in ,

யார் அந்த அவன்? (சிறுகதை) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அவனும் நோக்கினான் அவளும் நோக்கினாள். இருபது நிமிட பார்வை பரிமாற்றத்திற்கு பின் அவளே தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

“உங்களுக்கும் LAN கனெக்ட் ஆகலையா?”

வெறும் இரண்டு மாத பழக்கந்தான். மனதில் உள்ளதை சொன்னால், தவறாக எடுத்துக் கொள்வானோ? சம்மதிப்பானா, முடியாது என்று சொல்லி விடுவானா ? என ஆயிரம் சிந்தனைகளுடன் அவனிடம் கேட்டாள்.

“C பின் சார்ஜர் இருக்கா?”

தெரியாததையும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளும் அவள், அவனிடம் பேசுவதற்காகவே நன்கு தெரிந்ததையும் தெரியாதது போல் காட்டிக் கொள்கிறாள், ஏனென்று தெரியாமலேயே…..

அவனின் வருகையை எதிர்நோக்கி வாசலில் காத்திருக்கும் அவளிடம், அவன் கேட்டான் “யாரை தேடுகிறீர்கள்?”

பதிலே கேள்விகள் கேட்பது காத்திருப்புகளில் தான்.

அவன் வந்து விட்டானா என்று அறிய நின்றிருந்த வண்டிகளையும்  காலணி அலமாரியையும் நோட்டமிட்டாள் அவள். அவள் எப்போது வருவாள் என கடிகாரத்திடம் கேட்கிறான் அவன்.

அவள் உள் நுழைந்ததும், சிறு புன்னகையை பரிமாறிக் கொள்கின்றனர் இருவரும். மற்றுமொரு மெளன உரையாடலுக்கு ஆயத்தமாயினர் இருவரும்.

“சாப்பிட்டாச்சா?” இது வெற்றுக் கேள்வியல்ல. உரையாடலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் சாவி.

பதில் தெரிந்தும் சில கேள்விகள் சுவாரசியமாகின்றன.

“சாப்பிட்டாச்சா?”

முல்லை மொட்டவிழ்கையில் நீங்கள் கண்டதுண்டா? அவள் கண்டாள். மற்றுமொரு மலர் கேட்டு அவன் சிரிக்கையிலே…..

சிரிக்க மறந்த முகங்களுக்கு மத்தியில் அன்றலர்ந்த மலராய் அவன்….

மேஜையில் கலைந்திருந்த தாள்களுக்கு மத்தியில் பத்திரமாய் இருக்கிறது அவன் தந்த பேனா!

அவள் வாங்கிய நொடியிலிருந்து அவனைப் பற்றியே எழுதி தீர்த்தது அவன் தந்த பேனா!

கவிதை நன்றாக உள்ளது. “யார் அந்த அவன்?” என்று கேட்டான். நானா? என்று கேட்டால் ஆமாமென்பேன். யாரென்று கேட்டால் என் சொல்வேன்?

உங்களுக்காவது தெரியுமா யார் அந்த அவன்? எனக்கும் தெரியவில்லை.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 28) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 6) – ஜெயலக்ஷ்மி