in ,

முல்லை வனம் (சிறுகதை) – பாலாஜி ராம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

தங்கபுரி என்னும் ஊரில், ஒரு முல்லைவனம் இருந்தது. அந்த  வனத்தில் ஆயிரக்கணக்கான முல்லை பூச்செடிகள் பூத்து குலுங்கியது. அதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி.

அந்த முல்லைக் காட்டுக்குள் ஒரு அழகான குளம், அந்த குளத்துக்குள் நூற்றுக்கணக்கான தாமரை மலர்கள், என அந்த வனமே எழில் கொஞ்சும் அளவுக்கு அருமையாக இருந்தது.

அந்த முல்லைக் காட்டு வழியாக ஒரு வாலிபன் நடந்து வருகிறான். அவன் பெயர் சின்ராசு, அவனுக்கு ஒரு 25  வயது இருக்கும். பார்ப்பதற்க்கு அழகான தோற்றமும், உடலமைப்பும் கொண்டிருந்தான். சின்ராசு தன் காதலியான நித்தியவேனியை பார்ப்பதற்காக புற்றுப்பாறை என்னும் ஊருக்கு செல்கிறான்.  அந்த ஊருக்கு போக வேண்டும் என்றால், இந்த முல்லை வனத்தை தாண்டி தான் செல்ல வேண்டும்.

சின்ராசு தன் ஊரில் இருந்து நடந்தே வருகிறான். அப்படி அவன்,  நடந்து இந்த முல்லை வனத்தை அடையும் போது, இரவு ஏழு மணி. இனியும் நடக்க முடியாது என்று நினைத்த அவன், அந்த முல்லைவனக் காட்டுக்குள் இருக்கிற பெரிய குளத்தின் அருகே, ஒரு மகிழமரம் உள்ளது. அந்த மகிழ மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துவிட்டு நாளை பயணம் செய்யலாம் என நினைத்தான்.

அன்றைய இரவு அவன் மகிழம்மரத்தின் அடியில் தூங்கி கொண்டு இருக்கிறான். நள்ளிரவு நேரமானதும் பயங்கரமாக சத்தம் கேட்கிறது. என்ன சத்தம் என்று, எழுந்து பார்க்கிறான் சின்ராசு.

அந்த சத்தம், மகிழ மரம் இருக்கிற இடத்தில் இருந்து கிழக்கு திசையில் வருகிறது. இவன் வேகமாக கிழக்கு திசை நோக்கி, நடக்க ஆரம்பிக்கிறான். அங்கு பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. அந்த ஆலமரத்தின் அடியில் ஒரு இளம் பெண்ணுக்கும், ஒரு வாலிபனுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த வாக்குவாதம் உச்சகட்டத்தை எட்டியதும், இந்த வாலிபன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஒரு கத்தியை எடுத்து, அந்த பெண்ணை வேகமாக தாக்குகின்றான்.

சின்ராசுக்கு அந்தப் பெண்ணுடைய முகமும் தெளிவாக தெரியவில்லை. அந்த வாலிபனுடைய முகமும் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும், அங்கு என்ன நடக்கிறது என்று அவனுக்கு ஓரளவுக்கு புரிந்தது.

சின்ராசு  எப்படியாவது, அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான். எனவே  வேகமாக ஓடி அந்த வாலிபனை ஓங்கி எட்டி உதைக்கிறான். வாலிபனின் கையில் இருந்த கத்தி, இளம் பெண்ணுடைய காலடியில் வந்து விழுகிறது. சின்ராசும் அந்த வாலிபனும் பயங்கரமாக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் அந்த இளம்பெண் கத்தியை எடுத்து வேகமாக ஓடிவந்து, சின்ராசுடைய முதுகில் ஓங்கி குத்துகிறாள். சின்ராசு கீழே சரிந்து விழுகிறான். இரத்தம் வெள்ளமாக ஓடுகிறது.

அப்போது தான் சின்ராசு அந்த பெண்ணின் முகத்தை திரும்பிப் பார்க்கிறான். அவனுக்கு, பேரதிர்ச்சி ஏனெனில், அவன் யாரை பார்க்க வேண்டும் என்று நினைத்தானோ அவனுடைய காதலி நித்யவேணி தான் அங்கு நின்று கொண்டிருந்தாள்.

தன் காதலி இந்த நேரத்தில் இந்த வாலிபனோடு நின்று கொண்டிருக்கிறாளே, என்று மனது மிகவும் வலித்தது சின்ராசுக்கு. அவனுக்கு உடம்பில் பட்ட காயத்தை விட மனதில் பட்ட காயமே பெரியதாக இருந்தது. உடம்பு வலி என்னவோ தீர்ந்து விட்டது, ஆனால் மனசு வலி இன்னும் தீரல.

இப்போது நித்தியவேனி பேச ஆரம்பிக்கிறாள். நமது காதலுக்கு தடையாய் இருந்த இவனும் இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்துருவான். பிறகு,  நானும் நீயும் திருமணம் செய்து, மகிழ்ச்சியாக வாழலாம் என்று அந்த வாலிபனை பார்த்து சொல்கிறாள். நித்தியவேனியும், அந்த வாலிபனும் கையை கோர்த்து பேசி சிரிச்சுக்கிட்டே, அந்த இடத்தை விட்டு நகர்கிறார்கள்.

பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த நித்தியவேனியும், அந்த வாலிபனும் தற்போது, ஒன்றாக சேர்ந்து போகிறார்கள். சின்ராசை கொலை செய்வதற்காக நித்தியவேனியும், அவள் காதலனும் சேர்ந்து போட்ட நாடகம் தான் இது.

நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக, சின்ராசு உயிரும் பிரிந்தது. கொஞ்சம் நேரத்தில் எறும்புகள்,  ஈக்கள் அவன் தேகத்தை மொய்க்க ஆரம்பித்து விட்டது.

மறுநாள் காலை விடிந்தது.  சூரிய ஒளி  சின்ராசு மீது பட்டதும், இறந்து போன அவன் எழுந்து உட்கார்ந்து கொண்டான். அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது, இவை எல்லாம் கனவு என்று.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வீட்டுக்கு வீடு (சிறுகதை) – ராஜேஸ்வரி

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 19) – தி.வள்ளி, திருநெல்வேலி