in , ,

வைசாக் விஜயம் (பகுதி 1) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

சடகோபன் அந்த பத்திரிக்கையை கொண்டு வந்தான், முந்தா நாள் பேஞ்ச மழைல விலாசம் பூரா ஆகாசக் கலர்ல சாயம் அப்பிப் போயிருந்தது. யாருக்குனு ஒண்ணும் புரியலை. அதை மேலே கொண்டு வரணும்னு இந்த சடைக்கு ஏன் தோணித்து தெரியுமோ. பாருவோட நுரை ததும்பற மணக்கும் காபி’ வாரத்துல ரெண்டு நாள் ஏதாவது காரணம் சொல்லிண்டு பாட்டி, பாட்டினு நுழைவான்.

பாரு பாட்டிக்கும் சடகோபனை பிடிக்கும். பாவம் 44 வயசாயும் பிரம்மச்சாரி,அவனுக்கு ஏன் கல்யாணம் ஆகலைனு அந்த ஏரியால இருக்கற பொம்மனாட்டிகட்கு வேற வேற அபிப்ராயம். வேற சப்ஜெக்ட் எதுவும் இல்லன்னா ரேஷன் கடை க்யூல நிக்கறப்ப, காய்கறி வண்டி வந்து எல்லாரும் கூடி நிக்கறப்ப அவன் தலைதான் உருளும்.

இப்ப சடகோபன்.பாட்டி இந்த பத்திரிக்கை உங்களுக்கா வந்திருக்கு பாருங்கோனு கத்திண்டே வந்தான், காபி மணத்தை மோப்பம் பிடிச்சிண்டே.

பஞ்சாபகேசன், அந்த பத்திரிக்கையை வாங்கி புரட்டி பாத்தார், கொஞ்சம் பலமாவே “ஏண்டி பாரு ஒரு பேர் கூட தெரிஞ்ச பேரா இல்லையே. கல்யாணம் விசாகப் பட்டிணத்தில, நமக்கு சொந்தம் யாராவது வைசாக்ல இருக்காளா என்ன”

பாரு பாட்டி ஒரு காபி டம்ளரை சடகோபன் கிட்ட நீட்டினா, பஞ்சபகேசனோட வழக்கமான டபரா, டம்ளர்ல அவருக்கு பக்கத்துல வச்சா.

பாரு பாட்டி” கண்ணாடி போட்டுண்டாலே சின்ன எழுத்தா பிரிண்ட் பண்றான், கலர்ல பண்றான்னு, ஆயிரெத்தெட்டு கோளாறு சொல்வேள், இதுல கண்ணாடி போடாம என்னத்தை தெரியும், கொடுங்கோனு“ வாங்கி தன் கண்ணாடியை புடவை தலைப்புல துடைச்சு மாட்டிண்டு அந்த மஞ்சள் கலர் பத்திரிக்கையை புரட்டி பாத்தா.

“தெலுங்குலன்னா இருக்கு உள்ளே, பின்னம்பக்கம் இங்லீஷ், ம்ஹூம் இதுல யாரும் நமக்கு தெரிஞ்சவா இல்லை போஸ்ட்மேன் மாத்தி போட்டிருப்பான்.,பின்னால முருகேச பந்துலுன்னு பெரிசா போட்டிருக்கா.”

“ஏண்டி, பாரு நாம பீளமேட்ல இருக்கறப்ப மூங்கிக்காடு முருகேசன்னு ஒத்தர் பக்கத்துப் போர்ஷன்ல ஜோசியம் பாப்பாரே அவரா இருக்குமோ”                             

பாட்டி, “ஒரு மூணு மாசம் பக்கத்து வீட்ல இருந்தார், அவரோட முகத்தை கூட சரியா பாத்ததில்லை”

“இல்லை அவராதான் இருக்கும், ஒரு சிட்டிகை மூக்குப் பொடிக்காக நம்ம போர்ஷன் ஒட்டுத் திண்ணைல தொங்கி தொங்கிப் பாத்துண்டு உக்காந்திருப்பார்”

“அவர் எப்ப வைசாக் போனார், அப்படியே அவரா இருந்தாலும் கல்யாணம் பண்ற வயசுல யாரும் இருந்ததா தெரியலையே. இந்த விலாசம் எப்படி அவருக்கு தெரியும்”

“எல்லாத்தையும் இவ்வளவு தோண்டித் துருவி பாக்காதேள், யாரோ கூப்டிருக்கா நாமளும் வெளியூர் போய் ரொம்ப நாளாச்சு போயிட்டுதான் வருவோமே”

“ஆமாம் பத்திரிகை உள்ளே தெலுங்குலன்னா இருக்கு, ”

“அதனால என்னடி தெலுங்குல கூப்டா போகக் கூடாதா என்ன”

“சரி, சரி, சிம்மாசலம் நரசிம்மர் கூப்பிடறார் போல இருக்கு போலாம் ஏற்பாடு பண்ணுங்கோ”

பஞ்சு தாத்தாவோட மார்னிங் வாக் வர சின்னவாடு முதல்ல இந்த பில்டிங் கீழ் ஃபிளாட்ல குடி இருந்ததால நல்ல பழக்கம். இப்ப நாலு வீடு தள்ளி இருக்கார்.அவர்கிட்ட சொல்லி 2 பிளைட் டிக்கெட், ஹோட்டல் புக் பண்ணியாச்சு

“ஏன்னா, பாஸ்போர்ட் டிக்கெட்லாம் முன் பாக்கெட்ல பத்திரமா வச்சிக்கோங்கோ, உங்க இந்த கோட்ல 10 பாக்கெட் இருக்கு எதுல வச்சோம்னு அங்கே போய் தடவக் கூடாது”

 “போடி பைத்தியம் இது உள்நாட்டு முனையம் பாஸ்போர்ட் தேவையில்லை.”

 “என்னவோ பண்ணுங்கோ அங்கே போய் முளிக்காம இருந்தா சரி”

பாட்டி சொன்னாப்பலயேதான் நடந்தது. ஏர்போர்ட் கேட்ல செக்யூரிடி நின்னிண்டிருந்தார், அந்த மிலிட்டரி, ஐடெண்டடி புரூஃப்னு கேட்டார். பஞ்சு தாத்தா முளிச்சதை பாத்து, பாட்டிதான், உங்க கோட்டு உள் பாக்கெட்ல ஆதார்கார்டு இருக்கும் பாருங்கோன்னா.

அவ்வளவு ஈசியா கிடைச்சிடுமா, தேடற பாக்கெட்ல தேவையில்லாத காகிதம்தான் முதல்ல கிடைக்கும், அஞ்சுகத்தோட பேத்தி ஜாதகம், அடையார் ஆனந்த பவன் பில்லு, பத்திரமா மடிச்சு வச்ச திருச்சானூர் குங்கும பிரசாத பொட்டலம். ஒரு வழியா ஆதார் கார்டும் கடைசில கிடைச்சது.                                

உள்ளே போனா எங்க பாத்தாலும் வரிசை,.பஞ்சு தாத்தா,ஒரு நீலப் புடவையோட தரையை சுத்தம் பண்ற பொண்ணுகிட்ட, “நாங்க விசாகப் பட்டணம் போறோம்.”

அந்த அம்மா குனிஞ்ச தலை நிமித்தாம,”சந்தோஷமா போயிட்டு வாங்க ஐய்யா”

“அதில்லை, எப்படிப் போகணும்னு தெரியலை, இண்டிகோ ஃபிளைட்,“

“அதுவா பீச்சாங்கை பக்கம் நெட்டுக்க போய், சோத்தாங்கை பக்கம் திரும்பு.”

கண்டுபிடிச்சாச்சு இண்டிகோ வரிசையை. தன் சோத்தாங்கையால், பீச்சாங்கையை குலுக்கி தன்னையே பாராட்டிக் கொண்டார்.

ஒரு வழியா போர்டிங் பாஸ் வாங்கி, செக்யூரிடி செக் முடிஞ்சு கேட் திறந்தவுடனே நுழைஞ்சா, அழகாய் சிரித்த அந்த பெண் போர்டிங் பாசை பாத்துட்டு வெல்கம் சார், வெல்கம் மேடம் உள்ளே பஸ்ல உக்காருங்கன்னா.

பாரு, “என்னன்னா இவ்வளவு தடபுடல் பண்ணிட்டு பஸ்ல போச் சொல்றா, பிளேன் கேன்சலா.”

 “அதேதான் எனக்கும் சந்தேகம்”

இண்டிகோனு எழுதின பஸ் நின்னிட்டிருந்தது.பஞ்சு சொன்னார், ஃபிளைட் வரை பஸ்ல கூட்டிண்டு போவா போல இருக்கு.

ஆனாலும் இடது பக்கம் உக்காந்திருந்த ஒரு பாட்டி, “இதுதான் பஸ்ட் டைம் ஃபிளைட்டானு“ கேக்கறா பாருவை பாத்து.

பாரு பாட்டி லேசுப் பட்டவளா என்ன அந்த பாட்டியை ஸ்டைலா பாத்து, “ எங்க சிங்கப்பூர்ல, ஆஸ்ட்ரேலியால எல்லாம் ஏர்போர்ட் கேட்-டு-பிளைட் வெஸ்டிப்யூல் இருக்கும், இப்படி பஸ்ல அலைக்களிக்க மாட்டா, இண்டியா ஹேஸ் டு இம்ப்ரூவ் எ லாட்”னு சொல்லிட்டு தன் கண்ணாடியை ஸ்டைலா தூக்கி விட்டுண்டா. அந்த பாட்டி முகத்தை திருப்பி உக்காந்தா, அதுக்கப்பறம் பேசலை.

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தாயுடன் சேர்ந்த சேய் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 13) – ஜெயலக்ஷ்மி