேன்னு அடிக்கடி சொன்னா , உன்கிட்ட பேச யாரும் வரமாட்டாங்க. உன்னால வந்த பிரச்சனைய நீ எதிர்கொள்ள பயந்தா , உன் கூட இருக்கிறவங்க எப்படி அதுக்கு பொறுப்பு ஏத்துப்பாங்க. இதுவும் கொஞ்ச காலம் தான் , நீ நல்லா வருவ என்று, முதல்ல நீ நம்பனும். இதுவும் கடந்து போகும் , வாழ்க்கையில நல்லது, கெட்டது என்று மாறி மாறி வரும் , அதனை நாம ஏத்துக்கிற பக்குவத்திற்கு வரணும் , அவ்வளவு தான்.” என்று பேசி , கன்னத்தில் அறையாத குறைக்கு பளீர் என்று பேசி முடித்தான் ராகவன்.

ராகவனின் பேச்சு , கிருஷ்ணனுக்கு நல்ல பாடம் என்றாலும் , அதனை அந்த சூழலில் அவனால் ஏற்று கொள்ள கொஞ்ச நேரம் ஆகும். மனம் மாற முயற்சி செய்து கொண்டிருந்தான் கிருஷ்ணன். இதுவும் கடந்து போகும் என்பது கிருஷ்ணனுக்கு மட்டும் அல்ல , அனைவருக்குமே.

# இதுவும் கடந்து போகும் – இதுவும் சிறிது காலம் தான் , என்று வாழ்க்கையின் கடினமான நேரங்களில் நம் அனைவரின் மனதில் பதிய வேண்டும்.

# வாழ்க்கை வாழ்வதற்கே , மரணத்தை தேடி நாம் போக வேண்டாம் – அது வரும் வரை , வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோம்.

எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ்ந்தா அவர போல…! (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

    நான் இருக்கேன்பா (சிறுகதை) – மணிராம் கார்த்திக்