in ,

ஆசி(சு)இரியர் (சிறுகதை) – நிவேதிகா அஜந்தன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

எப்பதான் தன்ர மனசுல மறக்க முடியாத குருவாய்த் திகழும் கணக்கு வாத்தியைப் பாத்து ஆசிர்வாதம் வாங்கலாம் என்று தினமும் போகும் பாதை எல்லாம் சேரைக் காணுவனா என்று தேடுற பானு எப்பவும் மனசில நினைக்கிறது சேரின்ர வார்த்தைகளும் ஊக்குவிப்புக்களும் அவரின்ட மொழி நடையும் தான் தனக்கு முன்மாதிரியாக இருந்து தன்ன வளப்படுத்தியதென்றும் அவரை பாத்தா தான் இப்ப ஒரு ஆசிரியராக இருக்கிறத சொல்லி அவரிட்ட சொல்லிடணும் என்றதைத்தான்.

வழமை போல இந்த எண்ணத்தோடயே பஸ்ஸில ஏறின பானு பேச்சுத் துணைக்கு ஆளில்லாததால யன்னல் கம்பியில சாய்ந்தபடி பழைய நினைவில மூழ்கிப் போனாள்.

படிக்குற காலத்துல ஒருநாள், “என்னடி இது கணக்கில முப்பது மாக்ஸ் வாங்கிப் போட்டு நல்லா ரிவிக்கு முன்னால இருக்கிறாய்” என்று பானுன்ர அம்மா கவிதா கத்தேக்க தான் பானுவுக்கு உறைச்சுது தான் நல்லாப் படிக்க வேணும் என்று.

“என்ன செய்யுறதெணை எனக்கிந்த கணக்கு என்றாவே பயமாக் கிடக்கெணை” என்று சொல்லி வாய மூடுறதுக்கிடையில பானுன்ர அப்பர் வாத்தியார் சுந்தரம் தன்ர பங்குக்கு “இவளால பள்ளிக்கூடத்துல மானமே போகுது, பப்ளிக் எக்ஸாம் அடுத்த வருசம் எழுதப்போற பிள்ளை இப்புடி மாக்ஸ் எடுத்தா எங்கட றிசல்ட்ஸ் குறைஞ்சிடுமாம் என்று அங்க வாத்திமார் ஒரே புலம்பல்.” என்று தன் ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்தார்.

“அப்பா எனக்கு ஏனோ தெரியேல்ல கணக்குப்பாடம் என்றாலே புதிராக் கிடக்கு நீங்க சொல்லுற மாதிரிப் படிக்கிறன். எனக்கும் நல்ல றிசள்ஸ் வேணும் தானே.”என்றாள் பானு அப்பாவியாக. மனமாற்றத்தைக் கண்டு மகிழ்ந்த சுந்தரத்துக்கு அப்ப தான் தோணிச்சு பிள்ளைய நல்ல ஒரு வாத்தியாரிட்ட விடுவம் என்று. அப்பவே போய் தன்ர போன்ல இருந்த பிரண்ட்ஸ் மூலமா ஒரு வகுப்ப வீட்டுலயே ஒழுங்கு படுத்தினார் சுந்தரம்.

 அப்ப தான் பானு அவளின்ர சேர் சயந்தைப் பார்த்தாள். அவரப் பாத்தாலே பயப்பட்ட பானு கொஞ்சம் கொஞ்சமா தான் மாறினாள்.

“நீ நல்லா வரவேணும், அப்பரின்ட பெருமையைக் காக்கோணும், உனக்கு நல்ல ஆங்கிலப் புலமை இருக்கு, நல்லா விளையாடு” என்று சொல்லிச் சொல்லி கணக்கை அவளுக்காக உடைச்சு உடைச்சு ஆழமாக சொல்லிக்குடுத்த சேர் அவளின்ர றிசள்ஸை கேக்காம எந்த தொடர்புமில்லாம போனது பானுன்ட மனசில ஒரு ஆழமான மரியாதையையும் அவரிட்ட உங்களால தான் சேர் நான் ஆசிரியத்தைப் புரிந்தேன்  என்று சொல்லும் எண்ணத்தையும் ஆழமாக்கியது.

“ரீச்சர் ஸ்கூல் வந்திட்டு” என்று பக்கத்து சீட் மாணவி சொல்ல கனத்த மனதுடன் சேரை நினைச்சபடி இறங்கிப் போனாள் பானு.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விடாத கருப்பு (சிறுகதை) – தி.வள்ளி திருநெல்வேலி.

    டேபிள் மேனர்ஸ் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை