in ,

அண்ணன் என்னடா? தம்பி என்னடா? (சிறுகதை) – சாமுண்டேஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அம்மா,  கீரைக்கார பாட்டியை இரண்டு நாளாக காணோம்,  ஏன் என்னாச்சு என எட்டு வயது மகன் வாசு கேட்டான்.

திருமணத்திற்காக திண்டுக்கல் போவதாகவும் வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என கீரை கார பாட்டி சொன்னார்கள்.

பாட்டிக்கு சொந்தக்காரங்க இருக்காங்களா மா.

பாட்டிக்கு குழந்தைகள் கிடையாது. தாத்தா இருக்கிறார், அவருக்கும் வயசு அதிகம் ஆகிவிட்டது .

தாத்தா தான் முதலில் கீரை கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

நான்கைந்து வருடங்களுக்கு முன் தாத்தா கீரை வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு சென்றவர் இரண்டு சக்கரம் வாகனம் மோதி கால் அடி  பட்டு நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டார்.

இவர்களுடைய ஏழ்மையை அறிந்து உறவினர்கள் யாரும் உறவாடுவதில்லை. தாத்தா கதை கதையாக தன்னுடைய குடும்பத்தை பற்றி நிறைய சொல்லுவார்.

கீரைக் கார தாத்தா அடிபட்டது என தெரிந்தவுடன் நம் தெருவில் தாத்தாவின் வாடிக்கையாளர்கள், உன்  அப்பா உள்பட விபத்து நடந்த இடத்திற்கு சென்று உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

மருத்துவமனையில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என மருத்துவர் கூறினார். அறுவை சிகிச்சை செய்தாலும் அவரால் நடக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் என்றார் மருத்துவர்.

கீரைக்கார  தாத்தா அறுவை சிகிச்சை எதுவும் செய்ய வேண்டாம், எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் மனைவிக்கு யாரும் உதவியும் செய்ய மாட்டார்கள்.

நீங்கள் எதுவும்  செலவு செய்ய வேண்டாம், நாங்கள் உங்களை பார்த்துக் கொள்கிறோம் என்று வாடிக்கையாளர்கள் சொல்ல மறுக்க முடியாமல் ஏற்றுக் கொண்டார் கீரை கார தாத்தா.

அறுவை சிகிச்சை தோல்வியில் தான் முடிந்தது. நடக்க முடியாமல் வீட்டோட முடங்கிப் போனதால் தாத்தாவின் மனைவி பாட்டி வேறு வழியில்லாமல் தாத்தாவின் பணியை தொடர்ந்தார் என்று தன் மகன் வாசுவிடம் கூறினாள் தாய்.

அம்மா, கீரைக்காரப் பாட்டியின் சத்தம் கேக்குது, நான் போய் வெளியில் பார்க்கிறேன் என வெளியே ஓடினான் வாசு.  பாட்டியை பார்த்த வாசுவுக்கு மகிழ்ச்சியில் சந்தோசத்தில் இடுப்பை சுற்றி கட்டிப்பிடித்துக் கொண்டான்.

என்னடா வாசு, பாட்டியை காணோம்னு தேடுனியா என்று கேட்க கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது வாசுவுக்கு.

வெளியே கீரைக்கார அம்மாவை பார்க்க வந்த வாசுவின் அம்மா வாசு அழுது கொண்டிருப்பதை பார்த்து என்னடா  ஆச்சு உனக்கு,? என்று கேட்க, ஒன்றுமில்லை மா,  பாட்டியை இரண்டு மூன்று நாட்களாக பார்க்கவில்லையா,  பாட்டியை பார்த்தவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் ஓடினான்.

ஏம்மா?  ஏதோ கல்யாணத்துக்கு போகணும் என்று சொன்னாயே போகவில்லையா என்று வாசுவின் அம்மா கேட்க, என்னுடைய உறவினர் ஒருவர் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று திருமணத்திற்கு வர வேண்டாம் என்று தம்பி  சொல்ல சொன்னதாக தகவல் வந்தது.

எனக்கு மனசே ஒடிந்து போய்விட்டது மா, கூடப்பிறந்த தம்பியின் மகனுக்கு தான் கல்யாணம். திருமண பத்திரிக்கையை தபாலில் தான் அனுப்பினார்கள். பல வருடங்களாக உறவே இல்லாமல் இருந்த தம்பி நமக்கு அனுப்பி இருக்கானே  என்று தான் திருமணத்திற்கு என்னை போய்விட்டு வர சொன்னார் என்னுடைய கணவர்.

அதனால்  தான் போகலாம் என்று இருந்த போது வர வேண்டாம் என்று ஒரு தகவல் வரவும்,  என்னடா வாழ்க்கை என மனம் நொந்து போய் வீட்டிலேயே இரண்டு நாள் முடங்கி கிடந்தேன்.

உடன் பிறந்தவன் ஒதுக்கினால் என்ன? என்னிடம் கீரை வாங்குபவர்கள் அனைவரும் என்னுடைய அண்ணன், தம்பி, அக்கா,  தங்கச்சி அவர்களுடைய குழந்தைகள் என்னுடைய குழந்தைகள் தான் என் நினைத்தவாறு மனதை தேற்றிக்கொண்டு கீரையை வாங்கிக் கொண்டு விற்க வந்தேன் என்றாள் கீரைக்காரப்பாட்டி.

இரண்டு நாளாக என்னை காணாமல் உங்க பையன் என்னை ஓடிவந்து கட்டி பிடித்து அழுதானே, இதைவிட வேறு எனக்கு எதுவும் வேண்டாம், இந்தப் பாசம் ஒன்றே எனக்கு போதும் என சொல்லிக்கொண்டே பாட்டி கீரை விற்க கிளம்பினாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மூடுபனி கோபுரங்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    இனி இல்லை இந்தக் கொலை (குறுநாவல் – பகுதி 8) – சுஸ்ரீ