in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 13) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12

பீச்சில் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் காவ்யாவுக்காக காத்திருந்தான் ஜெய் …கடல் அலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். .வாரி சுருட்டுவது போல வரும் பெரிய அலை, கரையருகே வந்ததும் அப்படியே வலுவிழந்து, காலை வருடும் சிற்றலையாக மாறுவதும் …சின்னதாய் வரும் அலை சீற்றத்தோடு கரையை தொடுவதும் ..இவற்றிற்கு நடுவே கரையை தொடாமலே திரும்பும் அலைகள்..

அலைகளில் தான் எத்தனை விதம்.அவன் காதல் கரை தொடுமா …மனதிற்குள் குழப்பம் ..எண்ணம் அலையலையாய் கடலலையை தோற்கடிக்கும் வண்ணம் மனம் அலை மோதிக்கொண்டிருந்தது .

 நேற்று பிறந்த நாள் விழாவுக்கு போயிட்டு வந்த பிறகு…அங்கு நடந்த நிகழ்வுகள் அவன் மன அமைதியை சுத்தமாக குலைத்துவிட்டது . அவன் மனம் சிந்திக்கும் திறனையே இழந்திருந்தது. நேற்று நடந்தது அவன் மனதில் நிழலாய் ஓடியது.

நண்பர்கள் எல்லோரும் சந்தோஷமாக பிறந்த நாள் விழாவில் கேலியும் ,கிண்டலுமாக அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். காவ்யா பிறந்தநாள் கேக் வெட்டும் போது எல்லோரும் அவர்களையும் அறியாமல் எழுந்து சென்று அவளை சூழ்ந்து கொண்டு பாப்பர்ஸ்களை வெடித்து “ஹாப்பி பர்த்டே “என்று சத்தமாக பாடினர்…

காவ்யா அப்பா அம்மாவைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. எத்தனை பெரிய விருந்தினர்கள் வந்திருந்தாலும், அது அவர்களுடைய காவ்யாவின் பிறந்தநாள்.சந்தோஷமாய் அவளை அணைத்து, முத்தமிட்டு, தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். பின் அனைவரும் சேர்ந்து குரூப்பாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.

கார்டு, பொக்கே என பரிசுகளைக் கொடுத்தனர். அவர்களோடு ஜெய் அவளுக்கு வாழ்த்து சொல்வது போல அருகில் வந்து தன்னுடைய கிப்ட் ஐ அவளுடைய உள்ளங்கையில் வைத்து அழுத்தினான். “தேங்க்யூ சோ மச் டா” என்றாள் கிசுகிசுப்பாக ..

போட்டோ எடுத்த பிறகு எல்லோரும் கீழே இறங்க ,அதற்குப் பிறகு அவர்கள் காவ்யாவை நெருங்க கூட முடியவில்லை. பெரிய பெரிய விஐபிகள்.. தங்களுடைய வாழ்த்தையும் பரிசையும் கொடுக்க, அவள் அப்பா, அம்மா கூடவே இருந்தார்கள்.. சாப்பிட போலாமா என்று நினைத்தவர்கள் காவ்யா வரட்டும் என்று காத்திருந்தார்கள்.

எல்லாம் முடிய ஒரு மணி நேரமானது, காவ்யா அவர்கள் அருகே வந்தாள்.” என்னப்பா சாப்பிட்டிடீங்களா?”

 “நீ வராம எப்படிடீ சாப்பிடுவோம்?” என்றாள் ராதிகா.

“எனக்காக காத்திருக்கீங்களா?” என்றவள் ஒரு கணம் மனம் நெகிழ்ந்து ..”ஏம்பா சாப்பிட்டு இருக்கலாமே..சரி வாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம் “என்றாள்.

அவர்கள் கிளம்பும் சமயத்தில்…

காவ்யாவின் அப்பா அவளை மேடைக்கு அழைத்தார்.

” ஹலோ ப்ரெண்ட்ஸ்! உங்க எல்லாருக்கும் ஒரு அறிவிப்பு ..எனது மகள் காவ்யாவிற்கு விரைவில் திருமணம் செய்ய உத்தேசித்திருக்கிறேன் .”

வந்திருந்தவர்கள் கைதட்டினர் ..”அடுத்த இரு வாரங்களில் வரும் எங்கள் வெட்டிங் டே பார்ட்டியில்.. இதேபோல நீங்கள் எல்லோரும் வந்து சிறப்பிக்க வேண்டும். அன்று ஒரு ஸ்பெஷல் நிகழ்வாக என்னுடைய மருமகனை… காவ்யாவிற்கு நான் பார்த்துள்ள மாப்பிள்ளையை… உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்…உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதமும் அவளுக்கு வேண்டும் .எனவே தவறாமல் கலந்து கொள்ளுங்கள். அழைப்பிதழ் உங்களுக்கு தனியாக அனுப்புகிறேன்.இப்போது டின்னரை என்ஜாய் பண்ணுங்கள்”

காவ்யாவின் முகம் கறுத்தது… அவள் இதை எதிர்பார்க்கவில்லை .. ராம்சந்தர் மைக்கை வைத்த பிறகு அப்பாவிடம்” ஏம்ப்பா இப்படி பண்றீங்க? என்கிட்ட கேட்காமல், ஏன் என்னுடைய கல்யாணத்தை அனௌவ்ன்ஸ் பண்றீங்க …? “

“டேய் செல்லம்.. இதெல்லாம் உன்கிட்ட கேட்டுகிட்டு ஏன் செய்யனும்? எனக்குத் தெரியும் உனக்கு எது நல்லதுன்னு.. உன் அம்மா கிட்ட இத பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டேன் ..அவ அக்ரி பண்ணிட்டா.. அவதான் இன்னைக்கு இத அனௌவ்ன்ஸ் பண்ணச் சொன்னா.உனக்கு இது ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் பர்த்டே கிப்ட்டா இருக்கட்டும்னு நாங்க சொல்லலை ..”

பொங்கி வந்த கண்ணீரை மறைத்துக்கொண்டு, நண்பர்களிடம் வந்தாள் காவ்யா .சுத்தமாக அவள் முகம் மாறிப் போயிருந்தது. ஒன்றும் பேச வரவில்லை . நண்பர்கள் எல்லோருமே இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

ஜெய்க்கு காலடியில் இருந்த உலகம் நழுவி கீழே விழுவது போல ஒரு உணர்வு. எது நடக்கக்கூடாது என்று பயந்தானோ அது நடந்து விட்டது. அவனுடைய உணர்வு புரிந்ததால் தீபக் அவன் தோளைத் தட்டினான் ..

மாலினி தேவி அங்கே வந்த அவர்களை “சாப்பிட வாங்க ஏன் இங்கேயே நிக்கிறீங்க” என்று அதட்ட ..அவர்கள் வேறு வழியில்லாமல் மனம் கனக்க சாப்பிட கிளம்பினர். அவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் பலூனில் ஊசி குத்தியது போல பட்டென வெடித்து சூழலே மாறிவிட்டது. .சாப்பிட்டுவிட்டு அவரவர் வீட்டிற்கு கிளம்பினர், காவ்யாவிடம் சொல்லிக் கொண்டு.

மறுநாள் காவ்யா ஜெய்க்கு செய்து போன் பண்ணி வழக்கமாக சந்திக்கும் இடத்தில் பீச்சுக்கு வரச் சொல்லி இருந்தாள்.

தொலைவில் காவ்யா தன் காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு வருவது தெரிந்தது …

“சாரி லேட்டாயிடுச்சு டா ஹனி..” அவள் குரலிலும் வழக்கமான குதூகலம் இல்லை முகம் வாடிப் போய் இருந்தது. அவளை ஏறிட்டுப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது ஜெய்க்கு..

அவள் கழுத்தில் அவன் பிறந்தநாளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய அந்த லாக்கெட் தொங்கியது. அதை ஒரு வெள்ளி செயினில் கோர்த்து அணிந்திருந்தாள். இவ்வளவு அமர்க்களத்திலும் அவள் கவனமாக தன்னுடைய கிப்ட்டைப் பிரித்து அதை அணிந்திருந்தது, ஜெய்யின் மனதை நெகிழ வைத்தது.

கொஞ்சம் நேரம் அமைதியாய் இருவரும் அமர்ந்திருந்தனர். இந்த கனத்த மவுனம் அவர்களுக்கு புதிது. இதுவரை கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும் அவர்கள் பேச்சு அன்று காணாமல் போயிருந்தது ..திடீரென தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள் காவ்யா ..

” காவ்யா பிளீஸ்! நீ அழுதா என் மனசு தாங்காது ..”என்றவன் அவளை லேசாக அணைத்துக் கொண்டான். அப்படியே அவன் மடியில் சாய்ந்த அவள்..

“ஜெய் என்ன தப்பா நினைக்காத டா.. எனக்கு நேத்து அப்பா சொன்னது எதுவுமே முன்னால தெரியாது. என்கிட்ட சொல்லியிருந்தா நான் கண்டிப்பா அதை தடுத்திருப்பேன். பர்த்டே பார்ட்டி என்று இன்வைட் பண்ணிட்டு.. அந்த மாதிரி சொல்லும் போது உன் மனசு எவ்வளவு பாடுபட்டிருக்கும்னு எனக்கு புரியுது. என்னாலயே அந்த அதிர்ச்சியை தாங்கமுடியல ..”

“விடு..காவ்யா உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா? நீ எவ்ளோ என் மேல அன்பு வச்சிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இது உனக்கு தெரியாமல், உன்னையும் அறியாமல் நடந்தது.”

“என்ன செய்யப் போறோம்.. எப்படி அப்பா அம்மாகிட்ட இந்த விஷயத்தை சொல்ல… நம்முடைய லவ்வ அவங்கள எப்படி ஏத்துக்க வைக்கப் போறோம்ன்னு தெரியல. மனசு குழம்பி போய் இருக்கு”

“காவ்யா உன் மனசு மட்டும் இல்லை என் மனசும் அப்படித்தான் இருக்கு. நாம கொஞ்சம் பொறுமையாக இருப்போம் .ஒருநாள் எடுத்துக்குவோம். மனசு கொஞ்சம் நிதானத்துக்கு வந்ததும், அடுத்தது என்ன செய்றதுன்னு யோசிப்போம் ..

வேகமாக சீறி வந்த அலை அவர்கள் காலை தொட்டு விட்டுப்போக ..அதன்பின் வந்த அந்த அலை கரை தொடாமலே திரும்பியது ..கரை தொடுமா அவர்கள் காதல்???

(அலை வீசும்  🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சூப்பர் ஃபிகரு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    காதலித்துப் பார் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி