in ,

போராடு … வாழ்வதற்கு (சிறுகதை) – வீ .சிவா

`2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இன்னும் பேருந்து  வர ஒரு மணி நேரம் இருந்தது! விடியப் போகும் நேரம்! ரோடின் குறுக்கே நின்று எதிரில் வந்த லாரியை நிறுத்தினான் மது.  கூடவே மலர்!

தீடீரென்று ‘பிரேக்’ அடித்து லாரியை நிறுத்திய டிரைவர், என்ன ‘லவ்’வா …? ஊரைவிட்டு மெட்ராஸ் ஓடுறீங்களா…? என்றார்.

“ம்…” என்று தலை அசைத்தனர் இருவரும்!

“ஏறிக்குங்க…”

இருவர் முகத்திலும் சந்தோசம்! ஏறிக்கொண்டனர் .

அப்பா ஒரு வழியா எறியாச்சு….ஆக இனி அப்பாவால எதுவும் செய்ய முடியாது…கண்காணாத இடத்தில நிம்மதியா வாழலாம் என்ற நினைப்போடு உட்கார்ந்திருந்தான் ,மது.

எப்படி வாழப் போகிறோம்? என்ற நினைப்பு இருந்தாலும், மலருடன்  வாழப்போகின்றோம் என்று நினைக்கும் போது, ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது மதுவுக்கு!

டிரைவர் சீட்டிற்கு எதிரே முருகன் யாம் இருக்க பயம் ஏன்? என்றபடி ஆறுதலோடு அவர்களைப் பார்த்தார். மலருக்கு எங்கோ பொறி தட்டியது!

“நா இருக்கிறப்போ … நீ ஏம்மா கவலைப்படறே …காலம் பூரா உன்னை வெச்சி நா…கஞ்சி உத்தறேம்மான்னு காலையிலே நோயாளி அம்மாகிட்டே சொல்லிக்கிட்டு இருந்திட்டு… மறுகாலை வர்றதுக்குள்றே யாருமில்லாத நோயாளி அம்மாவை தனியா விட்டுவிட்டு மது கூட ஓடிப்போனா…அம்மாவை யார் காப்பாத்துவாங்க …?

“அண்ணே.. கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க…இறங்கிக்கிறோம் …” கெஞ்சலாக கேட்டாள் மலர்.

எதுவும் புரியாதவளாக டிரைவர் வண்டியை நிறுத்த, “இறங்குக…” என்றவாறு கீழே இறங்கினாள் மலர்.

என்ன ஆச்சு இவளுக்கு? என்று நினைத்தாலும் எதுவும் கேட்காமல் மதுவும் கீழே இறங்கினான். அவர்களை விசித்தரமாகப் பார்த்துக்கொண்டே புறப்பட்டுப் போனார் டிரைவர்.

“நா இருக்கிறப்போ பயம் ஏன் ‘னு நீங்க என்கிட்டே சொன்னீங்க …அதையே காலைலே நா என்னோட அம்மாகிட்ட சொன்னேன்…இப்போ நா இல்லம்மா போனா எப்படி…?” என்றாள் கலங்கிய கண்களுடன். மௌனமாக நின்றான் மது!

“நா பின்வாங்கறதா நினைக்காதீங்க …முன்னால வைக்கிறேன்..காலை…!  எதிர்கால வாழ்க்கையை நோக்கி …! போராடுவோம்…உங்க அப்பா கூட …அவங்க சம்மதத்தோட நம்ம வாழ்க்கையை துவங்குவோம்…முடியும்… எதுவுமே” அணித்தரமாகச் சொன்னாள் மலர்!

மதுவுக்கும் நம்பிக்கை வந்தது! ஊரை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்! பொழுது விடியத் தொடங்கி இருந்தது !

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சர்க்கரைப் பொங்கல் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    கால மாற்றம் (சிறுகதை) – ராஜேஸ்வரி