in ,

பிடிவாதம் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஏண்டா ராஜா?  இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாய், நான் எப்படி உன்னைய கூட்டிட்டு போக முடியும். உங்க அப்பா வந்துட்டு உன்னை அழைச்சிட்டு போக சொல்றேன் என்றாள்  தாய் கவிதா.

முடியாது, என்னை இப்பயே கூட்டிட்டு போகணும் என வீட்டின் பட்டா சாலையில் அழுக புரண்டு கொண்டிருந்தான் ஐந்து வயது மகன் ராஜா.

அலுவலகத்தில் இருந்து அப்போது தான் வீட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார் ராஜாவின் அப்பா ஆனந்த். மகன் அழுவதை பார்த்து எதற்கு அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டதற்கு இப்போது என்னை ரயிலில் கூட்டிட்டு போ என மீண்டும் கூப்பாடு போட்டான்.

ஒரு அஞ்சு நிமிஷம் இருடா,  நான் வேற ட்ரெஸ்ஸ மாட்டிக் கொண்டு காபி குடித்துக் கொண்டு வருகிறேன் என்று சொன்னதற்கு முடியாது உடனே போக வேண்டும் என்றான் ராஜா.

இப்போதைக்கு ரயில்  இல்லடா, இன்னும் அரை மணி நேரம் கழித்து தான் ரயில் வரும் என்று அப்பா சொன்னதற்கு நீங்க பொய் சொல்றீங்க,  நீங்க ஏமாத்துறீங்க கூட்டிட்டு போங்க என மீண்டும் அழுதான்.

அவன் அழுதால் அழுகட்டும், நீங்க கை கால்கள் முகம் அலம்பிண்டு வாங்க காபி குடிச்சிட்டு கிளம்புனீங்கன்னா சரியாக இருக்கும் என்று தாய் சொல்ல ராஜாவுக்கு ஆத்திரம் வந்து கீழே கிடந்த அவன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு விளையாட்டு சாமானை எடுத்து அம்மாவின் மேல் வீசினான். 

அம்மாவின் புருவத்தில் பட்டு லேசாக வெட்டுப்பட்டு ரத்தம் எட்டிப் பார்த்தது. உடை மாற்றிக் கொண்டிருந்த அப்பா பிரம்பு குச்சியை எடுத்து மகன் ராஜாவை இரண்டு அடி போட்டார். அடி வாங்கிய ராஜா அழுது கொண்டே படுத்து உறங்கி விட்டான்.

டாக்டரிடம் போய் ஒரு ஊசி போட்டு வந்து விடலாம் வா என்று மனைவியை அழைத்தார் கணவர். என்னங்க, சின்ன வெட்டு காயம் தானே,  சரியாக போய்விடும் என்றாள் மனைவி.

ராஜா ரொம்ப பிடிவாதமாக இருக்கின்றான். இது எதில் போய் முடியுமோ தெரியவில்லை எனக்கு பயமாக இருக்கிறது என்றாள் மனைவி.

சின்ன குழந்தை தானே கொஞ்சம் பெரிய பிள்ளையாக ஆகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

நீங்கள் தான் அவனுக்கு முதலில் பழக்கப்படுத்தினீர்கள். பாலக்கரை ரயில்வே ஜங்ஷனிலேயே ஏறிக்கொண்டு பொன்மலை ஜங்ஷன் வரையிலும் போய் பழக்கப்படுத்தியது நீங்கள் தானே. 

சிறுவயதில் நீங்கள் பொழுது போக்கிற்காக செய்தது இப்போது அதுவே பிடிவாதமாக மாறிவிட்டது என்றாள் மனைவி. 

ஆண் பிள்ளைகளை அடிச்சு வளர்த்தா தான் அவர்கள் உருப்படியாக வருவார்கள் என்று என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார்கள் என்றார் கணவர்.

இருந்தாலும் பாவம் நம்ம புள்ள, பாக்கவே பரிதாபமாக இருக்கு என்றாள் தாய். 

நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, நாளை காலை ரயிலில் கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன்.

இரவு ராஜா சாப்பிடாமலேயே உறங்கி விட்டான். எழுந்தாலும் சாப்பிட மாட்டான் என்பதால் அவனை எழுப்பி விடவில்லை தாய். 

கணவன் மனைவி இருவரும் இரவு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். 

கணவர் தனது அலுவலக வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். இடையில் கண் விழித்த ராஜா அம்மாவின் அருகே சென்று அம்மாவின் புருவத்தில் அடிபட்ட இடத்தை மெதுவாக தடவிக் கொண்டே முத்தம் கொடுத்தான் அந்த பாலகன். 

இதை கவனித்துக் கொண்டிருந்த அப்பா தன்னுடைய மகனை வாரி அனைத்து கொண்டு முத்தம் மழை பொழிந்து நாளை காலையில் உன்னை ரயிலில் அழைத்துப் போகிறேன். சமத்தா நடந்துக்கணும்,  பிடிவாதம் பண்ணக்கூடாது. ஓ..கே..வா  இப்ப நான் உனக்கு பால் ஆற்றி கொடுக்கிறேன். அத குடிச்சிட்டு அப்படியே அம்மாவின் பக்கத்திலேயே படுத்து தூங்கணும் என்று அப்பா சொல்ல சரிப்பா,  இனிமே நான் சொன்னபடி கேட்பேன் என்று மகன் சொன்னதை கேட்ட அப்பா மகிழ்ச்சி அடைந்தார். 

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கல்யாணம் வேண்டாம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    மறுபக்கத்தையும் பார்க்கலாமே (சிறுகதை) – மைதிலி ராமையா