in ,

ஒரு காதல் கதை (பகுதி 2) – ராஜா ஹரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

யாரும் அவர்களை எங்குமே சேர்ந்து பார்க்கமுடியாதபடி பரமரகசியமாய் தங்களது காதலை வளர்த்துக்கொண்டிருந்தார்கள். நான் ஜுலியக்கா வீட்டிற்கு செல்வது அவனுக்கு தெரியும் இருந்தாலும் இதுபற்றி அவளிடம் எதுவும் பேசக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டான் .

“எல ஜுலி வீட்ல வச்சு கோட்டிக்காரத்தனமா எதாவது ஒளரி வச்சிராதல .”

நள்ளிரவு தாண்டியும் தனது 1100 வில் கிசுகிசுவென்று சிரித்துப்பேசிக்கொண்டிருப்பான் . காதல் கொண்டவர்கள் சில சமயம் ஊடலும் கொண்டார்கள் . சண்டையிட்ட தினங்களில் பித்துபிடித்தவன் போல நடந்து கொள்வான் . சரியாக சாப்பிட மாட்டான் . பின் கடும்மழைக்கு பின் அடிக்கும் வெயில் போல துலக்கமான முகத்துடன்

“எல ஒரு வழியா சமாதானபடித்திடம்ல .. கோட்டிக்காரி” என்று அவனே சிரித்துக் கொள்வான் .

படித்து முடித்தவுடன் மதுரை டிவிஎஸ்ஸில் வேலை கிடைத்தவுடன் வேலைக்கு சென்று விட்டான் . இந்த தேவதையை எப்படி பிரிந்து சென்றான் . என்று ஆச்சர்யமாக இருந்தது.

பழங்காநத்தத்தில் பஸ் ஸ்டான்டுக்கு பக்கத்துலேயே ஒரு ஒற்றை அறையில் எங்க ஊரு ஜோசியகாரர் ஒருவருடன் அறையை பகிர்ந்து கொண்டான் “எல்லாஞ்சேத்து பத்தாயிரம் வரும்ல கொஞ்ச நாள்ல எப்படியும் அவ வீட்ல சம்மதிக்க மாட்டானோல் ., மதுரைக்கு கூட்டிட்டு வந்துரனும்ல” என்று எதிர்காலம் பற்றிய உற்சாகத்துடன் ஒரு முறை தொலைபேசினான் .

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது மூன்று மாதங்கழித்து திடிரென ஒரு நாள் கூப்பிட்டான் “என்னல சொல்லு” என்றதற்கு எதுவும் போசாமல் விசித்து அழ ஆரம்பித்து விட்டான் .

ஆம் அவளுக்கு கல்யாணமாம் . என்னை மறந்துவிடு இனிமேல் போன் பண்ணாதே என்று சொல்லி விட்டாளாம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை மௌனமாய் காத்திருந்தேன் பொண்ணு ஓடிவர தயாராக இருந்தாலாவது யோசிக்கலாம் இது ஹோப்லெஸ் கேஸ் .

பிறகு அண்ணனின் வருகை குறைந்து போனது அவன் முகத்துக்கு கேவலமாக இருந்தாலும் தாடி வளர்த்திருந்தான் பிறிதொரு நாள் அவன் அறை ஜோசியக்காரர் இவன் குடித்துவிட்டு செய்யும் அலப்பறை தாங்காமல் அறையை காலி செய்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன் .

அதன் பிறகு அண்ணனின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று. ஒழுங்காக வேலைக்கு வரவில்லை என்றும் எல்லோரிடமும் சண்டை போடுகிறான் என்றும் புகார் வந்தது கொஞ்ச நாளில் மேலதிகாரியை அடித்து விட்டான் என்று வேலையை விட்டு நிறுத்தி விட்டார்கள் பின் நிரந்தரமாக வீட்டிற்கு வந்து விட்டான் .

வழக்கமான காதல் தோல்வியில் எல்லாரும் செய்வது தான் சிறிது நாளில் சரியாகிவிடுவான் என்று நம்பினோம் ஆனால் அவன் இன்னும் மோசமானான் இதனுடன் வலிப்பும் வர ஆரம்பித்து காலையில் அப்பாவை கோட்காமல் அவர் சட்டையில் இருந்து பத்து ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு சிகரெட் ஊத சென்றுவிடுவான்

திடிரென வலிப்பு வந்து ரோட்டில் விழுந்து கிடக்கிரானென்று செய்தி வரும் நானும் அப்பாவும் ஒடிச்சென்று அள்ளிப்போட்டுக்கொண்டு வீடு வருவோம் ,அதன்பின் அவனுக்கு செய்த வைத்தியங்கள் எல்லாம் பயனற்று போயின வீட்டிலும் அவனது மூர்க்கத்தனம் அளவுக்கு கடந்து செல்ல அம்மாவை ஒரு தடவை அடித்து ரத்தம் வர அடித்து விட சங்கிலியால் பிணைக்கப்பட்டான் .

“என்ன விட்டுட்டு போய்டியேடி செரிக்கியுள்ள “என்று ஜுலி அக்காவை அவ்வப்போது ஏசுவான் எனக்கு அவள் மேல் கோபம் வந்தாலும் ஒருவனை பைத்தியம் பிடிக்க வைக்கும் அழகுடன் தான் ஜொலித்தாள் ஜுலியக்கா

எனக்கு அவளிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன ஏன் என்ன அண்ணனை காதலித்தாய் ?ஏன் விட்டு விட்டு சென்றாய் ? உன்னை உருகி உருகி காதலித்து விட்டு இன்று பைத்தியமாகி சாகக்கிடகின்றானே அவனுக்கு உன் உன் பதில் என்ன காதலிக்கும் போது தகுதி தெரியவில்லையா ஜாதி மதம் தெரியவில்லையா ? மனதிற்குள் ஒரே நேரத்தில் எல்லா கேள்விகளும் அலையாய் மோதின .

ஊரில் இருக்கும் எல்லோரையும் பற்றியும் விசாரித்தாள் அம்மா அப்பா என்னை பற்றி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள் அண்ணனைப்பற்றி ம்கூம் மூச்சு எப்படி ஒரு பெண்ணால் இவ்வளவு இயல்பாக உரையாட முடிகிறது ?இதற்கு மேல் பொறுக்க முடியாது

அக்கா சரவணன் ….

யாரு சரவணன் ??

யாரா எங்க அண்ணா சரவணன் கா!

ஆமா உனக்கு ஒரு அண்ணன் இருக்கான்னு சொல்லிருக்கேள்ள சொல்லுடா என்ன பண்றாறு ஆர்வமாய் ஜுலியக்க கேட்டாள்…

செல்போன் ஒலித்தது ….

ஹலோ சொல்லுங்க சிஸ்டர் ..

சார் கொஞ்சம் சீக்கிரம் வாங்க இங்க உங்க அண்ணனுக்கு மூனு மணிக்கு சி.எம் ஒட அப்பாய்ண்மெண்ட் இருக்கு கெளம்பனுன்னு சொல்லி கலாட்டா பண்றாறு …

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அறை எண் 56ல் அமுதா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    காதலை வீட்டில் எப்படி சொல்வது (சிறுகதை) – ரேவதி பாலாஜி