“உன்னையே மதிக்க”, “உன்னையே நேசி”, நீ உன்னையே நேசிக்காதவரை மற்றவர்களை முழுமையாக நேசிக்க முடியாது என்பதை உணர்”
“உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?” என்ற ஒரு எளிய கேள்வியை நாம் எதிர் கொண்ட சமயங்களில் நம்மில் பலர் தடுமாறிப் போயிருக்கின்றோம். மிகவும் சுலபமாக பதிலளிக்க வேண்டிய ஒரு கேள்விதான் இது. ஆனாலும், நாம் பதிலளிக்க இயலாமல் சிரமப்படுகிறோம்.
இது போன்ற சூழ்நிலைகள் நமக்கு தரும் பாடம் என்ன?
சுயவிழிப்புணர்வை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவமே. நாம் உண்ணும் உணவு அல்லது பார்க்கும் திரைப்படம் இவற்றைத் தீர்மானிப்பது என்பது சுய விருப்பங்கள் ஆகும். ஆனால், சுய விழிப்புணர்வு இவையனைத்திற்கும் மேலாக நம்முள் எழும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் புரிந்துக் கொள்வது.
நம்மைப் பற்றி புரிந்து கொள்வதில் முக்கியமாக நம் உணர்வுகள் மற்றும் அவற்றை தூண்டும் விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். நம்மை நாம் புரிந்து கொள்ளும் பயிற்சியில் நம்மை நம் தனித்துவத்துடன் இணைத்துக் கொள்கிறோம். இது நம்முடைய தற்போதையை நடத்தைகளை சுய மதிப்பீடு செய்ய உதவுகிறது.
என் வயிறு, “பசிக்கிறது” என்று என்னிடம் கூறும் போது, நான் பசியாக இருக்கிறேன் என்று சொல்வது எளிதாகிறது. எனவே, உங்களுக்கு பசியாக இருக்கிறது, நீங்கள் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குப் புரிகின்றது. ஆனால் நம் உணர்வுகளைப் பொறுத்தவரை அது தரும் குறிப்புக்கள் மற்றும் சமிக்ஞைகளைப் புரிந்துக் கொள்வது எளிதானதா? சுய விழிப்புணர்வு அந்த உணர்வுகளை, நின்று கவனித்து , நமக்குள் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது.
சுய விழிப்புணர்வு என்றால் என்ன?
சுய விழிப்புணர்வு என்பது ஒருவரின் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் செயல்களை அடையாளம் கண்டு அதை புரிந்து கொள்ளும் திறன் ஆகும். இதன் மூலம், நமது பழக்க வழக்கங்கள் மற்றும் நடத்தைகளை சிறப்பாக கையாள்வதுடன், நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். நம் வாழ்வில் நம்மால், கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைக் தெரிந்துக்கொள்வது நமது மகிழ்ச்சியை நாம் கண்டுணர உதவும்.
சுய விழிப்புணர்வு ஏன் முக்கியமானது?
நாம் அனைவரும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் பரபரப்பாக இருக்கிறோம், நம் செயல்கள் மற்றும் நடத்தைகளை நாம் கவனிப்பதில்லை. ஏதாவது தவறு நடந்தால் மட்டுமே அதைப் பற்றி சிந்திக்கிறோம், பின்னர் நடந்தவற்றை எண்ணி “நான் இப்படி பதிலளித்திருக்கலாமோ?” அல்லது “நான் இவ்வாறு செய்திருக்கலாமோ” என்று நினைக்கிறோம். ஆனால் சில சூழ்நிலைகளை விரும்பத்தகாத தருணங்களாக மாற்றியதில் நம்முடைய பங்கும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல், மற்றவர் மீது பழியை மிகச் சுலபமாக சுமத்தி விடுகிறோம்.
நீங்கள் சுயஉணர்வை பற்றி அறிந்து கொண்டால், அற்பமான பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்ற மாட்டீர்கள், உங்களுக்கு எது சிறந்தது?, எது தேவையற்றது? என்பது பற்றிய ஆழமான புரிதல் இருக்கும்.
சுயவிழிப்புணர்வு ஒரு முக்கிய வாழ்வியல் திறனாகும், ஏனெனில் அது நமது தன்னம்பிக்கை மற்றும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அதிகரிக்கிறது. நம் தேவைகளை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது. உணர்ச்சிகளை நிர்வகிக்க உதவுகிறது
முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. வெளிப்புற காரணிகளுக்கான நம் எதிர் வினையை ஆரோக்யமானதாக்குகிறது. வளர்ச்சி மனப்பான்மையை உருவாக்குகிறத வேலைத்திறன் மற்றும் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது
தன்னை தானே அறிந்துக் கொள்வது என்பது நாம் நினைப்பதைக் காட்டிலும் மிகவும் கடினமான விஷயம். நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு பல்வேறு வகையான புறக்காரணிகளும், நம்முள்ளே இருக்கும் பல்வேறு வகையான காரணிகளும் காரணமாக அமைக்கின்றன. என்னை யாரும் புரிந்துக் கொள்ளவில்லை என்று குறைச் சொல்வதை விட அதை எதிர்க்கொள்வது மேலானதாகும்.
சுயஅன்பு என்பது நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய ஒரு அடிப்படை உணர்வு. உங்களை நேசிப்பது முக்கியம், ஏனென்றால் உங்களை நிபந்தனையின்றி நேசிக்கக்கூடிய, உங்கள் அனைத்து குறைபாடுகள் மற்றும் சந்தேகங்களுடன் உங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் எதுவாக இருந்தாலும் உங்களை மன்னிக்கக்கூடிய ஒரே நபர் நீங்கள்தான்.
லூயிஸ் ஹே தனது “உங்கள் வாழ்க்கையை நீங்கள் குணப்படுத்த முடியும்” என்ற புத்தகத்தில், “நமது வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நான்கு விஷயங்கள் மட்டுமே காரணம். மனக்கசப்பு, விமர்சனம், குற்ற உணர்வு மற்றும் பயம்” என்று கூறுகிறார்.
இந்த உணர்வுகள் அனைத்தும் மற்றவர்களைக் குறை கூறுவதாலும், நமது அனுபவங்களுக்குப் பொறுப்பேற்காததாலும் வருகின்றன. வெளியே என்ன நடந்தாலும் அது உங்கள் உள் சிந்தனையின் கண்ணாடி மட்டுமே. எனவே நீங்கள் அசிங்கமானவர், போதுமான நல்லவர் அல்ல, பயனற்றவர் என்று நீங்கள் நினைத்தால், உலகம் உங்களை வேறுவிதமாக நம்ப வைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் நேர்மறையாக இருந்தால், உங்களை ஏற்றுக்கொண்டால், உங்கள் தவறுகளைப் பொருட்படுத்தாமல் உங்களை நீங்கள் அங்கீகரித்தால், உலகமும் அதையே செய்யும்.
“அதிசயங்களின் பாடநெறி” (Course in Miracles) கூறுகிறது, சோகத்தின் அனைத்து நிலைகளும் மன்னிக்க முடியாத நிலையிலிருந்து வருகின்றன. நாம் உண்மையிலேயே நம்மை நேசித்து, நம்மை அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது, வாழ்க்கையில் எல்லாமே செயல்படும். நமது ஆரோக்கியம் மேம்படுகிறது, நாம் அதிக பணத்தை ஈர்க்கிறோம், நமது உறவுகள் மேலும் நிறைவடைகின்றன, மேலும் நம்மை மிகவும் நேர்மறையாக வெளிப்படுத்தத் தொடங்குகிறோம். நாம் நம்மை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக உலகம் நம்மிடம் ஈர்க்கப்படுகிறது.
சுயவிமர்சனமும், சுய முன்னேற்றமும் முற்றிலும் வேறுபட்டவை. சுயவிமர்சனம் என்பது உங்களைத் தொடர்ந்து திட்டிக் கொள்வதோடு மாற்றத்தை எதிர்க்கிறது. உதாரணமாக, நீங்கள் பருமனாக இருக்கிறீர்கள், உங்கள் முகத்தில் பெரிய தடிப்புகள் உள்ளன. நீங்கள் கண்ணாடியைப் பார்த்து, நீங்கள் கொழுப்பாக இருக்கிறீர்கள், நீங்கள் அசிங்கமாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள்! நீங்கள் அழகாக இருக்க வேண்டும்! ஏனென்றால் உலகம் உங்களை வெறுக்கும்! சரி, உலகம் நிச்சயமாக உங்களை வெறுக்கும், நீங்கள் கொழுப்பாக அல்லது அசிங்கமாக இருப்பதால் அல்ல, ஆனால் நீங்கள் உங்களை வெறுக்கத் தொடங்கி விட்டதால். என்னை நம்புங்கள், இந்த வெறுப்பு உங்களை மோசமான விஷயங்களுக்குத் திருப்பிவிடும், அதிகமாக சாப்பிடுவது, எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை மற்றும் உங்கள் தன்னம்பிக்கையின் மொத்த மதிப்பைக் குறைக்கும்.
அதேசமயம், சுயமுன்னேற்றம் என்பது உங்களை நேசிப்பதன் ஒரு பகுதியாகும், அங்கு நீங்கள் கொழுப்பாக இருக்கிறீர்கள் என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் எதுவாக இருந்தாலும் உங்களை நீங்களே நேசிக்கிறீர்கள். மேலும் நீங்கள் உங்களை மிகவும் நேசிப்பதால், உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான அனைத்தையும் செய்கிறீர்கள், ஓடுவது மற்றும் சரியான வகையான உணவை சாப்பிடுவது உட்பட, யாரும் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி உண்மையில் கவலைப்படாமல்.
உங்கள் விதியை நீங்களே கையில் எடுத்துக் கொண்டதால், உங்கள் வாழ்க்கையில் உறவுகள், வேலைகள், உடல் பருமன், உடல்நலப் பிரச்சினைகள் என அனைத்திற்கும் பொறுப்பேற்க முடிவு செய்துள்ளீர்கள். விளைவு எதுவாக இருந்தாலும், நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று தீர்க்கமாக முடிவெடுத்துள்ளீர்கள்.
அது உங்களை நிச்சயம் நேர் வழியில் செலுத்தும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings