in ,

தன்வினை தன்னைச் சுடும் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

எவ்வளவு நேரம் கோயில் அருகே நின்று கொண்டிருப்பது என அருகில் இருக்கும் ஒரு திட்டில் அமர்ந்தார் பெரியவர் பெரியசாமி.

அருகில் இருந்த பூக்கடைக்காரர், கடையை மறைக்குது, கொஞ்சம் நகர்ந்து உட்காரு பெருசு என சொல்ல பெரியவர் திட்டுக்கு கீழே அமர்ந்தார்.

பெரிய சாமியும், மகன் குணாவும் திருச்சியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிப்பதற்காக வந்திருந்தார்கள்.  ஆண்டாளை தரிசனம் செய்துவிட்டு சிறிது நேரம் இங்கேயே இருங்கள். சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வருகிறேன் என்று இரண்டு மணிக்கு விட்டுச் சென்ற குணா ஏழு மணி ஆகியும் வரவில்லை.

அப்போது மருமகள் கல்பனாவின் அம்மா தடுமாறி நடந்து  வந்தார்கள். பெரியசாமி அவர்கள் நடந்து சென்று சம்மந்தியிடம் எங்க அக்கா இவ்வளவு தூரம் என்று கேட்க,  என்னுடைய மருமகள் என்னை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி போனவள் 2 மணி நேரம் ஆகியும் வரவில்லை.

இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறாள் என நான் அவளை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் என்றாள் சம்மந்தி. ஆமா,  நீங்க எப்படி இங்கே வந்தீங்க என்று கேட்க என் மகன் இங்கே அமர வைத்து விட்டு போய்விட்டு வருகிறேன் என்று சொன்னவன் ரொம்ப நேரம் ஆச்சு வரவில்லை. அவனுக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் பெரியசாமி. 

ஏதாவது சாப்பிட்டீர்களா என்று பெரியசாமி கேட்க, கோயிலுக்கு வந்தவங்க இரண்டு வாழைப்பழம் கொடுத்தார்கள், அதை தான் சாப்பிட்டேன் பசிக்கிறது, வாங்க போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம் என்று இரண்டு பேரும் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு காவல் நிலையத்துக்குச் சென்ற இருவரும் இரண்டு பேர் பற்றியும் தீர விசாரித்தார் காவலர். 

பெரிய சாமியிடம் கைபேசி நம்பரை வாங்கி பெரியசாமியின் மருமகள் கல்பனாவுக்கு போட்டார்.  

மருமகள் பேசும்போது அவளுடைய அம்மாவிடம் கைபேசியை கொடுத்தார்.  கைபேசியில் பேசிய  மகள் என்னம்மா நம்பர் புதுசாக இருக்கிறது என்று கேட்க, ஆமாண்டி உங்க அண்ணன் பொண்டாட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு போகலாம் என்று அழைத்துக் கொண்டு வந்தாள்.

சாமி தரிசனம் முடிந்து ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு இதோ வருகிறேன் என்று சொன்னவள் இவ்வளவு நேரம் ஆகியும் வரவில்லை..

நல்ல வேளை  உங்க மாமனார் என்னை பார்த்து விட்டார். அவரும் நானும் தான் காவல் நிலையத்தில் இருக்கிறோம். மருமகன் அவரை தனியாக நிற்க வைத்து விட்டு எங்கே  போனார், உனக்கு ஏதாவது பேசினாரா இன்னும் அவரையும் காணோம் என்று சொல்ல மனதுக்குள் சுருக்கென்று தைத்தது.

வழி தெரியாத இடத்தில் மாமனாரை கொண்டு போய் விட்டு விடுங்கள் என்று சொல்ல கணவர் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விட்டார்.  

இதே போல் தான் நம்முடைய அம்மாவையும் அண்ணன் மனைவி கொண்டு வந்து கோவிலில் உட்கார வைத்து சென்று விட்டார்கள் போலிருக்கிறது என மனதுக்கு நினைத்தவாறு அண்ணனுக்கு கைபேசியில் அழைத்தாள்.

அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க, அம்மா நலமாக இருக்கிறார்கள் என்றும்  அடுத்த வீட்டில் பேசிக் கொண்டிருப்பதாக பொய் சொன்னான்.

பொய் சொல்லாதீங்க அண்ணா,  அம்மாவை கோவிலில் அண்ணி விட்டு விட்டு வந்ததாக இப்போது தான் என்னிடம் பேசினார்கள். பெரியவங்க தானே நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போக கூடாதா என்று கேட்க, அதை தான் நானும் கேட்கிறேன் என்றால் கல்பனாவின் அண்ணன்

உங்க மாமனாரை  எதற்கு நீ போய் கோவிலில் விட்டு விட்டு வந்தாய் என்று கேட்க அவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்றாள் கல்பனா.

இதே போல் தான் என் மனைவிக்கும் உன்னுடைய அம்மாவின் தொல்லை தாங்க முடியவில்லை என்று பதிலளித்தான்.

உன் மாமனாரை நீ உன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றால் உன்னுடைய அம்மாவை நான் அழைத்துச் செல்வேன் என்று சொல்ல வேறு வழி இல்லாமல் தன்னுடைய கணவரை அழைத்து வருவதற்கு அனுப்பி வைத்தாள் கல்பனா.

கல்பனாவின் கணவன் குணா கைபேசியில் தன்னுடைய மச்சானிடம் என்னுடைய அப்பாவை ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்டு போய் விட்டுவிட்டு வர சொல்கிறாள் உன் தங்கை. குடும்பம்  பிரிந்து போய்விடக் கூடாது என்பதற்காக நான் என்னுடைய அப்பாவை கோயில் வாசலில் உட்கார வைத்து விட்டு வந்ததாகவும், இந்த விவரத்தை தன்னுடைய மாமியாரிடம் சொல்லி இது ஒரு சும்மா நாடகம் தான் என்று நடிக்க வைத்தது கல்பனாவுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. 

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இனி இல்லை இந்தக் கொலை (குறுநாவல் – பகுதி 1) – சுஸ்ரீ

    ம்ம்ம்ம்…என்ன கதை எழுதலாம்? (சிறுகதை) – தமயந்தி. A