in ,

உண்மையும் பொய்யும் கரையும் (சிறுகதை) – ச. பூங்குழலி, வடசேரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

சித்ராவின்  ஒரே மகளான அஞ்சுகத்தின் திருமணம்  இனிதே முடிந்திருந்தது. அஞ்சுகம் தனது மாமியார் வீட்டுக்கு  கணவனுடன் செல்ல தயாரானாள். சித்ராவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது, வாய்விட்டு அழுதாள்.

“மகளே அஞ்சுகம் என்னை விட்டு செல்லாதே என்னை விட்டு செல்லாதே அஞ்சுகம்” என வாய்விட்டு கத்தி அழுதாள்.

யாரோ தன்னை தட்டி எழுப்புவது போல தோன்ற கண் விழித்த சித்ராவிற்கு கண்ணீர் கரை புரண்டு ஓடியது. காரணம் கண்டது கனவு, ஆமாம் அருகில் நின்றவனோ கணவன் வசந்த்.

“யாரு அஞ்சுகம்?” என்றான் வசந்த், சித்ராவை எழுப்பியபடியே.

சித்ரா சுயநினைவு திரும்பியவளாக “என் மகள் அஞ்சுகம்” என்று கதறி அழுதாள். வசந்த் ஒன்றும் புரியாமல் புருவங்களை உயர்த்தினான்.

ஏனெனில் சித்ராவிற்கு திருமணம் முடிந்து ஏழு வருடங்களாக குழந்தை இல்லை. எவ்வளவோ மருத்துவம் செய்தும் பயனில்லாமல் செயற்கை முறையில் குழந்தைக்கு ஏற்பாடு செய்து இரண்டாவது முறையாக அதுவும் வெற்றி பெறவில்லை.

இனி சித்ராவிற்கு குழந்தை பேறு என்பது இல்லை என்ற நிலையில் அவள் கண்ட கனவு அவளை மேலும் துயர படுத்தியது. வசந்திடம் தான் கண்ட கனவு பற்றி கூறினாள். அதற்கு அவனும்  கண் கலங்க   “நான் சொல்வது போல் செய்திருந்தால்  இவ்வளவு நிம்மதி இல்லா  நிலை வருமா?” என்றான் வசந்த்.

ஆமாம் சித்ராவிற்கும் வசந்திருக்கும்  எந்தவிதமான செல்வ குறைபாடும்  இல்லாதவர்கள். பெரிய பங்களா போன்ற வீடு. திருமணமோ ஏக தடபுடலாக இரண்டு மூன்று ஊர்களை சேர்த்தால் போன்ற கூட்டம். நகை நட்டு பாத்திரம் நான்கு  கார் என மிகவும் வசதி வாய்ந்தவர்கள். ஆனால் குழந்தை பேறு இல்லாததால் அந்தப் பெரிய பங்களாவில் என்றும் அமைதி நிலவியது சோகமும் குழந்தை இல்லையே என்ற உண்மையை நினைத்து நினைத்து அழுது கொண்டிருக்கும் சித்ராவும் வசந்தும் எந்தவிதமான சந்தோஷமும் இல்லாத வாழ்வையே வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது வசந்த் குழந்தை ஒன்றை தத்தெடுத்து கொள்ளலாம் என்ற போது  சித்ராவோ ஜாதி பேதம் அந்தஸ்து என பல்வேறு காரணங்களை கூறி தட்டு கழித்தாள். இன்றோ இந்த நிலை. இனி குழந்தைக்கு வழி இல்லை என்று தெரிந்தவுடன் மிகுந்த சோகத்துடன் தன் பெரிய பங்களாவை நோக்கி புறப்பட்டனர்.

தன் பங்களாவின் காம்பவுண்ட் சுவர் ஓரமாக ரோட்டிற்கு தார் போடும் வேலை செய்யும் முனியனும் கருப்பாயும்  தார் படுதா ஒன்றைக் கட்டிக் கொண்டு குடும்பம் நடத்தினர். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைகள் மற்றொன்று வயிற்றில் என பிள்ளைகளை வளர்க்க இயலாத வண்ணம் பெற்றெடுத்திருந்தனர்.

சித்ராவின் மனம் தன்னையும் அறியாமல் ஜாதி மதம் என்ற பொய் கரைய காரை விட்டு இறங்கி விடு விடு என கருப்பாயிடம் சென்றாள். கருப்பாயின் கைகளை பற்றி கொண்டு தத்தி தத்தி நடக்கும் அவளின் ஐந்தாவது  பெண் குழந்தை பார்த்து “எனது அஞ்சுகத்தை என்னிடம் தந்துவிடு” என்றாள்.

கருப்பாயி பல நாட்களாக சித்ராவின் துயரத்தை கண்காணித்தவள். பெயர்தான் கருப்பாயி உள்ளம் என்னவோ வெள்ளைதான் “உடனே எடுத்துக் கொள்ளுங்கள், அவ்வப்போது நான் வந்து பார்க்க மட்டும் அனுமதி வேண்டும்” என்றாள். உடன் பிறந்தவளை கட்டிக் கொள்வது போல் ஆற தழுவினாள் சித்ரா கருப்பாயியை.

இப்பொழுது சித்ராவின் பெரிய பங்களாவில் அஞ்சுகத்தின் தத்தி தத்தி நடக்கும் சலங்கை ஒலியாலும் சித்ரா மற்றும் அஞ்சுகத்தின் சிரிப்பொலியாலும் மௌனம் கரைந்தது, ஜாதி பேதம் என்ற பொய்யும்  கரைந்தது, பிள்ளை பேறு இல்லை என்ற உண்மை கரைந்தது.

ஆனால் சித்ராவின் கண் மை கரையவில்லை. பிள்ளை பேறு இல்லை என்ற பேச்சுக்கள் காற்றில் கரைந்து போயின. பேசியவரகளில் பாதி பேர் காற்றில் கரைந்து போயினர். இப்போது புரிந்தது சித்ராவிற்கு நன்மை என்றால் பொய்யும் உண்மையும் கரைந்து போகும் அல்லது நாமே கரைக்கலாம்  என்று.

பிள்ளை இல்லை என தத்தளிப்பதை விட தத்தெடுத்து வாழ்வில் தத்தளிப்பவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கலாம். நாம் நினைத்தால் வாழ்வை வசப்படுத்திக் கொள்ளலாம். உன் வாழ்க்கை உன் கையில்….சுற்றத்தை பற்றி சற்றும் யோசிக்காதே, நன்மை என்றால் உண்மையை கரைக்க நீங்கள் ரெடியா?

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ நினைத்தால் வாழலாம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நேர்மையை நேசி (சிறுகதை) – மனோஜ் குமார்