சிற்றினம் சேராமை என்பது சிறிய இனத்தைக் குறிப்பதை விட அவர் சொல்லும் மொழியிலே தாழ்ந்த குணங்களைக் கொண்ட சிறிய குழுவினருடன் இணையும் ஒரு மாண்புடைய மனிதன் பன்றியோடு சேர்ந்த கன்றுக்கே ஒப்பாவான் என்பதை வள்ளுவர் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்.
மாந்தர்கள் எப்போதுமே உயரிய கொள்கைகளோடும் உயிரிய கலாச்சாரங்களோடு வாழ வேண்டும் என்பதே வள்ளுவரின் மிகப்பெரிய நோக்கமாக இருந்திருக்கிறது.வள்ளுவனார் சிறிய அல்லது தாழ்ந்த குணம் கொண்ட கெட்ட குணமுடைய மாந்தரோடு இணைவது எவ்வளவு மோசமான செயல்………
அது எவ்வாறு, ஒரு மனிதனை தரைமட்டத்திற்கு இழுத்துச் செல்கிறது. அவனுடைய வாழ்க்கை பாதையை எவ்வளவு மோசமாக…. தரம் கெட்டதாக மாற்றி அமைக்கிறது என்பதை தன்னுடைய இந்த பத்து குறள்களிலும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.
வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான் புகழ் கொண்ட இந்த தமிழ்நாட்டிலே அந்த திருக்குறளின் வடிவத்தில் அவர் குறிப்பிடுகின்ற சிற்றினம் சேராமை என்னும் இந்த அதிகாரத்திலே தாழ்ந்த மக்களோடு (தாழ்ந்த மக்கள் என்றால் தரம் கெட்ட குணத்தோடு இருக்கின்ற மக்களோடு ) மனிதர்கள் எப்பொழுதுமே இணையக் கூடாது என்பதே அவர் இந்த காப்பியத்தில் அழகாக பத்து குறள்களிலும் மிக வடிவமாக குறிப்பிடுகிறார்.
வள்ளுவர் 1330 குறளிலும் பல கருத்துக்களை மிக அழகாக குறிப்பிட்ட போதிலும் இந்த சிறி சேராமை என்ற அதிகாரத்தில் மனிதநேயம் எவ்வாறு வாழ வேண்டும் என்றும், எத்தகைய குணங்களோடு இருக்க வேண்டும் என்றும்,
எத்தகைய குணங்களோடு இருப்பவரோடு சேர வேண்டும் என்பதை மிகவும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடுகிறார்.
உலகப் பொதுமறையாம் திருவள்ளுவரின் திருக்குறளில் சிற்றினம் சேராமை அதிகாரத்தில் வள்ளுவர் இவ்வுலகில் மனித குலத்தில் மாண்புகளை எவ்வாறு எடுத்துரைக்கிறார் என்பது இந்த கட்டுரையின் நோக்கம்
முன்னுரை :
இந்த சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்திலே வள்ளுவர் சேற்றோடு சேர்ந்து மழை நீரும் சேறாகி விடுவது போல மேன்மக்கள் தாழ்ந்த குணத்தாரோடு சேரும்போது, அவர்களும் தங்களுடைய நல்ல குணங்களை இழந்து விடுகிறார்கள் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக இந்த பத்து குறள்களிலும் எடுத்துக்காட்டுகிறார்.
தாழ்ந்த குணங்களைக் கொண்டவரோடும் தாழ்ந்த எண்ணங்களைக் கொண்டவரோடும் இணைய ……
இணைந்து சேர்ந்து போக வேண்டாம் என்பது திருவள்ளுவரின் மிக மேன்மையான கருத்தாக மாறுகிறது.
குறள் 451:
சினத்தினால் வரும் பேரழிவு
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
சினம் என்னும் குணத்தை வாழ்க்கையில் பெரிய மேன்மையான மக்கள் ஒதுக்கி வைப்பர். ஆனால் தாழ்வான குணம் கொண்ட மக்களோ சினத்தையே சிரத்தில் தூக்கி நிற்பார்.
ஆனால் சினத்தினால் வரும் பேரழிவை உணராமல் சிற்றினம் கொண்ட தாழ்மையான மக்கள் காலங்காலமாக இழி நிலையில் வாழ்வதையே வள்ளுவரின் சிற்றினம் சேராமை தன்னுடைய முதல் குறளிலேயே ஏழு சொற்களிலே எவ்வாறு மக்கள் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் சிற்றினம் சேராமை குணம் உள்ளவர்களாக மேன்மையான மக்கள் கெட்ட குணமுடையோருடன் சேராமல் இருப்பார்கள் என்றும், தாழ்மை குணம் உள்ள மக்களோ அவருடைய குண நலமுள்ளவர்களோடே நட்புக் கொள்வார்கள் என்றே அழகாக குறிப்பிடுகிறார்.
இதையே மு.வ, அவர்கள் ”பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்,” என்கிறார்.
பெரியோர் சிற்றினத்தாரோடு சேர அஞ்சி விலகுவர்; சிறுமைக்குணம் கொண்டோர் சிறியோர் கூட்டத்தைச் சுற்றமாக எண்ணிச் சூழ்ந்து கொள்வர் என்பது இக்குறட்கருத்து
குறள் 452:
நீரின் இயல்பு
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு
படிகத் தெளிவான வானிலிருந்து விழும் மழை, வானில் இருந்து இறங்கி பூமிக்கு வரும் போது, அழகாகத்தான் வந்து இறங்குகிறது. ஆனால், அது கலக்கும் சேறானது அதன் குணத்தையே மாற்றிவிடும் . அதுபோல எவ்வளவோ மேல் குணம் உள்ளவர்கள், தாழ்ந்த குணம் உள்ள மக்களோடு இணையும் போது…. நட்பு கொள்ளும் போது அவர்களிடையே தன் நிலை மறந்து அவர்களும் தாழ் நிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையே வெளிப்படுத்தி காட்டுகிறார்.
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும் என சாலமன் பாப்பையா தன் உரையில் குறிப்பிடுகிறார்.
குறள் 453:
உலகத்தாரால் அடையாளப்படுத்தப்படுதல்
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்…
வையக மாந்தர் மனதிலும் எண்ணங்களில் நாளும் எழிலாலுமே அவருடைய குணத்தை வளர்த்துக் கொள்ள முடியும்.ஆனால் அவருடைய அடையாளமோ அவர் எந்த இனத்திலிருந்து வந்தார் என்பதை பொறுத்து அது உலகத்தாரால் அடையாளப்படுத்தப்படும் என வள்ளுவன் தன்னுடைய மூன்றாவது குறளில் அருமையாக சுட்டிக்காட்டுகிறார்.
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும் என கலைஞர் குறிப்பிடுகின்றார்.
குறள் 454:
இனத்தின் ஆற்றலே
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு
ஒருவருடைய மனதில் உள்ள அறிவு அளவு அறிவாளி போல வெளிப்படும். அவருடைய வெளிப்படுத்தும் ஆற்றலானது அவருடைய சொந்த ஆற்றலாக தோன்றினாலும் அவர் சேர்ந்து இருக்கும் இனத்தின் ஆற்றலிலே அது வெளிப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறார்
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும் என் பரிமேலழகர் தெரியப்படுத்துகிறார்.
குறள் 455:
மனத்தூய்மை:
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
ஒருவரின் மனசு கட்டுப்பாடு, அவனுடைய செயல்படும் அன்றாடச் செயல்கள் தூய்மை எல்லாமே ஒருவருக்கு அவருடைய தூய்மையாக தோன்றினாலும் அது அவன் சார்ந்த இனத்தின் மூலமே உருவாகிறதென தெளிவுபடுத்துகிறார்.
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்பபடும் என்கிறார் மு.வ..
குறள் 455:
மனத்தூய்மை:
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
ஒருவரின் மனசு கட்டுப்பாடு, அவனுடைய செயல்படும் அன்றாடச் செயல்கள் தூய்மை எல்லாமே ஒருவருக்கு அவருடைய தூய்மையாக தோன்றினாலும் அது அவன் சார்ந்த இனத்தின் மூலமே உருவாகிறதென தெளிவுபடுத்துகிறார்.
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்பபடும் என்கிறார் மு.வ..
குறள் 456:
செய்த நற்செயல்கள்:
மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை
குறள் 457:
மனத்தின் இயல்பு
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்.
மனத்தின் இயற்பில் நற்குணம் கொண்டோர்கள் வாழ்வில் சான்றோர்களாக இருந்தாலும் அவர்கள் சார்ந்த இனமே அவர்களை இன்னும் மேன்மக்களாக காண்பிக்கும்.
மனத்துயர் மாண்பு எனும் வரிகளிலே எத்தனை தான் மாந்தர்கள் தங்களுடைய சுய முன்னேற்றத்திலும் பிறர் நலத்திலும் ஈடுகொண்டாலும் எண்ணத்திலும் எழுத்திலும் செயலிலும் அவர்கள் சான்றோர்களாக திகழ்ந்தாலும் அவர்கள் சார்ந்த இனமே அவர்களை இன்னும் மேன்மையான மக்களாக உலகின் மனிதர்களின் மாமனிதர்களாக எடுத்துப் பேசும்.
இதை, சாலமன் பாப்பையா விளக்க உரையில்
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும் எனக் கூறுகின்றார்.
குறள் 458:
அதிக காவல்:
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து
மனத்தின் நன்குணம் கொண்டோர்களாக – சான்றோர்களாக இருந்தாலும், அவர்கள் மனதின் நன்மையை உறுதியாகக் கொண்டிருந்தாலும் அவர்கள் சார்ந்த இனமே அவர்களுக்கு இன்னும் அதிக காவலாக அமையும் என்று வள்ளுவன் குறிப்பிடுகிறார்.
இதையே, மு.வ. அவர்கள்., மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும் என்கிறார்.
குறள் 459:
மறுமையில் உதவி:
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து
ஒருவருக்கு மனத்தினால் எழும் நல்ல எண்ணங்களும் பிறர் நலத்தில் ஆர்வங்களும் அவர் செய்யும் நற்செயல்களும் மறுமையை பெற்றுத்தரும். இருப்பினும் அவர்கள் சார்ந்த இனம் இன்னும் அவர்களுக்கு மறுமையில் உதவியைப் பெற்றுத் தருவதோடு மாட்சியை வரவழைக்கும் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார் என்பது மனத்தின் கண் மாசிலன் ஆதல் என்பது மனதில் எழும் உயர்ந்த எண்ணங்களும் ஆற்றல் மிகு செயல்களுமே அந்த தனி மனிதருக்கு மறுமையில் வீடு பேற்றைப் பெற்றுத் தரும் என்றும் அவர் சேர்ந்த இனத்தின் மூலம் இன்னும் மறுமையில் அவர் மாட்சியோடு வழங்குவார் என்றும் வள்ளுவன் குறிப்பிடுகிறார்.
குறள் 460:
துணை:
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்
ஒருவருக்கு நல்ல இனம் தான் துணையாக இருக்கும்என்றும், தீய இனத்தோடு சேர்வதைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை. அவர்கள் சார்ந்த இனமே அவர்களை இன்னும் மேன்மையான மக்களாக உலகின் மனிதர்களின் மாமனிதர்களாக எடுத்துப் பேசும்.
கெட்ட இனமோ அவர்களுக்கு அதிகத் துன்பத்தை தருவதோடு
அவர்களை இழி நிலைக்கே எடுத்துச்செல்லும் என்று வள்ளுவன் குறிப்பிடுகிறார்.
இதையே கலைஞர், நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை என்கிறார்.
முடிவுரை:
மனதின் தூய்மையை பொறுத்தே மாந்தரின் வாழ்க்கையும் அமையும் என்றும் தாழ்ந்த குணங்களுடைய மக்களோடு சேர்ந்து நம்மையும் தாழ்த்திக் கொள்ளாமல் உயர்ந்த குலத்தோடு உள்ள மக்களோடு இணைந்து வாழ வேண்டும் என்றும் அவ்வாறு வாழும் போது தான் மனித குலம் மேம்படையும் என்றும் இல்லையெனில் மழை நீர் ஆனது சேற்றிலே கலந்து உடன் அதன் குணமே மாறிவிடுவது போல நல் மாந்தரின் குணங்களும் தாழ்ந்த குணத்தை உடைய மக்களோடு சேரும்போது தரம் கெட்டுப் போகிறது என்பதே திருவள்ளுவர் இந்த பத்து அழகிய குறள் பாக்களிலும் மிகத் தெளிவாக நமக்கு குறிப்பிட்டுள்ளார்.
மண்ணில் பிறக்க மாதவம் செய்த மாந்தராகிய நாமும் நற்குணங்களைக் கொண்டு மழை நீராக உயர்ந்த குணத்தோடு வாழ்ந்து, நல்ல நிலத்திலே விழும் நல்ல மழை துளியாக இவ்வுலக உயிருகளுக்கு உதவிடும் உயர்குணம் உள்ள மாந்தராக வாழ்ந்து, வாழ்க்கையை வளத்துடன் வழிநடத்தி இவ்வாறு ஒரு மனிதன் இவ்வுலகில் வாழ்ந்தால் என்று வரலாறு சொல்லும் படி நாம் இவ் வாழ்க்கையில் இருந்து விடைபெற வேண்டும் என்று வள்ளுவன் நமக்கு மிக அழகாக வழிகாட்டுகிறார்
சிறு குணம் கொண்டவர்களோடு சேராமல் இருப்பதையும் அதன் சேர்ந்தால் அதன் விளைவுகளையும் மிக அழகாக எடுத்துக்காட்டும் வள்ளுவர் தன்னுடைய 46 ஆம் அதிகாரத்தில் மழை நீரானது எவ்வளவு அழகான வெள்ளி கம்பியாக பூமியிலே விழுந்து அது சேரும் இடத்திலே சேரா இருந்தால் சேரோடு இணைந்து அதன் தன்மையை இழந்து விடுகிறது என்பதையும் மாந்தர்தம் நற்குணங்களும் சிறு குனங்குழு தாழ்ந்த குணங்களை உள்ள மனிதரோடு சேரும்போது அவ்வாறு மாறி போகிறது என்பதையும் மிகத் தெள்ளத் தெளிவாக தெய்வப்புலவர் இந்த பத்து குரல்களிலும் நமக்கு அழகாக எடுத்துக்காட்டுகிறார்
பொதுமறையாம் திருவள்ளுவரின் திருக்குறளில் சிற்றினம் சேராமை அதிகாரத்தில், வள்ளுவர், இவ்வுலகில் சிற்றினம் சேராமையால் மனித குலத்திலன் மாண்புகள் எவ்வளவு உயர்ந்ததே என்றே எடுத்துரைக்கிறார்.
@@@@@@@@@@@@
சிற்றினம் சேராமை!
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings