in ,

உண்ணா நோன்பு (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வானத்தில் இன்னும் கதிரவன் வரவில்லை .இன்னும் சிறிது நேரத்தில் செங்கதிர்களைப் பரப்பி உலகம் விழித்துக் கொள்ள ஓடோடி வருவான். என்றும்போல் அல்லாமல் இன்று ஏனோ ” மிதிலா ” விரைவிலே விழித்து விட்டாள். காலை வேளையில் முதல் முதலில் அவள் கண்ணில் பட்டது சோர்ந்து போயிருந்த அம்மாவின் முகம்தான்.

“என்ன ஆச்சு அம்மாவுக்கு? அத்தனை காலையில அழுதிருக்கிறாளா?” என்ற யோசனையுடன் அருகில் சென்று தொட்டாள் .

கண்களாலே என்ன ? என்ற வினாவினை எழுப்ப …அவள் அம்மா

“மிதிலா…கோயம்பத்தூர் கோபால் மாமா நேத்துப் பேசினார்…”

“எதுக்குமா? நான் தான் எனக்குக் கொஞ்சம் பிரேக் வேணும்ன்னு சொன்னேன் தானே”

“அதுக்கில்ல மிதிலா …மணமேடை வரை போய் உன் கல்யாணம் நின்னுப் போச்சே…அதான்”

“விடுமா … யாரோ? ஏதுவா? சொன்னாங்கன்னு கல்யாணத்த நிறுத்திட்டு போயிட்டாங்க …அதுக்கு நாம  என்ன பண்ண முடியும் ?எது எது நடக்கணுமோ அது அது தான் நடக்கும் …நான் என்ன உலக அழகியா ? மாப்பிளைங்க போட்டிப் போட்டு வாரத்துக்கு …என்ன கொஞ்சம் நிறம் குறைச்சல்…கண்ணு கொஞ்சம் சிறுசு …ஏறு நெத்தி …தேத்துப் பல் …”

“எல்லாம் ப்யூட்டி பார்லர் போனா பளிச்சுன்னு ஆயிடும் .பல்லு வாயெல்லாம் ஆபரேஷன் பண்ணிக்கலாம் .அதெல்லாம் கூட வேணாம் .கொஞ்சம் கவனமா அலங்காரம் மட்டும் பண்ணிகிட்டா போதுமே .சொன்னக் கேட்டாத்தானே?”

“அம்மா …அதுக்கெல்லாம் செலவு பண்ற நேரத்துல நான் என் பி.ஹெச்.டி முடிச்சிடுவேன்…?”

“ஆம்பளைத் துணையில்லாமா உன்னால வாழ முடியுமா?”

“ஆம்பளை …யாரு ஆம்பிளை? மீசை வச்சிக்கிட்டு ,கெத்தா,திமிரோட இருக்கிறதா ?சூதாடுறவன் ,புரளி பேசுறவன் ,குடிகாரன்,சந்தேகப்படுறவன்…இவங்கெல்லாம் ஆம்பளைங்களா ?”

“உன் கூடப் பேசி ஜெயிக்க முடியாது …ஒண்ணே ஒண்ணு சொல்றேன் கேக்குறியா?”

“சொல்லுமா …எனக்குக் கொஞ்சம் வெளியே வேலை இருக்கும்”

“பதினோரு வெள்ளிக்கிழமை உண்ணா நோன்பு  இருந்து அந்த முத்துமாரிக்கு விளக்கு போட்டா…நல்லதே நடக்கும்”

“சரி … உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்…நான் குளிச்சிட்டு வரேன் …டிபன் ரெடி பண்ணு …விரதம் எல்லாம் அடுத்த வாரம் பார்பபோம்”

குளித்து விட்டு வந்தவள் சாப்பிட்டு விட்டு … “டிபன் சூப்பர்” என்று சொல்லி அவள் அம்மாவின் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு விரைந்தாள்…

“எங்கடி…கிளம்பிட்ட?”

“ம்…திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சாப்பிட” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி போனாள் மிதிலா…தன் ஆராய்ச்சி ஆய்வகத்தை நோக்கி.

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அகத்தின் அழகு (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    அன்பின் வழியது (சிறுகதை) – பவானி உமாசங்கர்