2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பத்தாம் வகுப்பு படிக்கும் அருணுக்கு, அவனுடைய அப்பா குமரேசனைக் கண்டால் அப்படியொரு பயம்.
இந்தக் காலத்தில் இப்படி ஒரு பையனா? என்று கேட்கலாம், அப்படியொரு அப்பா அவனுக்கு இருந்தா பயந்துதானே ஆகணும்.
அப்படி என்ன குமரேசன் கொடூராமானவரா?
ஆமாங்க, அவர் இளம்வயதில் இருந்து யாருக்கும் அடங்கியது இல்ல. எல்லோரையும் அடக்கித்தான் பழக்கம். குமரேசனைப் பெற்ற தாய் தந்தையே இவரைப் பார்த்துப் பயப்படுவாங்கன்னா பார்த்துக்கோங்க. படிக்கச் சொல்லி பள்ளிக்கு அனுப்பினா பட்டறைக்குப் போய் லாரி மெக்கானிக் ஆகிட்டார். அங்கே 10 -12 ஸ்பேனர் கேட்பார் ….எடுபுடி பசங்க மாத்தி எடுத்தா அதிலேயே அடிவிழும் அவுங்களுக்கு.
கோபம் தவிர வேறு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. கல்யாணம் செஞ்சா கோபம் எல்லாம் சரியா போயிடும்னு சாந்தினு ஒரு பொண்ண பார்த்து கட்டி வச்சாங்க. பேருக்கு ஏத்த மாதிரி சாந்தமானவள் தான்.
கல்யாணம் ஆனா புதுசுல, “என்னங்க… வீட்டுக்கு எத்தன மணிக்கு வருவீங்க?” எனக் கேட்க
“ஓ… ராணியம்மாகிட்ட எல்லாம் முன் கூட்டியே சொல்லனுமா? நான் வர நேரத்துக்குத் தான் வருவேன்” என்றார்.
அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரைக்கும் சாந்தி சாப்பாடு கட்டி கொடுக்கிறதோட சரி.
ஒருமுறை சாந்தியோட அப்பா, அதாங்க நம்ம குமரேசனோட மாமனார் தீபாவளிக்கு விருந்துக்குக் கூப்பிட வந்தார்.
“மாப்பிள்ளை… தீபாவளிக்கு முன்நாளே வந்திடுங்க. புதுத்துணி எடுத்து வைச்சிருக்கோம். கிடா வெட்டுறாங்க, கறிக்கும் சொல்லியாச்சு. வீட்டுல நாட்டுக்கோழி இருக்கு அதுவும் அடிச்சிடலாம்…” என்றார் .
“இதெல்லாம் நான் சாப்பிட்டதே இல்ல பாரு… விருந்துக்கு வாங்கன்னு கூப்பிட்டா போதாதா. உங்க வூட்டுப் பெருமையெல்லாம் சொல்லணுமா? அப்புறம் ஊரெல்லாம் போய் நான் மாப்பிளைக்கு அத செஞ்சேன் இத செஞ்சேன்னு சொல்லணும், அப்படித்தானே ?”
“மாப்பிள ..நான் என்ன தப்பா சொல்லிட்டேன் ..?”
“யோ மாமா ..என் பொண்டாட்டிய எப்படிப் பார்த்துக்கணும் என்று எனக்குத் தெரியும் ? இனி தீபாவளி இங்கதான் ..வேணுமின்னா நீங்க வந்து சாப்பிட்டு போங்க “
அன்னிக்குப் போனவர்தான் மாமனார்…
சரி மகனுக்கு அப்படி என்ன பயம்…அருண் ஆறாம் வகுப்பு படிக்கும் போது …தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவனிடம் சைக்கிள் ஒன்று வாங்கி ஓட்டினான் …அதை குமரேசன் பார்த்துவிட்டார் ….
அருணின் சட்டை காலரை இறுக்கி பிடித்தவர் ….”யாருதுடா சைக்கிள் ….?”
“அப்பா ..என் பிரென்டுது …”
“நீ எதுக்கு வாங்கி ஓட்டுற?”
“ஆசையா இருந்தது பா “
“ஆசையா இருந்தா அடுத்தவங்க பொருளை இரவல் வாகுவியா ” என்று சொல்லிக் கொண்டே முதுகில் நாலு போடு போட்டார் …
எதுக்கு அடிக்கிறார் அப்பா என்று புரியாத வயதில் …அவரைக் கண்டாலே அலர்ஜியாகிப் போனது அருணுக்கு. இப்ப வரைக்கும் அவரா வாங்கிக் கொடுப்பதுதான் எல்லாம் .
“பத்தாம் வகுப்பு முடித்து மேல்நிலை வகுப்புக்கு 8 கிலோமீட்டர் தூரம் போகணும் சைக்கிள் இருந்தா நல்ல இருக்கும்”னு அருண் நினைத்தான்.
குமரேசனுக்கு 40 வயது முடிந்து 41 தொடங்கியது …எப்போதும் வீட்டிற்கு 10 மணிக்கு மேல் வரும் குமரேசன் அன்று 5 மணிக்கே வந்துவிட்டார் .
“ஏன் சீக்கிரமே வந்துட்டீங்க?” என்று சாந்தியால் கேட்கத்தான் முடியுமா? அமைதியாக அதிசயமாகப் பார்த்து நின்றார் .
“சாந்தி … அருண் எத்தனை மணிக்கு வருவான் …?”
“6 மணிக்கு வந்திடுவாங்க …”
“ம்ம் …”
மணி 6 ஆனது. வீட்டு வாசலில் சேர் போட்டு உட்கார்ந்து இருந்தார் குமரேசன். அருண் வந்தான் …அப்பாவைப் பார்த்து அதிர்ச்சியுடன் உள்ளே போக வாசற்படியைத் தாண்டியவனை, “டேய் அருண்”
“ப்ப்பா …சொல்லுங்க ..ப்ப்பா…”
“நாளைக்கு …முருகேசன் சைக்கிள் கடையில் ஒரு புதுச் சைக்கிள் சொல்லி இருக்கேன் போய் வாங்கிக்க “
“பேசுறது அப்பாதானா …” உறைந்து போனான் அருண்.
“சாந்தி …உங்க அண்ணன் பொண்ணுக்கு அடுத்த வாரம் சடங்காம் ….நீ ஊருக்கு போய்ட்டு வா”
சாந்திக்கு இப்பவும் பேச வாய் வரல. மனதுக்குள், ’40 தாண்டினா நாய் குணம் அப்படின்னு சொல்லுவாங்க.. இது என்ன மாற்றமோ ..இது என்ன குணமோ ..எல்லாமே நேர்மாரா இருக்குதே?’
குமரேசன் …தன் மீசையில் நரைத்திருந்த வெள்ளை முடிகளைக் கண்ணாடியில் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு சிரித்தார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings