in ,

அலமரல் (அச்சம் – 2) – விடியல் மா.சக்தி

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சுபாகா போட்ட ‘ட்ரெஸ்’ கழட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க அவளை அப்படியே விட்டு விட்டு தனது உடைகளை களைந்து மாற்றிக் கொண்டு மதியம் சாப்பாடு செய்வதற்கு சமையலறைக்குள் நுழைந்தாள்.

அங்கே ஏற்கனவே அவளது மாமியார் லட்சுமி காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்க அதைப் பார்த்துவிட்டு, “அத்தை உங்களுக்கு எதுக்கு சிரமம் நானே பண்ணிக்கிறேன் நீங்க ‘ரெஸ்ட்’ எடுங்க” 

“எவ்வளவு நேரந்தாமா ‘ரெஸ்ட்’ எடுக்கறது அதான் காலையிலேயே ரெஸ்ட் எடுத்தாச்சே மத்தியானம் ஆகப்போவது சீக்கிரமா சாப்பாட்ட ரெடி பண்ணலாம் சுபாஷ் எப்ப வருவானோ? திடீருன்னு வந்துடுவான் ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணினா வேகமா முடிச்சிடலாம்மா “

“சரி அத்தை உங்க இஷ்டம் “

மாமியாரும் மருமகளும் பல கதைகளைப் பேசிக்கொண்டே சமையலை சீக்கிரமா முடித்து விட்டு வெளியே வந்தனர்.

மதியம் ஒரு மணி ஆகியிருந்தது. சுபாஷை காணவில்லை, உடனே நேகா அவனது செல்போனுக்கு அழைத்தாள், ஆனால் அவனுடைய போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

உடனே மீண்டும் அழைக்க அது அதே பதிலை மீண்டும் தந்தது. சிறிது நேரம் கழித்து லட்சுமியும் சுபாஷின் அப்பா ராமசாமியும் மதியம் சாப்பிட டைனிங் டேபிளுக்கு வந்தனர் உடனே நேகா, “மாமா அவரு உங்களுக்கு ஏதும் போன் பண்ணினாரா? ” 

“இல்லியேம்மா எதுவும் பண்ணல” 

“நான் கூப்பிட்டேன் போன் ஸ்விட்ச் ஆஃப் ன்னு வருது அதான் கேட்டேன்” 

“இல்லம்மா நானும் கூட பண்ணிப் பார்த்தேன் ஆனா போன் போகல அந்த குணசீலனுக்கு என்னாச்சுன்னு விசாரிக்கலான்னு பண்ணினேன் ஆனா போன் போகலயே”

“மாமா அந்த போன மாத்த சொன்னா கேட்கவே மாட்டேங்குறாரு எத்தனை தடவை சொல்றது “

“விடும்மா மிஸ்டு கால் பார்த்துட்டு அவனே கூப்பிடுவான் நாம சாப்பிடுவோம் “

நேகா சுபாகாவுக்கு சாப்பாடு கொடுக்க ஆரம்பிக்க, அவர்கள் இரண்டு பேரும் சாப்பிட்டு விட்டு எழுந்தனர். 

“லட்சுமி நான் வயல் வரைக்கும் போயிட்டு வந்துடறேன் சுபாஷ் வந்தான்னா எனக்கு போன் பண்ண சொல்லு “

“சரிங்க ” என்று சொன்னாள் லட்சுமி

சொல்லிவிட்டு ராமசாமி சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். லட்சுமியும் பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு ரெஸ்ட் எடுக்க போனாள். 

நேகா சுபாகாவுக்கு சாப்பாடு கொடுத்து முடித்து, தானும் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு எழுந்தாள். பெட்ரூமில் சுபாகாவை படுக்கவைத்தாள் கொஞ்ச நேரத்துலேயே குழந்தை உறங்க மீண்டும் சுபாஷின் போனுக்கு கால் போட்டாள் இந்த முறையும் ஸ்விட்ச் ஆஃப் என்று வர நேகா எரிச்சலானாள்.

‘வரட்டும் முதல்ல அந்த போன மாத்திட்டுதான் மறுவேலை’ என்று மனதுக்குள் கர்வி கொண்டே அவளுடைய போனை எடுத்து நோன்ட ஆரம்பித்தாள்.

நேரம் எப்படி போனதென்று தெரியாமல் பட்டென சுபாஷின் ஞாபகம் வர உடனே போன் பண்ணினாள் போன் ரிங் ஆனது, போன் முழு ரிங் முடிந்து கட் ஆனது.

‘இவர் ஏன் போனை எடுக்க மாட்டேங்குறாரு’ என்று நினைத்து கொண்டு மீண்டும் போன் போட்டாள் இந்த முறையும் போன் ரிங் ஆனது. இந்த முறை எதிர் முனையிலிருந்து,  “ஹலோ” என்றது

ஹலோ என்ற குரலை கேட்டதுமே நேகா உடனே அறிந்து கொண்டாள் அது சுபாஷின் குரல் அல்ல என்று. இவள் உடனே

“ஹலோ நீங்க.. யாருங்க அங்க சுபாஷ் இல்லைங்களா” 

“ஹலோ நீங்க சுபாஷ் சாரோட ஒய்ஃப்பா” என்று எதிர் முனை கேட்க 

“ஆமாங்க நான் அவரோட மனைவிதான் அவரு இல்லையா? நீங்க யாரு? அவரோட போன் உங்க கைல எப்படி?” 

“அதுங்களா இங்க ஒரு ஆக்ஸிடெண்ட் அதான்….” 

போன் உடனே கட் ஆகிப் போனது

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆரோக்கிய வாழ்விற்கு யோகா (ஆரோக்கியம்) – பாலாஜி ராம்

    தீராத சுமை (சிறுகதை) – ஹேமா பிரேம்