in ,

அவளா? (சிறுகதை) – பிரேமா ரமணி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“ஆ…அவளா?”

ராதா திடுக்கிட்டூப் போனாள். பள்ளியில் இருந்து மகனை அழைத்து வரப் போனவள் அந்தப் பள்ளியில் வேலை செய்யும் அவளைப் பார்த்தாள்.

குழந்தைகளை ஜாக்கிரதையாக பஸ், கார், ரிக்சா என்று பார்த்து அனுப்பும் நால்வர் குழுவில் இருந்தாள். போன வாரம் திருமணம் ஆகிப்போன வள்ளிக்குப் பதிலாக வந்திருக்கிறாள் போலும்.

ராதா பயந்தாள். எப்போதும் அவள் மாமியார் தான் குழந்தையை அழைத்து வருவாள். தங்கை மகள் கல்யாணம் என்று ஊருக்குப் போயிருக்கிறாள்..ராதா வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள்.

அவள் பெயர் ஆண்டாள், ஆறு வருடங்கள் முன்பு அரசு ஆஸ்பத்திரியில் ஆயா வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். அங்கே தான் ராகவன் பிறந்தான்.

கல்யாணம் ஆகி பத்துவருடங்களாகக் குழந்தை இல்லை.தவமாய் தவமிருந்து வயிற்றில் உதித்த குழந்தை. நள்ளிரவில் வலி எடுத்ததால் சட்டென்று அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

ராதா கண்விழித்துப் பார்க்கையில் அருகில் தொட்டிலில் இருந்த குழந்தை இறந்து கிடந்தது. அருகே இந்த ஆண்டாள்.

“குழந்தை செத்துப் போச்சும்மா”.

கதறினாள் ராதா. தன் கழுத்தை தானே நெறித்துக் கொள்ளப் பார்த்தாள். ஆடிப்போய் விட்டாள் ஆண்டாள்.

“தே…சும்மாயிரு.இது போனால் இன்னொன்னு”

“இல்லே..இதுவே பத்து வருஷம் கழிச்சு பிறந்தது. குழந்தை இல்லேன்னா என் மாமியார் என் புருஷனுக்கு வேறு கல்யாணம் செய்து வைப்பதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்தார். நான் குழந்தை இல்லாமல் போனால் வீட்டிலேயே சேர்க்க மாட்டார்.

“இங்கே இன்னிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதோட அம்மா இங்கேயே போட்டு விட்டு போய் விட்டாள். கல்யாணம் ஆவாம பிறந்தது போல.இதை மாத்தி வெச்சிடறேன். பணம் தருவியா?”

ராதா சட்டென்று தன் ஐந்து பவுன் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தாள். ஹாஸ்பிடலில் தொலைந்து விட்டதாகச் சொல்லிக் கொள்ளலாம். அப்படி மாற்றிய குழந்தை தான் ராகவன். மீண்டும் இப்போது தான் ஆண்டாளைப் பார்க்கிறாள்.

“அம்மா… நீங்களா?”

“உங்கள் குழந்தை இங்கே படிக்குதா?”

பள்ளி முடிய இன்னும் பத்து நிமிடம் இருந்தது. ராதாவை கேட் அருகே அழைத்துப் போன ஆண்டாள் அவள் காலில் விழுந்தாள்.

“இங்கே பார்.. என் குழந்தையை திருப்பிக் கேட்காதே. தன் பேரனில்லை என்று தெரியாமல் என் மாமியார் வாய்க்கு வாய் அவன் தன் கணவரைப் போல் இருப்பதாகச் சொல்கிறார். குழந்தை பிறந்த சந்தோஷத்தில் சங்கிலி தொலைந்ததற்குக் கூட திட்டவில்லை. இப்போ இவன் என் குழந்தை இல்லை என்று சொல்ல முடியாது”.

“அம்மா.. என் புருஷன் குடித்துக் குடித்து செத்து விட்டான். ஒரே மகள், அவள் கல்யாணத்திற்காகத்தான் குழந்தைகளை விற்று பணம் சேர்த்தேன். அன்று செத்தது அனாதைக் குழந்தை. அதை உன் பக்கத்தில் போட்டு விட்டு உன் குழந்தையை ஒளித்து வைத்தேன். வேறே யாருக்கேனும் விற்கலாம் என்று, நீங்களே சங்கிலி தரவும் உங்கள் குழந்தையையே உங்களுக்குத் தந்து விட்டேன். வேறு ஒரு திருட்டு வழக்கில் போலீஸ் என்னைப் பிடித்துப்போக ஒரு ரௌடி என் மகளைக கற்பழித்துக் கொன்று விட்டான். என் பாவம் என் மகளைக் கொன்று விட்டது. இதோ உங்கள் சங்கிலி, என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. நீங்கள் வளர்ப்பது உங்கள் மகனே தான்”

கழுத்திலிருந்து சங்கிலியைக் கழற்றித் தந்தாள். ராதா மறுத்தும் விடவில்லை. ராகவ் தன் குழந்தை தானா, ராதா கண்ணீர் பெருக பள்ளி விட்டு வந்த குழந்தையை அணைத்துக் கொண்டாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 13) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    கனவுல ஒரு சாமியார் வந்து (சிறுகதை) – முகில் தினகரன், கோவை