2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மாலை வேலை….
கடற்கரையை ஏக்கத்தோடு பார்த்து கொண்டு இருந்தவன் ஒரு விஷயத்தை கவனித்தான். கடற்கரையை ஓட்டினார் போல் இருந்த இடமெல்லாம் ஈர மணலாகவே இருந்தது. அப்போது அங்கு வந்த மக்கள் உட்காருவதற்கு பேப்பரை தேடி தேடி அதை போட்டு உட்கார்ந்தார்கள்.
அதை கவனித்த கதிரேசன் ஒரு நிமிடம் யோசித்தான்…. வரும் வழியில் தடுக்குப்பாய் விற்கும் கடையை பார்த்தான். பாய் வாங்க காசில்லை. அப்போது கடற்கரை மணலில் சிக்கி இருந்த காரை எடுக்க ஒரு பெரியவர் சிரமப்படுவதை பார்த்த அவன் ஓடிப்போய் அவர் முன் நின்று சார் நானும் காரை தள்ளவா என்று கேட்டான்?
வாப்பா வா கொஞ்சம் உதவி பண்ணுப்பா என்று காத்து இருந்தவர் போல சொன்னதும் தன் பலம் கொண்ட மட்டும் காரை தள்ளினான் கதிரேசன். டிரைவர் காரை ஸ்டார் செய்து வெளியே எடுத்தார்.
ரொம்ப நன்றி தம்பி என்று கூறிவிட்டு தன் சட்டை பையில் இருந்து ஒரு 50 ருபாயை கொடுத்து விட்டு அந்த காரில் ஏறி அமர்ந்தார் அந்த பெரியவர்….. இதை எதிர்பார்த்து காத்திருந்தவன் போல ஓட்டமும் நடையுமாக தடுக்குப்பாய் கடைக்கு ஓடியவன் பாய் என்ன விலை என்றான்.
ஒரு பாய் பத்து ரூபாய் என்ற கடைக்காரரிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து ஐந்து தடுக்குப்பாய்களை வாங்கினான். தடுக்குபாய் என்பது ஒருவர் அமரக்கூடிய ஒரு சின்னபாய்..
பாய்களை வாங்கியன் மறுபடியும் கடற்கரைக்கு ஓடிவந்தான். அப்போதுதான் அங்கு காரில் இருந்து இறங்கிய சூட்டு கோட்டு போட்ட ஆசாமி உட்கார இடம் தேடி கொண்டு இருந்தார்.
“எங்கும் ஈரமணல்”.
அதை கவனித்த கதிரேசன் ஐயா இந்தாங்க இந்த பாய் போட்டு உட்காருங்க நீங்க திரும்பி போகும் போது கொடுத்தா போதும் ஆனால் வாடகை 3 ரூபாய் என்றான் மெதுவாக….
சரிப்பா என்று சொல்லி விட்டு ஒரு பாய் வாங்கி கீழே போட்டு அமர்ந்தார் அந்த சூட்டு கோட்டு போட்ட ஆசாமி. அதைப்போல் இன்னொரு பாயையும் வாடகைக்கு கொடுத்தான்.
இதைபோல் வாடகைக்கு கொடுப்பதும் வாங்குவதுமாக இருந்த கதிரேசன் மீண்டும் இரண்டு பாய்களை வாங்கி வாடகைக்கு விட ஆரம்பித்தான். இதை தொழிலாகவே மாற்றி விட்டான் கதிரேசன்.
தினம் நான்கு மணியானால் கடற்கரைக்கு வந்து பாய்களை வாடகைக்கு விட ஆரம்பித்தான். இப்போது அவனிடம் கை நிறைய காசு.
கையில் நல்ல தொழில். சில வருடங்களுக்கு பின்பு காதில் விழுந்த செய்தி.,. மும்பையில் அவன் இப்போது பெரிய கார்பெட் (தரை விரிப்பு) கம்பெனியின் ஓனர் என்று. .
முயற்சி திருவினையாக்கும்
“இளைஞனே வேலை தேடினேன் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவதை விட நீயே வேலையை தேடி கண்டுபிடி” முன்னேற்றம் உன்னை தேடி வரும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings