in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 1) – கவிஞர் இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ந்த மொத்தக் கம்பெனியின் இயக்குனர்கள் கூட்டம் (“போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்” கூட்டம்) மிகவும் ஆரவாரமாக நடந்து முடிந்ததும் வெளியே வந்த ஜே.கே’யை எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்.

”என்ன ஜே.கே. நீங்கள் இந்த வருடம் அதிகமான லாபம் வந்திருப்பதால் முப்பத்தைந்து சதவீதம் போன்ஸ் கொடுக்கலாம் என்று அறிவித்திருக்கிறீர்களே? அடுத்த வருடமும் நாம் இதே அளவிற்கு கொடுக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தீர்களா?” டைரக்டர் செங்குப்தா கேட்டார்.

ஒரு நிமிடம் மௌனம் சாதித்த ஜே.கே. ‘நீங்களெல்லாம் டைரக்டர் என்று சொல்லிக் கொண்டு புடுங்கதுக்கா உட்கார்ந்திருக்கீங்க’ என்று கத்த நினைத்தவர், ”தன்னைச் சுதாரித்துக் கொண்டு, ”செங்குப்தா நீங்களும் கம்பெனியின் ஒரு டைரக்டர். அடுத்த வருடம் இதைவிட எவ்வளவு நமது கம்பனி வேலையாட்களுக்கு போனஸ் தர முடியும். அதற்கு நாம் எவ்வளவு உழைப்பைத் தர வேண்டும் என்று யோசியுங்கள். மேலும் இந்த அளவிற்கதிகமான லாபம் நம்முடைய கம்பெனியின் ஒவ்வொரு தளத்திலும் பணிபுரிகின்ற ஒவ்வொருவரையும் பிழிந்து எடுத்த வருமானம். அதில் ஒரு பகுதியேனும் திரும்பவும் அவர்களுக்குப் போக வேண்டாமா?” என்று திருப்பிக் கேட்டார்.

‘’ஜே.கே. போனஸ் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே நான். ஆனால் முப்பத்தைந்து சதவிகிதம் அதிகம் என்கிறேன்.” செங்குப்தா கொஞ்சம் முறைத்துக் கொண்டு சொன்னார்.

‘ஏய்யா நீ வாங்குற இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்திற்கு பத்தில் ஒரு பகுதியாவது வேலை செய்வாயா? செய்தவனுக்கு கொடுப்பதில் உனக்கென்னக் குறையப் போகிறது? உன் அப்பன் வீட்டு பணத்தையா எடுத்துக் கொடுக்கிறோம்?’ என்று திட்ட நினைத்தவர்

”மிஸ்டர் செங்குப்தா நேரடியாகவோ, மறைமுகமாகவோ நமக்கு எவ்வளவு லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளனர். இது ஒரு நன்றிக்கடந்தான். முதலில் எல்லோருமே ஐம்பது சதவிகிதம் போனஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்லியபோது நீங்கள் வெளிநாடு சுற்றிவிட்டு திரும்பினீர்கள். கம்பெனி அளவிட்டதை விட பன்னிரெண்டு மடங்கு அதிகமாக செலவழித்து மாமன் மச்சான் எல்லோரயும் கூட்டிக்கொண்டு சுற்றிவிட்டு வந்தீர்கள். வேலை செய்தவனுக்கு போனஸ் கொடுக்கச் சொன்னால் உங்களுக்கு வலிக்கிறது அப்படித் தானே’’ ஜே.கே. கொஞ்சம் வேகமாகப் பேச

‘’உங்களுக்கு இந்த செங்குப்தாவை மட்டம் தட்டுவதென்பது அல்வா தின்ன மாதிரி அப்படித்தானே?. வாருங்கள் செங்குப்தா என் அண்ணா அப்படித்தான்’’ என்று செங்குப்தாவை இழுத்துக் கொண்டு போனாள் ஜே.கேயின் தங்கை பத்மினி..

”பத்மினி நீ ஒரு பெங்காளியைக் கல்யாணம் செய்து கொண்டு.. நீயும் என் தங்கை என்று உன் கணவன் செங்குப்தாவை நான் கட்டி அழுது கொண்டிருக்கிறேன்.”

”அண்ணா மெதுவாகப் பேசுங்கள். அவருக்கு தமிழ் நன்றாகப் புரியும். வீட்டிற்குப் போனதும் காச்மூச்சென்று கத்த ஆரம்பித்து விடுவார்.”

”இப்படிச் சொல்லியே என்னை அடக்கி விடு. புருஷனை எதிர்த்து பேசாத உண்மையான தமிழச்சி” என்று வெளியே வந்து காரில் ஏறிக்கொண்டதும் மொபைல் போன் பாடியது.

போனை எடுத்து ‘’ராணி என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“உடனே வீட்டிற்கு வாருங்கள். திரும்பவும் நமது மகன் அரசுவைக் காணவில்லை.” என்றாள். எதிர்முனையில் அவர் மனைவி ராணி.

“அவன் என்ன சின்னக் குழந்தையா? எஞ்சினியரிங் முடித்து விட்டு என் பிஸினஸைக் கவனிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டு திரிகிறான். மொபைலில் அவனைக் கூப்பிடு.”

“நீங்கள் ஆபீஸ் என்று தவம் கிடக்கிறீர்கள். மூன்று நாட்களாக அவன் வீட்டிற்கு வரவில்லை. செல்போன் வீட்டிலேதான் இருக்கிறது. அவன் எடுத்துக் கொண்டு போகவில்லை. எனக்குப் பயமாக இருக்கிறது.”

“அய்யோ நீ ஒரு தொட்டாச்சிணுங்கி. எதற்கெடுத்தாலும் உடனே அழ ஆரம்பித்து விடுவாய். சரி…சரி. நான் கிளப்பிற்கு போவதை நிறுத்தி விட்டு வீட்டிற்கு வருகிறேன். ஆமாம் அவன் நண்பர்கள் வீட்டிற்கு போன் பண்ணிப் பார்த்தாயா?”

“எல்லோர் வீட்டிற்கும் பேசியாகி விட்டது.”

“சரி..சரி. அழாதே. நான் இதோ வந்து விடுகிறேன்.” என்று தொடர்பைத் துண்டித்து விட்டு திரும்ப அதே செல்போனில் வேறு ஒரு எண்ணைத் தேடி, “ஹலோ ஜே.கே. பேசுகிறேன். அரசுவை மூன்று நாட்களாகக் காணவில்லை. வெளியே தெரியாமல் இரகசியமாக கொஞ்சம் தேட முடியுமா?” என்று கேட்கும்போது கொஞ்சம் நடுக்கம் காத்திருந்தது.

“என்ன ஜே.கே. பயந்திருக்கிறீர்கள். நான் உங்கள் வலது கை. இந்த பாபு இருக்கும் வரை ஏன் வீணாக கலக்கம்?. நான் உங்கள் செக்யூரிட்டி ஆபிஸர் மட்டுமல்ல. ஆருயிர் நண்பன். உங்கள் அன்பின் ஆலோசகன். ஏதாவது வீட்டிலே சண்டை சச்சரவுகள் உண்டா.” என்றது எதிர்முனை.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தாரகை (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்

    மூன்று கோடுகள் (சிறுகதை) – திசை சங்கர்