in ,

உன்னைத் தானே…! (சிறுகதை) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ராகினியைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போய் விட்டது. காபி எடுத்துக் கொண்டதும் பெண்ணின் தந்தை தணிகாசலம் கேட்டார் “மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்கா?” என்று.

“ஆமாம்” என்றுெ சொல்ல எத்தனித்தபோது, கீதா வந்து மனதிற்குள் எட்டிப்பார்த்து விட்டுப் போனாள். அக்காவிடம் காதில் இரகசியமாகச் சொன்னான் விஜய்.

“அதெப்படிடா முடியும்? இருந்தாலும் கேட்டுப் பார்க்கிறேன்” என்று சொன்ன விஜயின் அக்கா “எங்களுக்கு ராகினியை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒரு சின்ன விஷயம்” என்று இழுத்தாள்.

“என்னம்மா என்ன விஷயம்?” என்று பதற்றமாக ராகினியின் அம்மா ரெஜினம்மாள் கேட்டாள்.

“அது… அவன் பொண்ணுகிட்டே ஏதோ தனியாகப் பேசணுமாம்?” என்றாள் ரோஜா விஜயின் அக்கா.

“இதுதானா பெரிய விஷயம் பேசச் சொல்லிட்டா போச்சு” என்ற தணிகாச்சலம், மகன் சந்திரனிடம் “டேய், உன் அறைக்கு மாப்பிள்ளையை கூட்டிட்டுப் போ” என்றவர் மனைவியிடம் “உம் பொண்ணை கொஞ்சம் அவரிடம் பேச அனுப்பு” என்றார்.

ராகினி வந்ததும் எழுந்து கொண்ட விஜய், “எப்படி இருக்கீங்க” என்றான்

“நன்றாக இருக்கிறேன். நானே உங்களிடம் தனியாக பேசனும்னு நெனைச்சேன் . ஆனால் நீங்களே பேசனும்னு சொன்னதும் ரொம்ப சந்தோசமாயிடுச்சு” என்றாள் ராகினி.

மனதுக்குள் “என்னவாக இருக்கும்?” என்று யோசித்துக்கொண்டே “என்னங்க.. என்ன விஷயம்? என்னைப் பிடிக்கவில்லையா?” என்று கேட்டான் விஜய்.

”சே! அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. இருந்தாலும் மனதில் ஒரு உறுத்தல். ஆனா ஏதோ பேசனும்னு கூப்பிட்டீங்களே என்ன விஷயம்”. ராகினி ஆர்வமாகத் திரும்பி அவரிடம் கேட்டாள்.

“நான் பேசறது இருக்கட்டும். நீங்களே பேசனும்னு நெனச்சதா சொன்னீங்களே என்ன விஷயம்!” விஜய் கேட்டான்.

“நான் சொல்றதக் கேட்டா கொஞ்சம் கஷ்டமாகத் தானிக்கும். ஆனால் முதல்லே சொல்லிட்டா நல்லதில்லியா, அதான்… “அவள் பெருமூச்சு விட்டாள்.

அவன் எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பாத்தான்.

“ம்… ம்…. உங்க பேர் என்ன சொன்னீங்க”

“சொல்லவேயில்லையே…. எம் பேர் விஜய்”

“ஆங்… விஜய்… நான் ஏற்கனவே ஒருத்தரை…. ஒருத்தரை… கொஞ்சம் காதலிச்சவள்…ஆனால் அவர் கொஞ்சம் சரியான ஆளா இல்லாததால் மட்டுமில்லாம தீவிரவாத கூட்டத்திலே இருந்ததாலே பிரிஞ்சிட்டேன். உங்களைப் பார்த்ததும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்று சொன்னால் கூட உங்களிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். இது தான்…. திருமணத்திற்குப் பிறகு ஏன் முன்னாலேயே சொல்லலன்னு சொல்லக் கூடாது பாருங்க…” என்றாள் ராகினி மனசு லேசாக உணர்ந்தவாறு…

சிரித்தான் விஜய், “ஏன் விஜய். நான் என்ன ஜோக்கடித்தேனா? சிரிக்கிறீர்கள் ஆமா. நீங்க கூட என்கிட்ட ஏதோ பேசனும்ணீங்களே… அதைக் கேட்க வேண்டும் என்று தான் மனதுக்குள்ளே கேட்டுகிட்டே இருக்கேன். சொல்லுங்க பொண்ணுகிட்டே பேசணும்னு கூப்பிட்டீங்களே. என்ன விஷயம்” என்றாள்…

“நீங்கள்… உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அதனாலே இனி நீ ‘வா’ ‘போ’ண்ணே கூப்பிடலாம்னு நெனக்கிறேன். நீ சொன்ன அதே விஷயத்தை தான் தெளிவாக் கிடணும்னு நெனச்சேன். இனிதாண்ணு ஒரு பெண்ணைக் காதலிச்சேன். பணக்கார மாப்பிள்ளை கெடச்சதும் உட்டுட்டுப் போயிட்டா. கல்யாணத்துக்கு முன்னாலே உன்னிடம் சொல்லிடனும்னு நெனச்சேன். அதுக்காகத் தான் உன்னோடு கொஞ்சம் பேசணும்னு நெனச்சேன்” என்றான்.

“இப்பதான் நீங்க சிரித்ததற்கு அர்த்தம் புரிகிறது. இரு புண்பட்ட உள்ளங்கள் புதிதாக இணையப் போகின்றன. சந்தோசம்தான்” என்றாள் ராகினி.

“இப்படிச் சும்மா கேட்டா எப்படி?” என்றான் விஜய்.

“பின்னே எப்படி?” பயந்தவாறு கேட்டாள்

இரண்டு பக்கமும் பார்த்து கொண்டே அருகில் பார்த்து. அவள் கையை எடுத்து முத்தமிட்ட விஜயும் “இப்போது மகிழ்ச்சி தான்” என்றான்.

சிரித்துக் கொண்டே ஓடினாள் ராகினி…

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு விவசாயியின் கனவு…(கட்டுரை) – இரஜகை நிலவன்

    அணில் (சிறுகதை) – பிரபாகரன்.M