in ,

தடாகத்தின் அழகு…! (சிறுகதை) – பிரபாகரன்.M

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஓர் அடர்ந்த காட்டின் மலையடிவாரத்தில் அழகிய தடாகம் ஒன்று இருந்தது. தடாகத்தில் ஏராளம் மீன்கள் இருந்தன. தாமரையும் அல்லியும் மண்டிக்கிடந்தன. தடாகத்தின் கரைகளில் விருட்சங்கள் ஓங்கி வளர்ந்;திருந்தன. தடாகத்தில் நிறைய அன்னப்பறவைகள் வசித்து வந்தன. அதில் ஒரு பெரிய தாமரைப்பூவும் இருந்தது. அது அந்தத் தடாகம் தாமரை மலர்களால்தான் அழகாக இருப்பதாக எண்ணியது. அது ஒருநாள் பெரிய அன்னத்திடம் பேச்சுக் கொடுத்தது. 

“இந்தத் தடாகத்துல வசிக்குற நீங்க எல்லாரும் எங்களுக்கு மரியாதை கொடுக்கனும்! ஏன்னா தடாகமே எங்களாலதான் அழகா இருக்கு!” – என்று செருக்குடன் பேசியது.

மதிப்பு மரியாதை என்பது தானாக வர வேண்டும் அதை மற்றவர்களிடம் கேட்டுப்பெற முடியாது. தாமரைகள் தன்னடக்கமானவை என்றுதான் அன்னம் இதுநாள் வரை எண்ணிக் கொண்டிருந்தது. அது பூவின் கருத்தை மறுக்கும் விதமாகப் பேசியது.

“சுத்தி இருக்குற மரங்கள்ல்ல இருந்து நிறைய வண்ணமலர்கள் தண்ணீர்ல விழுதே? அது தடாகத்தோட அழகைக் கூட்டலையா? வெள்ளிச்செதில் மீன்கள் கூட்டம்கூட்டமா அலையுதே? அது தடாகத்துக்கு அழகு சேர்க்கலையா? இதுல நீந்துற எங்களை மாதிரி அன்னப்பறவைகள் இந்த தடாகத்தக்கு அழகு தர்றதில்லையா?” – என்று கேட்டது.

“மரங்கள்ல்ல இருந்து உதிர்ற பூக்கள் சீக்கிரம் மக்கிப் போயிரும்! மீன்களால எல்லா நேரமும் தண்ணீருக்கு வெளியே அலைஞ்சுகிட்டு இருக்க முடியாது! இந்தத் தடாகம் நீர் வத்திப் போச்சுனா பறவைகள் நீங்க எல்லாம்; வேற்றிடம் தேடிப் போயிருவீங்க! ஆனா நாங்க இந்தத் தடாகத்தை விட்டு எப்போதும் நீங்க மாட்டோம்;!” – என்றது தாமரை. 

“இந்த மலையடிவாரத்துல இருந்து வீழுற அருவினாலதான் இந்தத் தடாகமே உருவாகி இருக்கு! அதுல இருந்து தினமும் வர்ற புது தண்ணீர்தான் தடாகத்தோட பல்லுயிர் பெருக்கத்துக்கும் அடிப்படையா இருக்கு! ஆனா அருவியோ அந்த அருவிய உற்பத்தி செய்யுற இந்த மலையோ தடாகத்தோட அழகுக்கு நாங்கதான் காரணம்னு சொந்தம் கொண்டாடுறதுல்ல! இந்த மலையும் அருவியும் இல்லைனா தடாகமே இல்லை! – என்றது அன்னம்;

அன்னத்தின் இந்த வார்த்தைகள் தாமரையின் மனதைத் தைத்திருக்க வேண்டும். இந்தத் தடாகத்தின் அழகு இயற்கையின் பேரெழில் இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை அது புரிந்து கொண்டது. “தற்பெருமையா நான் நடந்துக்கிட்டது தவறுதான்! என்னை மன்னிச்சிரு அன்னமே!” – என்றது தாமரை;

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 5) – பாலாஜி ராம்

    முதலில் நாம் திருந்துவோம் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்