in

முயலாமல் முடியாது (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

அடுப்புதனை   மூட்டாமல்

            அரிசியுலை   கொதித்திடுமா

படுத்தக்கால்   நடக்காமல்

            பாதைதனைக்   கடந்திடுமா !

விதைதன்னை   விதைக்காமல்

            விளைச்சல்தான்   விளைந்திடுமா

கதைபேசி   அமர்ந்திருந்தால்

            காரியம்தான்   நடந்திடுமா !

 

தூரிகையைத்    தொட்டிமாமல்

            துலங்கிடுமா   ஓவியம்தான்

கோரிக்கை   வைத்திடாமல்

            கொடுத்திடுமா   அரசாங்கம் !

உளிகொண்டு   செதுக்காமல்

            உருபெறுமா   சிற்பம்தான்

குளிக்காமல்    கடலுக்குள்

            குழைமுத்து   கிடைத்திடுமா !

 

பால்தயிரைக்   கடையாமல்

            பசும்வெண்ணெய்    பிறந்திடுமா

நூல்களினைப்   படிக்காமல்

            நுண்ணறிவு   பெருகிடுமா !

முயலாமல்    என்றைக்கும்

            முன்னேற்றம்   வாராது

புயத்தாலே    உழைக்காமல்

            புகழ்வெற்றி   பூக்காது !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 1) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    ஆசிரியரே நாட்டின் வேர் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்