இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
உண்மையா என்ன உண்மை சொல்லு சுகு என்று மலர் கேட்க…சுகு மேலே 🙄வானத்தை பார்த்தான் ..
கொசு வத்தி சுருள் சுருளாக சுத்தியது🕸….வேற என்ன ப்ளாஷ்பேக் தான்…🤷🏻
அன்னைக்கு ஒரு நாள் மணியன் என்ன பாக்க வந்தார்…தம்பி! மலர் பாப்பா தான் எங்களுக்கு எல்லாமே, பாப்பா னா எங்களுக்கு உயிர்… நீங்க எப்படியாவது எங்க ஐயா சொன்னதெல்லாம் செய்ஞ்சு மலர் பாப்பாவ கல்யாணம் பண்ணிங்கங்க … பாப்பா அங்க எதுவும் சாப்பிடாம ரூம் கதவ சாத்திட்டு அழுதுட்டே இருக்கு…உங்களுக்கு என்ன உதவி வேணாலும் நான் செய்றேன் என்றதும்…சிறிது நேரம் யோசித்த சுகு நான் காளையன🐂 பாக்கணும்னு என்றான்..
என்னை உங்க அப்பாவிற்கு தெரியாம, பின் பக்கமா காளையனை பார்க்க கூட்டிட்டு போனாரு மணியன்… நானும் எவ்வளவோ முயற்சிப் பண்ண ஆனா என்னால அதுகிட்ட கூட நெருங்க முடியல… அப்ப தான் எனக்கு ஒரு யோசனை தோனிச்சு…மணியன் அண்ணா துணையோட காளையனை எப்படியாவது உங்க பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்ன…
மணியனும் ஏதேதோ மாமாகிட்ட சொல்லி பண்ணை வீட்டுக்கு காளையனை கூட்டிட்டு வந்தாரு …அங்க கண்ணம்மாவை அழைச்சிட்டு வந்து ரெடியா இருந்தேன்…
கண்ணம்மாவா யாரது? என்று மலர் கேட்க என் நண்பனோட பசு மாடு 🐄அவன்கிட்ட நம்ம கல்யாணத்துல இருக்குற பிரச்சனை சொல்லி உதவி கேட்டேன் அவனும் கண்ணம்மாவ🐄 கூட்டிட்டு வந்தான் ….
அதுக்கும் காளையனுக்கும்🐂 என்ன சம்பந்தம் என்று குழப்பமாக மலர் கேட்க…. கண்ணம்மா 🐄இப்போ காளையனோட காதலி..என்றான் சுகு குரும்பாக😬
இப்போது மணியன் …ஆனா …ஒன்னு பாப்பா… நம்ம காளையன் லேசுல மயங்கல…என்ன இருந்தாலும் நான் வளர்த்த காளை இல்லையா என்று பெருமீதமாக மணியன் கூற…
ம்க்கும்😒 , நீங்க ஒரு கட்ட பிரம்மச்சாரி நீங்க வளர்த்த மாடு மட்டும் எப்படி இருக்குமா …
எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா மலர்…என்று அவள் கையை பிடித்து பாவமாக பார்த்தான் சுகு…
அப்படி என்ன கஷ்டபட்டீங்க சாரு … என்று நக்கலாக மலர் கேட்க…சுகு மறுபடியும் மேலே பார்த்தான்🙄🕸
ப்ளாஷ்பேக்—-
கண்ணம்மாவை 🐄குளிப்பாட்டி அவள் வாலில் குஞ்சலம் கட்டி, கொம்பில் வண்ண ரிப்பன் கட்டி , அவள் காலுக்கு சலங்கை போட்டு… கூடவே நம்ம காளையனுக்கு லவ் மூட் வர …டேப்ரிக்கார்டல 📻🎵🎶காதலா! காதலா! காதலால் தவிக்கிறேன் பாட்டுல இருந்து….மை டியர் மச்சான்! நீ மனசு வச்ச நாம ஒரசிக்கலாம் ஜிகுஜிகுனு லவ் சாங்கா💞💞 போட்டு …ஒரு வழியா சேர்த்து வைச்சோம்…
அப்புறம் என்ன நம்ம 🐂காளையன்…. கண்ணம்மா🐄 கிளிச்ச கோட்ட தாண்டாத அளவுக்கு மாறிட்டான். இப்போது கண்ணமாவும், காளையணும் பேசுவதை பார்ப்போம்…
கண்ணாம்மா🐄 இதோ பாரு யா நான் பக்கத்து ஊர்காரினு என்ன ஏமாத்திடலாம் நினைக்காத அப்புறம் ஊரகூட்டி பஞ்சாயத்து வச்சிடுவேன் உங்க பண்ணையார் மானம் தான் போகும் சொல்லிட்டேன் …
நான் இப்ப மாசமா வேற இருக்கேன் என்றதும் பூம் பூம் என தலை ஆட்டியது காளையன்🐂, நம்மல சேர்த்து வைச்ச சுகுமாரன் மலர நாம தான் யா சேர்த்து வைக்கணும்…
வீரம் , கீரம்னு முறிக்கிட்டு நிக்காம ஒழுங்கா அடங்கிப் போ சுகு ஐயாகிட்ட …என்ன புரியுதா என்று காளையனை…. கண்ணம்மா அதட்ட …
சரி, சரி.. நீ சொன்ன பிறகு மறுப்பேது கண்ணே என்றான் காதல் பொங்க அதன் பாஷையில் கூறியது காளையன்…
ஆமா இந்த ரொமன்ஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என்றது கண்ணம்மா🐂🐄)
இனி சுகு சொல்லும் ப்ளேஷ்பிளாக்🤗
காளையன்🐂 முதல அடங்கல இந்த மாதிரி எதாவது நடக்கும் தெரிஞ்சுதான் முன்கூட்டியே கண்ணாமாவை🐄 தூரத்தில் பிடித்துக் கொண்டு நின்றான் என் நண்பன் கண்ணாமாவை பார்த்ததும் காளையன் என்கிட்ட சரண்டர் ஆயிட்டான் என்றான் பெருமையாக சுகு….
.(ம் …அது! கண்ணம்மாவின்🐄 மைண்ட்வாய்ஸ்) .
ஆஹா! என்று வாயை பிளந்துக் கொண்டு பார்த்த மலரை …ஏய் மலர் என்னாச்சு என்று உலுக்கினான் சுகு….
நிகழ்காலத்துக்கு வந்த மலர் மேல சொல்லுங்க என்றாள் …
சுகு தலையை சொறிந்தவாறே 🙆அப்புறம் இந்த இளவட்ட கல்லு எவ்வளவு தூக்க முயற்சிப்பண்ண என்னால என் முட்டிக்கு மேல கூட தூக்க முடியல அப்புறம் நம்ம குடும்ப வாழ்க்கைக்கே பங்கம் வந்திடுச்சுனா…. அதான் ஒரு நடுத்தரமான கல் எடுத்து அதுல நிறைய காகிதம், தெர்மாகோல் சுத்தி கல்லுப் போல் பெயிண்ட்🎨 பண்ணி எப்படியோ எல்லார் முன்னாடியும் இளவட்ட கல்ல தூக்கிட்டேன் என்றான் கோணலாய் 😏இளித்தவாறே😬
அதான் ஐயா ஒரு நிமிஷம் வரைக்கும் தூக்கி வச்சிரிந்தீங்களோ என சொல்லி முறைத்த மலரை பார்த்து,…
தம்பி …பாவம் பாப்பா இந்த இளவட்ட கல்ல தூக்க முயற்சி பண்ணி மூச்சுப் பிடிச்சிக்குச்சு ஒரு வாரம் மாத்திரை மருந்து சாப்பிட்டு பிறகு தான் சரியாச்சு என்று சுகுவிற்கு வக்காளத்து வாங்கினான் மணியன்…
அப்போ உண்மையான இளவட்ட கல் எங்கே…அதுவா எப்படியோ நானும் தம்பியும் சேர்ந்து உருட்டிக்கிட்டே அந்த புதர் பின்னாடி வச்சிட்டோம் யார் கண்ணுலபடாத மாதிரி…
கொஞ்சம் நேரம் மெளனம் காத்த மலர், பிறகு தன் கையிலிருந்த இரண்டு சின்ன சுருள் முடியை காண்பித்து இதற்கு என்ன கதை சொல்ல போறீங்க என்பது போல் பார்த்தாள்…
இதுவா… மீசை என்னமோ சூப்பராதான் வளர்ந்துச்சு, ஆனா ..மாமாக்கு இரண்டு பக்கத்துல இருக்குற சூருள் மாதிரி எனக்கு வரல…😒😔
அதான் இதனால கல்யாணம் நின்னுப் போகக்கூடாதுனு என் ஒரிஜினல் மீசையோட, இந்த டியூப்பிளிக்கட் சூருளை ஒட்டவச்சிக்கிட்டேன் என்றான்…
இந்த இடத்துல தில்லுமுல்லு தில்லுமுல்லு அந்த song தானே நம்ம மைண்ட்ல வருது…நமக்கு மட்டுமில்லங்க மலருக்கும் அதே song தான் கேட்டுது…மலருக்கு மட்டுமா😜கேட்டுது🤣😂
அவன் சொல்ல சொல்ல மலருக்கு சிரிப்பு 🤣😂தான் வந்தது ..கன்னத்தில் கை வைத்தப்படி கேட்டுக் கொண்டிருந்த மலர் ….
பாப்பா என்று மணியன் குரல் கேட்டு அவன் பார்வை சென்ற இடத்தை மலரும், சுகுவும் பார்த்தனர்….அங்கே கோபமாக கண்கள் சிவக்க 😠முகத்தில் வியர்வை துளிகளோடு வேலுசாமி நின்றுக் கொண்டிருந்தார்…
அப்பா! ..நீங்க..என்று வார்த்தை வராமல் பாதி பாதியாக உளறினாள் மலர்😨😰…
மாமா என்றும் ஐயா என்றும் கூற வந்த சுகுமாரனையும், மணியனையும் முறைத்தபடி உள்ளே ஓடினார் வேலுசாமி🏃🏻…அவரை அழைத்தபடியே மூவரும் உள்ளே ஓட அவர்🏃🏻🏃🏻 கதவை உள்பக்கமாக தாளிட்டுக் கொண்டார்…
மூவரும் எவ்வளவு குரல் கொடுத்தாலும் திறக்காததால்… மணியன் பின்புறமாக ஓடி ஜன்னலின் வழியே பார்த்து அதிர்ந்தார்…😲😳 பின்பு அங்கியிருந்து ஓடி வந்த மணியன் ….பாப்பா !!ஐயா !!பாப்பா !!ஐயா வந்து…. என்று பதட்டத்தில் உளற…
ஐயோ! மணியா ஐயாக்கு என்ன? என்னாச்சு சொல்லு என்று சுகு, மலர், பதற ….கதவு திறக்கும் சத்தம் கேட்டது…
வேலுசாமியை பார்த்து அதிர்ந்து போயினர் சுகு, மலர்😲😳😳… வேலுசாமியோ இரண்டு பேர் சேர்ந்து என்ன எவ்வளவு சாமர்த்தியமா ஏமாத்திருங்காங்க… இவங்ககூட இந்த காளையனும் 🐂என்று வருத்தப்பட 😢
அதுக்காக நீங்க ஏன்பா… இப்படி உங்க மீசையை எடு்த்திட்டீங்க என்று கேட்டாள் மலர்…
இத்தனை வருஷமா கம்பீரமா என் மீசை வருடிவிட்டு என்ன யாரும் ஏமாத்த முடியாதுனு சொல்லிட்டிருந்த என்ன இந்த இரண்டு பொடி பசங்க …வார்த்தை வெளிவராமல் கலங்கினார் வேலுசாமி… இனி நான் எப்படி என் மீசை நீவீ விட்டு அந்த டயலாகக்கை சொல்ல முடியும் என்று குழந்தை போல் அழுதார் வேலுசாமி😪😭
இப்போது சுகு அன்று தன் மனதுக்குள் விளையாட்டாக இட்ட சபதத்தை எண்ணி பார்த்தான்….”இருடி ஆனா ஊன்னா மீசை நீவீ விடுற மீசையே வேணாம் உன்னைய ஓடவிடுறேன் பார் 🤣😂நினைத்துப் பார்க்க பார்க்க.. அவனுக்கு குபீர் என்று வந்த சிரிப்பை 🤣🤣அடக்கிக் கொண்டான்…
மாமா! என்ன மன்னிசீடுங்க🙏🏻 உங்க பொண்ணு மேல என் உயிரே ❤வச்சியிருக்கேன். அதனால் தான் இப்படி எல்லாம் பண்ணிட்டேன்…என்று மன்னிப்பு கேட்டான் சுகுமாரன்…
ஐயா! நான் கூட நம்ம பாப்பா படுற கஷ்டத்த பாத்துதான் தம்பிக்கு உதவி செய்தேன் என்றான் மணியன்…
அப்பா! ப்ளிஸ் பா! மன்னிச்சிடுங்க என்று மலர் கேட்க உருகிப்போனார் வேலுசாமி…
பிறகு என்ன சுபம் தான்!💐💐
வெயிட்!🖐🏻 நம்ம மெயின் ஹீரோ, ஹீரோயின என்ன ஆனாங்கனு🤔 பாக்க வேணாமா…வேலுசாமி சூலாக இருந்த கண்ணமாவை 🐂🐄விலைக் கொடுத்து வாங்கி காளையனோடு சேர்த்து வைத்தார்…🐂🐃
கல்லூரியில் சுகு மலர் எப்படி சந்தித்தார்கள், காதலித்தார்கள் என்பதை அத்தியாயத்தம் 4ல் பார்க்கலாம்.
காதல் கண் கட்டுதே….தொடரும்….
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings