in

வட்டியும் முதலும் (குறுநாவல் – இறுதிப்பகுதி) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2

“கோவில் வந்துடுத்து பார், அப்படி என்ன யோசனை? குழந்தைக்கு வேணுங்கிற சாமான மட்டும் எடுத்துண்டு வா. மீதிய மாப்பிள்ளை பார்த்துப்பார்” என்றார் ஸ்ரீதேவி.

ரங்கா குழந்தையையும், அவனுக்கான மாற்றுத் துணி மற்றும் காதணிகளை எடுத்துக் கொண்டு கீழிறங்கினாள்.

நாவிதரும் ஆசாரியும் உள்ளூரென்பதால் முன்னமே வந்திருந்தனர். முடியிறக்கி காது குத்தி விட்டு நேராக தாயாரை தரிசித்து விட்டு சுவாமி சன்னதிக்கு  சென்றனர்.

செமஸ்டர்  விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த சீமாவிடம், அவனை விரும்புவதாக ரங்கா கூறினாள். இதை சற்றும் எதிர்பாராத அவன், தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லையென்றும் மேற்கொண்டு இதைப் பற்றி பேச வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டான்.

அன்று பேசாமல் விலகியவன்தான், இன்று வரை பேசவில்லை. அவன் புறக்கணித்தது அவளை மட்டுமல்ல, அவளுக்குள் இருக்கும் அவனையும் சேர்த்து தான். நடுவில் அவன் திருமணத்திற்கு  சென்று கல்யாண வேலைகளிலும் சகஜமாக  ஈடுபட்டாலும் மனம் மட்டும் அவனை மறக்க மாட்டேனென்கிறது.

மறக்க நினைப்பதையே மீண்டும் மீண்டும் நினைத்து தன் வலிக்கு மருந்து போட்டுக் கொள்கிறது இந்த பாழாய் போன மனது. அவனது நினைவுகள் அனைத்தும் ஆனந்த பைரவியில் ஆரம்பித்து முகாரியில் முடிகின்றன.

மூலவரை பார்த்தவுடன் உணர்ச்சிப் பெருக்கில் அழுதே விட்டாள் ரங்கா. “ஏன் என் வேண்டுதலை நிறைவேற்றவில்லை? இந்த வாழ்க்கையும் நீ கொடுத்தது தான். நான் நன்றாக உள்ளேன். ஆனால் நான் சொல்லி தான்  உனக்கு எல்லாம் தெரிய வேண்டுமா?” என்று மானசீகமாக அரற்றினாள்.

“என் வேண்டுதலை நீ நிறைவேற்றவில்லை, ஆனால் வேண்டுதலுக்கான நேர்த்திக் கடனை மட்டும் இரண்டு தடவை வாங்கிக் கொண்டாயே, இது நியாயமா?” என்று கேட்டாள்

சுவாமி தரிசனம் முடிந்து அனைவரும் வெளி பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தனர். அதிகாலையிலேயே எழுந்ததால் சிறிது அசதி. அருகில் ஒரு தந்தையும் மகனும் போன்ற இருவர் பேசியது தற்செயலாக ரங்கா காதில் விழுந்தது.

“அப்பா நான் சரியா தான் பா ஆடிட்டர்ட்ட சொன்னேன், அவர் தான் மாத்திக் கொடுத்துட்டார்.”

 “நீ என்னனு சொன்ன?”

“பேங்க்குக்கு புரஜக்டட் பேலன்ஸ் ஷீட் 10% GP ரேஷ்யோல வேணும்னு சொன்னேன்” என்றார் மகன்.

“இல்லை நீ போன வருஷத்தை விட அதிகமாக 10% னு எக்ஸ்ட்ரா வார்த்தைய விட்டுருக்க. நீ கேட்டபடி ஆடிட்டர் கொடுத்துட்டார். நீ தப்பா கேட்டுட்டு, ஆடிட்டர குறை சொல்லாத” என்று அப்பா மகனை கோபித்தார்.

ரங்காவிற்கு சட்டென நினைவு 10 வருடங்களுக்கு முன் சென்றது. அன்று அவள் வேண்டியது என்னவென்றால், வழக்கம் போல அல்லாது, சீமாவின் பூர்வீக வீட்டுப் பெயரைக் குறிப்பிட்டு, அந்த வீட்டிற்கு மருமகளாக வேண்டும். அப்படி என் கோரிக்கையை நிறைவேற்றினால், முதல் குழந்தைக்கு உன் கோவிலில் முடி எடுக்கிறேன் என்று தான் எக்ஸ்ட்ரா வார்த்தைகளை போட்டு வேண்டியது நினைவுக்கு வந்தது.

கூடவே  சீமாவும் பார்த்தாவும் ஒரே வீட்டை சேர்ந்த தாயாதிகள் என்பதும், இந்த கோவிலிலே நடந்த சீமாவின் திருமணத்தில்தான் பார்த்தா முதன்முதலில் ரங்காவை பார்த்தான். அவர்களின் குலதெய்வம் இந்த வெங்கட் ரமணர்தான்.

தெளிந்த ரங்கா உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே திரும்பினால், இக்கதையின் நாயகனும் இயக்குனருமான வெங்கட்ரமணர் ரங்காவை பார்த்து புன்னகையுடன், ‘நீ கேட்பதை சரியாக கேட்கவில்லை.  நீ கேட்டதை நான் கொடுத்ததால், வட்டியும் முதலுமாக வாங்கிக் கொண்டேன் பின்பும், என்னை குறை சொல்கிறாயே இது நியாயமா?’ எனக் கேட்டது ரங்காவின் செவிகளுக்கு மட்டும் கேட்டது

(சுபம்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவன் பறந்து போனானே (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    மன்னவன் வந்தானடி (சிறுகதை) – சுஶ்ரீ