in ,

புடவியின் சதி (சிறுகதை – பாகம் 1) – தோமிச்சன் மதேய்கல் (மொழிபெயர்ப்பாளர் பாண்டியன், புதுக்கோட்டை)

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

குரியன் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விடுமுறையில் கனடாவில் இருந்து திரும்பியிருப்பதை அக்கம்பக்கத்தினரிடம் கேள்விப்பட்டு, நான் குரியனின் வீட்டிற்கு ஓடாமல் இருந்தால்தான் வியப்புக்குரியது. தொந்தி சற்றே ஊதியிருந்ததைத் தவிர அவனிடம் கிஞ்சித்தும் எந்த மாறுதலும் இல்லாததால் அவனை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன். அவன் என்னைப் பார்த்தவுடன் என்னிடம் பாய்ந்து வந்து கரடியைப் போலக் கட்டிக் கொண்டான்.

“பார்த்து டா…” என்று சொல்லி “நாம் இப்போது வேறு இந்தியாவில் இருக்கிறோம். தார்மீக போலீஸ் உட்பட எல்லா வகையான உளவாளியும் எல்லா இடத்துலயும் இருக்காங்க” என்றவாறே அந்த அணைப்பிலிருந்து நெளிந்து மீண்டேன்.

எப்போதும் போல அவன் சிரித்தான். வாழ்க்கை அவனுக்கு ஒரு தீவிரமான விவகாரமாக இருந்ததில்லை. நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் – அந்த கிராமத்தின் பாரிஷ் சர்ச் நடத்தும் அரசு உதவி பெறும் மலையாள பள்ளியில் – படித்தோம். வீட்டிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக, நான் என்னால் முடிந்ததைச் செய்து, தேர்வில் ஓரளவு நன்றாக தேர்ச்சி பெற்றேன். அதே நேரத்தில் குரியன் சிரமப்பட்டு தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களையே பெற்றான். குரியனின் விடைத்தாள்களுடன் வந்த ஆசிரியர்கள் அவனுடைய விடைகளைக் கேலி செய்தபோது, அவனும் சேர்ந்து சிரித்தான். அந்த பகடி தம்மீது இருந்ததை அவர் உணர்ந்தானா என்று சில நேரங்களில் யோசிப்பேன். நிச்சயமாக, அவன் மடையன் இல்லை. வகுப்பில் பல நகைச்சுவைகள் தன்னைச் சுற்றி சுழல்வதும் அவனுக்கும் தெரியும். ஆனால் அதற்கெல்லாம் அவன் வருந்தவில்லை. அவனுடைய சமூக அறிவியலைப் பொறுத்தவரை முகமது-பின்-துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து பாரிஸுக்கு மாற்றினார். வடிவியலில் புதிய தேற்றங்களையும், அறிவியலில் புதிய சமன்பாடுகளையும் கண்டுபிடித்தார். வகுப்பினர் அதைக் கேட்டுச் சிரித்தபோது அவர்களுடன் இணைந்து குரியனும் சிரித்தான்.

“நான் ஒரு கனேடியன். தார்மீகமோ அல்லது அதார்மீகமோ இந்திய போலீஸ் என்னை ஒன்னும் செய்ய முடியாது” நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நான் அவனிடம் கூறியபோது அவன் பதிலளித்தான்.

குரியன் பள்ளிப் படிப்பை முடிக்கவிருந்தபோது, வெளிநாட்டிற்குச் சென்று அங்கு வசிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது கனவு. “சொர்க்கம் அங்கே இருக்கிறது, நண்பா” என்று அவன் சொன்னான். “இந்தக் கடல் எல்லாம் தாண்டி.”

கேரளாவில் ஒரு தொலைதூர கிராமத்தில் வாழ்ந்து, தேர்வில் தேர்ச்சி பெற முடியாத, மலையாள மீடியம் பள்ளியில் படித்த குரியன், வெளிநாட்டில் தனது இடத்தை எவ்வாறு கண்டுபிடிப்பான்? என்னிடம் பதில் இல்லை.

ஆனால் குரியனுக்கு பதில் இருந்தது. “சிம்பிள் நண்பா. அங்கே செட்டில் ஆன ஒரு மலையாளி நர்ஸை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்”

பள்ளி முடிந்ததும், குரியன் நகரத்தில் உள்ள ஐடிசியில் சேர்ந்து, பிளம்பிங் மற்றும் வயரிங் சான்றிதழ் படிப்பில் சேர்ந்தான். “இந்த எஞ்சினியரு இல்லன்னா அது மாதிரி வேற ஏதும் என்னால ஆக முடியாது,” என்று அவன் கூறினான். வெளிநாட்டில் பணிபுரியும் எந்த தாதி ஒரு பிளம்பரை, எலக்ட்ரீஷியனை திருமணம் செய்வாள்?

நீங்கள் எதையாவது விரும்பினால், அதை அடைய உங்களுக்கு உதவுவதில் புடவி அனைத்து சதிகளையும் செய்கிறது. அந்தக் கொள்கையை குரியன் கண்டுபிடித்து நீண்ட காலத்திற்குப் பிறகுதான் பவுலோ கோய்லோ-வே கண்டுபிடித்தார். ஆனால் குரியன், ஒரு பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியனாக இருந்து விட்டதால், அதை அவனுக்கு அவ்வளவு நேர்த்தியாக சொல்லத் தெரியவில்லை. அவன் சொன்னான், “வாழ்க்கைக்கு என்று ஒரு வழி இருக்கிறது, நண்பா.”

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 2) – கற்பக அருணா

    புடவியின் சதி (சிறுகதை – இறுதிப்பகுதி) – தோமிச்சன் மதேய்கல் (மொழிபெயர்ப்பாளர் பாண்டியன், புதுக்கோட்டை)